அல் பலது
அந்த நகரம் • 20 வசனங்கள்
لَا أُقْسِمُ بِهَـٰذَا الْبَلَدِ وَأَنتَ حِلٌّ بِهَـٰذَا الْبَلَدِ
﴾ 90:1,2 ﴿
﴾90:1,2﴿
1, 2. (முஹம்மதே!) இந்நகரில் (மக்காவில்) நீர் வசிக்கும் நிலையில் இந்த நகரத்தின் மீது சத்தியம்379 செய்கிறேன்.26
وَوَالِدٍ وَمَا وَلَدَ
﴾ 90:3 ﴿
﴾90:3﴿
3. பெற்றவன் மீதும், அவன் பெற்றெடுத்ததன் மீதும் சத்தியமாக!379
لَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ فِي كَبَدٍ
﴾ 90:4 ﴿
﴾90:4﴿
4. மனிதனைக் கஷ்டப்படுபவனாகவே நாம் படைத்துள்ளோம்.368
أَيَحْسَبُ أَن لَّن يَقْدِرَ عَلَيْهِ أَحَدٌ
﴾ 90:5 ﴿
﴾90:5﴿
5. தன் மீது யாரும் சக்தி பெற மாட்டார்கள் என்று அவன் எண்ணுகிறானா?
يَقُولُ أَهْلَكْتُ مَالًا لُّبَدًا
﴾ 90:6 ﴿
﴾90:6﴿
6. 'ஏராளமான செல்வத்தை (கொடுத்து) அழித்து விட்டேன்' எனக் கூறுகிறான்.
أَيَحْسَبُ أَن لَّمْ يَرَهُ أَحَدٌ
﴾ 90:7 ﴿
﴾90:7﴿
7. அவனை யாரும் பார்க்கவில்லை என்று எண்ணுகிறானா?
أَلَمْ نَجْعَل لَّهُ عَيْنَيْنِ وَلِسَانًا وَشَفَتَيْنِ
﴾ 90:8,9 ﴿
﴾90:8,9﴿
8, 9. அவனுக்கு இரண்டு கண்களையும், நாவையும், இரு உதடுகளையும் நாம் அமைக்கவில்லையா?26
وَهَدَيْنَاهُ النَّجْدَيْنِ
﴾ 90:10 ﴿
﴾90:10﴿
10. (நன்மை தீமை என) இரு வழிகளை அவனுக்கு நாம் காட்டவில்லையா?
فَلَا اقْتَحَمَ الْعَقَبَةَ
﴾ 90:11 ﴿
﴾90:11﴿
11. அவன் கணவாயைக் கடக்கவில்லை.
وَمَا أَدْرَاكَ مَا الْعَقَبَةُ
﴾ 90:12 ﴿
﴾90:12﴿
12. கணவாய் என்பது என்னவென்பது உமக்கு எப்படித் தெரியும்?
فَكُّ رَقَبَةٍ أَوْ إِطْعَامٌ فِي يَوْمٍ ذِي مَسْغَبَةٍ يَتِيمًا ذَا مَقْرَبَةٍ أَوْ مِسْكِينًا ذَا مَتْرَبَةٍ ثُمَّ كَانَ مِنَ الَّذِينَ آمَنُوا وَتَوَاصَوْا بِالصَّبْرِ وَتَوَاصَوْا بِالْمَرْحَمَةِ
﴾ 90:13,14,15,16,17 ﴿
﴾90:13,14,15,16,17﴿
13, 14, 15, 16, 17. அடிமையை விடுதலை செய்தல், அல்லது நெருங்கிய உறவுடைய அனாதைக்கும், அல்லது வறுமையில் உழலும் ஏழைக்கும் பட்டினி காலத்தில் உணவளித்தல், பின்னர் நம்பிக்கை கொண்டு பொறுமையைப் போதித்து இரக்கத்தையும் போதித்தோரில் இணைதல் (இவைகளே கணவாய்.26
أُولَـٰئِكَ أَصْحَابُ الْمَيْمَنَةِ
﴾ 90:18 ﴿
﴾90:18﴿
18. அவர்களே வலப்புறத்தார்.
وَالَّذِينَ كَفَرُوا بِآيَاتِنَا هُمْ أَصْحَابُ الْمَشْأَمَةِ
﴾ 90:19 ﴿
﴾90:19﴿
19. யார் நமது வசனங்களை மறுக்கிறார்களோ அவர்களே இடப்புறத்தார்.
عَلَيْهِمْ نَارٌ مُّؤْصَدَةٌ
﴾ 90:20 ﴿
﴾90:20﴿
20. அவர்கள் மீது மூட்டப்பட்ட நெருப்பு இருக்கும்.