அல் புரூஜ்
நட்சத்திரங்கள் • 22 வசனங்கள்
وَالسَّمَاءِ ذَاتِ الْبُرُوجِ
﴾ 85:1 ﴿
﴾85:1﴿
1. நட்சத்திரங்களுடைய வானத்தின்507 மீது சத்தியமாக!379
وَالْيَوْمِ الْمَوْعُودِ
﴾ 85:2 ﴿
﴾85:2﴿
2. வாக்களிக்கப்பட்ட நாள்1 மீது சத்தியமாக!379
وَشَاهِدٍ وَمَشْهُودٍ
﴾ 85:3 ﴿
﴾85:3﴿
3. சாட்சி கூறுவோர் மீதும், சாட்சி கூறப்படுவோர் மீதும் சத்தியமாக!379
قُتِلَ أَصْحَابُ الْأُخْدُودِ النَّارِ ذَاتِ الْوَقُودِ
﴾ 85:4,5 ﴿
﴾85:4,5﴿
4, 5. எரிபொருள் நிரப்பிய நெருப்புக் குண்டத்தைத் தயாரித்தவர்கள்469 சபிக்கப்பட்டு விட்டனர்.26
إِذْ هُمْ عَلَيْهَا قُعُودٌ وَهُمْ عَلَىٰ مَا يَفْعَلُونَ بِالْمُؤْمِنِينَ شُهُودٌ
﴾ 85:6,7 ﴿
﴾85:6,7﴿
6, 7. அவர்கள் அதனருகே அமர்ந்திருந்த போது நம்பிக்கை கொண்டோரை எவ்வாறு நடத்தினார்கள் என்பதற்கு அவர்களே சாட்சிகளாக இருந்தனர்.26
وَمَا نَقَمُوا مِنْهُمْ إِلَّا أَن يُؤْمِنُوا بِاللَّهِ الْعَزِيزِ الْحَمِيدِ
﴾ 85:8 ﴿
﴾85:8﴿
8. 'புகழுக்குரியவனும், மிகைத்தவனுமாகிய அல்லாஹ்வை அவர்கள் நம்பினார்கள்' என்பதற்காகவே தவிர அவர்களை இவர்கள் பழி வாங்கவில்லை.
الَّذِي لَهُ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۚ وَاللَّهُ عَلَىٰ كُلِّ شَيْءٍ شَهِيدٌ
﴾ 85:9 ﴿
﴾85:9﴿
9. வானங்கள்507 மற்றும் பூமியின் அதிகாரம் அவனுக்கே உரியது. அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் கண்காணிப்பவன்.
إِنَّ الَّذِينَ فَتَنُوا الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ ثُمَّ لَمْ يَتُوبُوا فَلَهُمْ عَذَابُ جَهَنَّمَ وَلَهُمْ عَذَابُ الْحَرِيقِ
﴾ 85:10 ﴿
﴾85:10﴿
10. நம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும் துன்புறுத்தி விட்டு பின்னர் பாவமன்னிப்புக் கோராதவர்களுக்கு நரகத்தின் வேதனை இருக்கிறது. பொசுக்கும் வேதனையும் அவர்களுக்கு உண்டு.
إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَهُمْ جَنَّاتٌ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ ۚ ذَٰلِكَ الْفَوْزُ الْكَبِيرُ
﴾ 85:11 ﴿
﴾85:11﴿
11. நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோருக்கு சொர்க்கச் சோலைகள் உள்ளன. அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். இதுவே பெரும் வெற்றி.
إِنَّ بَطْشَ رَبِّكَ لَشَدِيدٌ
﴾ 85:12 ﴿
﴾85:12﴿
12. உமது இறைவனின் பிடி கடுமையானது.
إِنَّهُ هُوَ يُبْدِئُ وَيُعِيدُ
﴾ 85:13 ﴿
﴾85:13﴿
13. அவன் முதலில் படைக்கிறான். மீண்டும் படைக்கிறான்.
وَهُوَ الْغَفُورُ الْوَدُودُ
﴾ 85:14 ﴿
﴾85:14﴿
14. அவன் மன்னிப்பவன்; அன்பு மிக்கவன்.
ذُو الْعَرْشِ الْمَجِيدُ
﴾ 85:15 ﴿
﴾85:15﴿
15. அர்ஷுக்குரியவன்;488 மகத்துவ மிக்கவன்.
فَعَّالٌ لِّمَا يُرِيدُ
﴾ 85:16 ﴿
﴾85:16﴿
16. நினைத்ததைச் செய்து முடிப்பவன்.
هَلْ أَتَاكَ حَدِيثُ الْجُنُودِ فِرْعَوْنَ وَثَمُودَ
﴾ 85:17,18 ﴿
﴾85:17,18﴿
17, 18. ஃபிர்அவ்ன் மற்றும் ஸமூது சமுதாயத்தினரின் அந்தப் படையினர் பற்றிய செய்தி உமக்குக் கிடைத்ததா?
بَلِ الَّذِينَ كَفَرُوا فِي تَكْذِيبٍ
﴾ 85:19 ﴿
﴾85:19﴿
19. எனினும் (ஏகஇறைவனை) மறுப்போர் பொய்யெனக் கருதுவதில் தான் உள்ளனர்.
وَاللَّهُ مِن وَرَائِهِم مُّحِيطٌ
﴾ 85:20 ﴿
﴾85:20﴿
20. அல்லாஹ் அவர்களுக்குப் பின்புறமிருந்து முழுமையாக அறிகிறான்.
بَلْ هُوَ قُرْآنٌ مَّجِيدٌ
﴾ 85:21 ﴿
﴾85:21﴿
21. ஆம்! இது மகத்தான குர்ஆன்!
فِي لَوْحٍ مَّحْفُوظٍ
﴾ 85:22 ﴿
﴾85:22﴿
22. பாதுகாக்கப்பட்ட ஏட்டில்157 உள்ளது.