அல் காஷியா
மூடிக் கொள்ளுதல் • 26 வசனங்கள்
هَلْ أَتَاكَ حَدِيثُ الْغَاشِيَةِ
﴾ 88:1 ﴿
﴾88:1﴿
1. சுற்றி வளைக்கும் நிகழ்ச்சி பற்றி உமக்குச் செய்தி கிடைத்ததா?
وُجُوهٌ يَوْمَئِذٍ خَاشِعَةٌ
﴾ 88:2 ﴿
﴾88:2﴿
2. அந்நாளில் சில முகங்கள் (அவமானத்தால்) பணிவுடன் இருக்கும்.
عَامِلَةٌ نَّاصِبَةٌ
﴾ 88:3 ﴿
﴾88:3﴿
3. அவை (தீயவற்றில்) உறுதியாகச் செயல்பட்டன.
تَصْلَىٰ نَارًا حَامِيَةً
﴾ 88:4 ﴿
﴾88:4﴿
4. சுட்டெரிக்கும் நெருப்பில் அவை எரியும்.
تُسْقَىٰ مِنْ عَيْنٍ آنِيَةٍ
﴾ 88:5 ﴿
﴾88:5﴿
5. கொதிக்கும் ஊற்றிலிருந்து புகட்டப்படும்.
لَّيْسَ لَهُمْ طَعَامٌ إِلَّا مِن ضَرِيعٍ
﴾ 88:6 ﴿
﴾88:6﴿
6. முட்செடி தவிர அவர்களுக்கு எந்த உணவும் இல்லை.
لَّا يُسْمِنُ وَلَا يُغْنِي مِن جُوعٍ
﴾ 88:7 ﴿
﴾88:7﴿
7. அது கொழுக்க வைக்காது; பசியையும் நீக்காது.
وُجُوهٌ يَوْمَئِذٍ نَّاعِمَةٌ
﴾ 88:8 ﴿
﴾88:8﴿
8. அந்நாளில் சில முகங்கள் மலர்ச்சியுடையதாக இருக்கும்.
لِّسَعْيِهَا رَاضِيَةٌ
﴾ 88:9 ﴿
﴾88:9﴿
9. தமது உழைப்பிற்காகத் திருப்தி கொள்ளும்.
فِي جَنَّةٍ عَالِيَةٍ
﴾ 88:10 ﴿
﴾88:10﴿
10. உயர்ந்த சொர்க்கத்தில் இருக்கும்.
لَّا تَسْمَعُ فِيهَا لَاغِيَةً
﴾ 88:11 ﴿
﴾88:11﴿
11. அங்கே அவை வீணானதைச் செவியுறாது.
فِيهَا عَيْنٌ جَارِيَةٌ
﴾ 88:12 ﴿
﴾88:12﴿
12. அங்கே ஓடும் ஊற்றுகள் உண்டு.
فِيهَا سُرُرٌ مَّرْفُوعَةٌ
﴾ 88:13 ﴿
﴾88:13﴿
13. அங்கே உயர்ந்த கட்டில்கள் உள்ளன.
وَأَكْوَابٌ مَّوْضُوعَةٌ
﴾ 88:14 ﴿
﴾88:14﴿
14. குவளைகள் வைக்கப்பட்டிருக்கும்.
وَنَمَارِقُ مَصْفُوفَةٌ
﴾ 88:15 ﴿
﴾88:15﴿
15. வரிசைப்படுத்தப்பட்ட தலையணைகளும் உள்ளன.
وَزَرَابِيُّ مَبْثُوثَةٌ
﴾ 88:16 ﴿
﴾88:16﴿
16. விரிக்கப்பட்ட கம்பளங்களும் உண்டு.
أَفَلَا يَنظُرُونَ إِلَى الْإِبِلِ كَيْفَ خُلِقَتْ
﴾ 88:17 ﴿
﴾88:17﴿
17. ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் பார்க்க வேண்டாமா?399
وَإِلَى السَّمَاءِ كَيْفَ رُفِعَتْ
﴾ 88:18 ﴿
﴾88:18﴿
18. வானம்507 எவ்வாறு உயர்த்தப்பட்டுள்ளது?
وَإِلَى الْجِبَالِ كَيْفَ نُصِبَتْ
﴾ 88:19 ﴿
﴾88:19﴿
19. மலைகள் எவ்வாறு நாட்டி வைக்கப்பட்டுள்ளன?
وَإِلَى الْأَرْضِ كَيْفَ سُطِحَتْ
﴾ 88:20 ﴿
﴾88:20﴿
20. பூமி எவ்வாறு விரிக்கப்பட்டுள்ளது? (என்பதையும் பார்க்க வேண்டாமா?)
فَذَكِّرْ إِنَّمَا أَنتَ مُذَكِّرٌ
﴾ 88:21 ﴿
﴾88:21﴿
21. எனவே அறிவுரை கூறுவீராக! (முஹம்மதே!) நீர் அறிவுரை கூறுபவரே.81
لَّسْتَ عَلَيْهِم بِمُصَيْطِرٍ
﴾ 88:22 ﴿
﴾88:22﴿
22. அவர்களுக்கு நீர் பொறுப்பாளி அல்லர்.81
إِلَّا مَن تَوَلَّىٰ وَكَفَرَ فَيُعَذِّبُهُ اللَّهُ الْعَذَابَ الْأَكْبَرَ
﴾ 88:23,24 ﴿
﴾88:23,24﴿
23, 24. எனினும், புறக்கணித்து (ஏகஇறைவனை) மறுப்பவனை மிகக் கடுமையாக அல்லாஹ் தண்டிப்பான்.26
إِنَّ إِلَيْنَا إِيَابَهُمْ
﴾ 88:25 ﴿
﴾88:25﴿
25. அவர்களுடைய மீளுதல் நம்மிடமே உள்ளது.
ثُمَّ إِنَّ عَلَيْنَا حِسَابَهُم
﴾ 88:26 ﴿
﴾88:26﴿
26. பின்னர் அவர்களை விசாரிப்பது நம்மைச் சேர்ந்தது.