அல் அஃலா
மிக உயர்ந்தவன் • 19 வசனங்கள்
سَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى
﴾ 87:1 ﴿
﴾87:1﴿
1. மிக உயர்ந்த உமது இறைவனின் பெயரைத் துதிப்பீராக!
الَّذِي خَلَقَ فَسَوَّىٰ
﴾ 87:2 ﴿
﴾87:2﴿
2. அவனே படைத்தான்.368 ஒழுங்குற அமைத்தான்.
وَالَّذِي قَدَّرَ فَهَدَىٰ
﴾ 87:3 ﴿
﴾87:3﴿
3. அவனே நிர்ணயித்தான். வழிகாட்டினான்.
وَالَّذِي أَخْرَجَ الْمَرْعَىٰ
﴾ 87:4 ﴿
﴾87:4﴿
4. அவனே மேய்ச்சலுக்குரியதை வெளிப்படுத்தினான்.
فَجَعَلَهُ غُثَاءً أَحْوَىٰ
﴾ 87:5 ﴿
﴾87:5﴿
5. எனவே அவற்றை உலர்ந்த கூளங்களாக்கினான்.
سَنُقْرِئُكَ فَلَا تَنسَىٰ إِلَّا مَا شَاءَ اللَّهُ ۚ إِنَّهُ يَعْلَمُ الْجَهْرَ وَمَا يَخْفَىٰ
﴾ 87:6,7 ﴿
﴾87:6,7﴿
6, 7. (முஹம்மதே!) உமக்கு ஓதிக் காட்டுவோம்.152 நீர் மறக்க மாட்டீர்.220 அல்லாஹ் நாடியதைத் தவிர. அவன் பகிரங்கமானதையும், மறைவானதையும் அறிகிறான்.26
وَنُيَسِّرُكَ لِلْيُسْرَىٰ
﴾ 87:8 ﴿
﴾87:8﴿
8. (முஹம்மதே!) எளியதை உமக்கு மேலும் எளிதாக்குவோம்.
فَذَكِّرْ إِن نَّفَعَتِ الذِّكْرَىٰ
﴾ 87:9 ﴿
﴾87:9﴿
9. அறிவுரை பயன் தருமானால் நீர் அறிவுரை கூறுவீராக!
سَيَذَّكَّرُ مَن يَخْشَىٰ
﴾ 87:10 ﴿
﴾87:10﴿
10. (இறைவனை) அஞ்சுபவன் படிப்பினை பெறுவான்.
وَيَتَجَنَّبُهَا الْأَشْقَى
﴾ 87:11 ﴿
﴾87:11﴿
11. துர்பாக்கியசாலி அதிலிருந்து விலகிக் கொள்வான்.
الَّذِي يَصْلَى النَّارَ الْكُبْرَىٰ
﴾ 87:12 ﴿
﴾87:12﴿
12. அவனே பெரும் நெருப்பில் எரிவான்.
ثُمَّ لَا يَمُوتُ فِيهَا وَلَا يَحْيَىٰ
﴾ 87:13 ﴿
﴾87:13﴿
13. பின்னர் அதில் சாகவும் மாட்டான். வாழவும் மாட்டான்.
قَدْ أَفْلَحَ مَن تَزَكَّىٰ
﴾ 87:14 ﴿
﴾87:14﴿
14. தூய்மையாக வாழ்பவன் வெற்றி பெற்றான்.
وَذَكَرَ اسْمَ رَبِّهِ فَصَلَّىٰ
﴾ 87:15 ﴿
﴾87:15﴿
15. அவன், தனது இறைவனின் பெயரை நினைத்து தொழுதான்.
بَلْ تُؤْثِرُونَ الْحَيَاةَ الدُّنْيَا
﴾ 87:16 ﴿
﴾87:16﴿
16. ஆனால் நீங்கள் இவ்வுலக வாழ்க்கையையே தேர்வு செய்கிறீர்கள்.
وَالْآخِرَةُ خَيْرٌ وَأَبْقَىٰ
﴾ 87:17 ﴿
﴾87:17﴿
17. மறுமையே சிறந்ததும், நிலையானதுமாகும்.
إِنَّ هَـٰذَا لَفِي الصُّحُفِ الْأُولَىٰ صُحُفِ إِبْرَاهِيمَ وَمُوسَىٰ
﴾ 87:18,19 ﴿
﴾87:18,19﴿
18, 19. இது முந்தைய வேதங்களிலும், இப்ராஹீம், மூஸாவுடைய வேதங்களிலும் உள்ளது.26