அல்லைல்
இரவு • 21 வசனங்கள்
وَاللَّيْلِ إِذَا يَغْشَىٰ
﴾ 92:1 ﴿
﴾92:1﴿
1. மூடிக் கொள்ளும் இரவின் மீது சத்தியமாக!379
وَالنَّهَارِ إِذَا تَجَلَّىٰ
﴾ 92:2 ﴿
﴾92:2﴿
2. பிரகாசிக்கும் பகல் மீது சத்தியமாக!379
وَمَا خَلَقَ الذَّكَرَ وَالْأُنثَىٰ
﴾ 92:3 ﴿
﴾92:3﴿
3. ஆணையும், பெண்ணையும் அவன் படைத்திருப்பதன்368 மீது சத்தியமாக!379
إِنَّ سَعْيَكُمْ لَشَتَّىٰ
﴾ 92:4 ﴿
﴾92:4﴿
4. உங்கள் முயற்சி பலதரப்பட்டதாக உள்ளது.
فَأَمَّا مَنْ أَعْطَىٰ وَاتَّقَىٰ وَصَدَّقَ بِالْحُسْنَىٰ فَسَنُيَسِّرُهُ لِلْيُسْرَىٰ
﴾ 92:5,6,7 ﴿
﴾92:5,6,7﴿
5, 6, 7. யார் (பிறருக்கு) வழங்கி (இறைவனை) அஞ்சி, நல்லவற்றை உண்மைப்படுத்துகிறாரோ அவருக்கு வசதிக்குரிய வழியை எளிதாக்குவோம்.26
وَأَمَّا مَن بَخِلَ وَاسْتَغْنَىٰ وَكَذَّبَ بِالْحُسْنَىٰ فَسَنُيَسِّرُهُ لِلْعُسْرَىٰ
﴾ 92:8,9,10 ﴿
﴾92:8,9,10﴿
8, 9, 10. யார் கஞ்சத்தனம் செய்து, தேவையற்றவராகத் தன்னைக் கருதி, நல்லதை நம்ப மறுக்கிறாரோ, சிரமமானதற்கு அவருக்கு வழியை ஏற்படுத்துவோம்.26
وَمَا يُغْنِي عَنْهُ مَالُهُ إِذَا تَرَدَّىٰ
﴾ 92:11 ﴿
﴾92:11﴿
11. அவன் விழும்போது அவனது செல்வம் அவனைக் காக்காது.
إِنَّ عَلَيْنَا لَلْهُدَىٰ
﴾ 92:12 ﴿
﴾92:12﴿
12. நேர்வழி நம்மைச் சேர்ந்தது.
وَإِنَّ لَنَا لَلْآخِرَةَ وَالْأُولَىٰ
﴾ 92:13 ﴿
﴾92:13﴿
13. மறுமையும், இம்மையும் நமக்கே உரியது.
فَأَنذَرْتُكُمْ نَارًا تَلَظَّىٰ
﴾ 92:14 ﴿
﴾92:14﴿
14. கொழுந்து விட்டு எரியும் நெருப்பை உங்களுக்கு எச்சரிக்கிறேன்.
لَا يَصْلَاهَا إِلَّا الْأَشْقَى
﴾ 92:15 ﴿
﴾92:15﴿
15. துர்பாக்கியசாலியைத் தவிர யாரும் அதில் எரிய மாட்டார்கள்.
الَّذِي كَذَّبَ وَتَوَلَّىٰ
﴾ 92:16 ﴿
﴾92:16﴿
16. அவன் பொய்யெனக் கருதி அலட்சியம் செய்தவன்.
وَسَيُجَنَّبُهَا الْأَتْقَى
﴾ 92:17 ﴿
﴾92:17﴿
17. இறையச்சமுடையவர் அதிலிருந்து விலக்கப்படுவார்.
الَّذِي يُؤْتِي مَالَهُ يَتَزَكَّىٰ
﴾ 92:18 ﴿
﴾92:18﴿
18. அவர் தனது செல்வத்தை வழங்கி தூய்மையடைந்தவர்.
وَمَا لِأَحَدٍ عِندَهُ مِن نِّعْمَةٍ تُجْزَىٰ إِلَّا ابْتِغَاءَ وَجْهِ رَبِّهِ الْأَعْلَىٰ
﴾ 92:19,20 ﴿
﴾92:19,20﴿
19, 20. மிக உயர்ந்த தன் இறைவனின் முகத்தைத் தேடுவது தவிர திருப்பிச் செலுத்தப்படும் எந்த நன்றிக்கடனும் எவரிடமும் அவருக்கு இருக்காது.26
وَلَسَوْفَ يَرْضَىٰ
﴾ 92:21 ﴿
﴾92:21﴿
21. பின்னர் அவர் திருப்தியடைவார்.