அல் அலக்
கருவுற்ற சினை முட்டை • 19 வசனங்கள்
اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ
﴾ 96:1 ﴿
﴾96:1﴿
1. (முஹம்மதே!) படைத்த உமது இறைவனின் பெயரால் ஓதுவீராக!281
خَلَقَ الْإِنسَانَ مِنْ عَلَقٍ
﴾ 96:2 ﴿
﴾96:2﴿
2. அவன் மனிதனை கருவுற்ற சினை முட்டையிலிருந்து365&506 படைத்தான்.368
اقْرَأْ وَرَبُّكَ الْأَكْرَمُ
﴾ 96:3 ﴿
﴾96:3﴿
3. ஓதுவீராக! உமது இறைவன் கண்ணியமானவன்.
الَّذِي عَلَّمَ بِالْقَلَمِ
﴾ 96:4 ﴿
﴾96:4﴿
4. அவனே எழுதுகோலால் கற்றுத் தந்தான்.
عَلَّمَ الْإِنسَانَ مَا لَمْ يَعْلَمْ
﴾ 96:5 ﴿
﴾96:5﴿
5. அறியாதவற்றை மனிதனுக்குக் கற்றுத் தந்தான்.
كَلَّا إِنَّ الْإِنسَانَ لَيَطْغَىٰ أَن رَّآهُ اسْتَغْنَىٰ
﴾ 96:6,7 ﴿
﴾96:6,7﴿
6, 7. அவ்வாறில்லை! தன்னைத் தேவைகளற்றவன் எனக் கருதியதால் மனிதன் வரம்பு மீறுகிறான்.26
إِنَّ إِلَىٰ رَبِّكَ الرُّجْعَىٰ
﴾ 96:8 ﴿
﴾96:8﴿
8. உமது இறைவனிடமே திரும்பிச் செல்லுதல் உண்டு.
أَرَأَيْتَ الَّذِي يَنْهَىٰ عَبْدًا إِذَا صَلَّىٰ
﴾ 96:9,10 ﴿
﴾96:9,10﴿
9, 10. தொழும் அடியாரைத் தடுப்பவனைப் பார்க்கவில்லையா?26&32
أَرَأَيْتَ إِن كَانَ عَلَى الْهُدَىٰ أَوْ أَمَرَ بِالتَّقْوَىٰ أَرَأَيْتَ إِن كَذَّبَ وَتَوَلَّىٰ
﴾ 96:11,12,13 ﴿
﴾96:11,12,13﴿
11, 12, 13. அவர் நேர்வழியில் இருப்பதையும், அல்லது இறையச்சத்தை ஏவுவதையும் அவன் பொய்யெனக் கருதி அலட்சியம் செய்வதை நீர் கவனித்தீரா?26
أَلَمْ يَعْلَم بِأَنَّ اللَّهَ يَرَىٰ
﴾ 96:14 ﴿
﴾96:14﴿
14. அல்லாஹ் பார்க்கிறான் என்பதை அவன் அறியவில்லையா?
كَلَّا لَئِن لَّمْ يَنتَهِ لَنَسْفَعًا بِالنَّاصِيَةِ
﴾ 96:15 ﴿
﴾96:15﴿
15. அவ்வாறில்லை! அவன் விலகாவிட்டால் முன் நெற்றியைப் பிடிப்போம்.
نَاصِيَةٍ كَاذِبَةٍ خَاطِئَةٍ
﴾ 96:16 ﴿
﴾96:16﴿
16. அது குற்றமிழைத்த, பொய் கூறிய முன் நெற்றி.426
فَلْيَدْعُ نَادِيَهُ
﴾ 96:17 ﴿
﴾96:17﴿
17. அவன் தனது சபையோரை அழைக்கட்டும்.
سَنَدْعُ الزَّبَانِيَةَ
﴾ 96:18 ﴿
﴾96:18﴿
18. நாம் நரகின் காவலர்களை அழைப்போம்.
كَلَّا لَا تُطِعْهُ وَاسْجُدْ وَاقْتَرِب ۩
﴾ 96:19 ﴿
﴾96:19﴿
19. எனவே, அவனுக்குக் கட்டுப்படாதீர்! ஸஜ்தாச் செய்வீராக!396 நெருங்குவீராக!