அல் ‌காஷியா

மூடிக் கொள்ளுதல் • 26 வசனங்கள்

هَلْ أَتَاكَ حَدِيثُ الْغَاشِيَةِ 

﴾ 88:1 ﴿
﴾88:1﴿

1. சுற்றி வளைக்கும் நிகழ்ச்சி பற்றி உமக்குச் செய்தி கிடைத்ததா?

وُجُوهٌ يَوْمَئِذٍ خَاشِعَةٌ 

﴾ 88:2 ﴿
﴾88:2﴿

2. அந்நாளில் சில முகங்கள் (அவமானத்தால்) பணிவுடன் இருக்கும்.

عَامِلَةٌ نَّاصِبَةٌ 

﴾ 88:3 ﴿
﴾88:3﴿

3. அவை (தீயவற்றில்) உறுதியாகச் செயல்பட்டன.

تَصْلَىٰ نَارًا حَامِيَةً 

﴾ 88:4 ﴿
﴾88:4﴿

4. சுட்டெரிக்கும் நெருப்பில் அவை எரியும்.

تُسْقَىٰ مِنْ عَيْنٍ آنِيَةٍ 

﴾ 88:5 ﴿
﴾88:5﴿

5. கொதிக்கும் ஊற்றிலிருந்து புகட்டப்படும்.

لَّيْسَ لَهُمْ طَعَامٌ إِلَّا مِن ضَرِيعٍ 

﴾ 88:6 ﴿
﴾88:6﴿

6. முட்செடி தவிர அவர்களுக்கு எந்த உணவும் இல்லை.

لَّا يُسْمِنُ وَلَا يُغْنِي مِن جُوعٍ 

﴾ 88:7 ﴿
﴾88:7﴿

7. அது கொழுக்க வைக்காது; பசியையும் நீக்காது.

وُجُوهٌ يَوْمَئِذٍ نَّاعِمَةٌ 

﴾ 88:8 ﴿
﴾88:8﴿

8. அந்நாளில் சில முகங்கள் மலர்ச்சியுடையதாக இருக்கும்.

لِّسَعْيِهَا رَاضِيَةٌ 

﴾ 88:9 ﴿
﴾88:9﴿

9. தமது உழைப்பிற்காகத் திருப்தி கொள்ளும்.

فِي جَنَّةٍ عَالِيَةٍ 

﴾ 88:10 ﴿
﴾88:10﴿

10. உயர்ந்த சொர்க்கத்தில் இருக்கும்.

لَّا تَسْمَعُ فِيهَا لَاغِيَةً 

﴾ 88:11 ﴿
﴾88:11﴿

11. அங்கே அவை வீணானதைச் செவியுறாது.

فِيهَا عَيْنٌ جَارِيَةٌ 

﴾ 88:12 ﴿
﴾88:12﴿

12. அங்கே ஓடும் ஊற்றுகள் உண்டு.

فِيهَا سُرُرٌ مَّرْفُوعَةٌ 

﴾ 88:13 ﴿
﴾88:13﴿

13. அங்கே உயர்ந்த கட்டில்கள் உள்ளன.

وَأَكْوَابٌ مَّوْضُوعَةٌ 

﴾ 88:14 ﴿
﴾88:14﴿

14. குவளைகள் வைக்கப்பட்டிருக்கும்.

وَنَمَارِقُ مَصْفُوفَةٌ 

﴾ 88:15 ﴿
﴾88:15﴿

15. வரிசைப்படுத்தப்பட்ட தலையணைகளும் உள்ளன.

وَزَرَابِيُّ مَبْثُوثَةٌ 

﴾ 88:16 ﴿
﴾88:16﴿

16. விரிக்கப்பட்ட கம்பளங்களும் உண்டு.

أَفَلَا يَنظُرُونَ إِلَى الْإِبِلِ كَيْفَ خُلِقَتْ 

﴾ 88:17 ﴿
﴾88:17﴿

17. ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் பார்க்க வேண்டாமா?399

وَإِلَى السَّمَاءِ كَيْفَ رُفِعَتْ 

﴾ 88:18 ﴿
﴾88:18﴿

18. வானம்507 எவ்வாறு உயர்த்தப்பட்டுள்ளது?

وَإِلَى الْجِبَالِ كَيْفَ نُصِبَتْ 

﴾ 88:19 ﴿
﴾88:19﴿

19. மலைகள் எவ்வாறு நாட்டி வைக்கப்பட்டுள்ளன?

وَإِلَى الْأَرْضِ كَيْفَ سُطِحَتْ 

﴾ 88:20 ﴿
﴾88:20﴿

20. பூமி எவ்வாறு விரிக்கப்பட்டுள்ளது? (என்பதையும் பார்க்க வேண்டாமா?)

فَذَكِّرْ إِنَّمَا أَنتَ مُذَكِّرٌ 

﴾ 88:21 ﴿
﴾88:21﴿

21. எனவே அறிவுரை கூறுவீராக! (முஹம்மதே!) நீர் அறிவுரை கூறுபவரே.81

لَّسْتَ عَلَيْهِم بِمُصَيْطِرٍ 

﴾ 88:22 ﴿
﴾88:22﴿

22. அவர்களுக்கு நீர் பொறுப்பாளி அல்லர்.81

إِلَّا مَن تَوَلَّىٰ وَكَفَرَ  فَيُعَذِّبُهُ اللَّهُ الْعَذَابَ الْأَكْبَرَ 

﴾ 88:23,24 ﴿
﴾88:23,24﴿

23, 24. எனினும், புறக்கணித்து (ஏகஇறைவனை) மறுப்பவனை மிகக் கடுமையாக அல்லாஹ் தண்டிப்பான்.26

إِنَّ إِلَيْنَا إِيَابَهُمْ 

﴾ 88:25 ﴿
﴾88:25﴿

25. அவர்களுடைய மீளுதல் நம்மிடமே உள்ளது.

ثُمَّ إِنَّ عَلَيْنَا حِسَابَهُم 

﴾ 88:26 ﴿
﴾88:26﴿

26. பின்னர் அவர்களை விசாரிப்பது நம்மைச் சேர்ந்தது.

88

Settings