அல் இன்ஷிகாக்
பிளந்து போதல் • 25 வசனங்கள்
إِذَا السَّمَاءُ انشَقَّتْ
﴾ 84:1 ﴿
﴾84:1﴿
1. வானம்507 பிளந்து விடும்போது,
وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ
﴾ 84:2 ﴿
﴾84:2﴿
2. கடமையாக்கப்பட்ட நிலையில் தனது இறைவனின் கட்டளைக்கு அது அடிபணியும்போது,
وَإِذَا الْأَرْضُ مُدَّتْ
﴾ 84:3 ﴿
﴾84:3﴿
3. பூமி நீட்டப்படும்போது,
وَأَلْقَتْ مَا فِيهَا وَتَخَلَّتْ
﴾ 84:4 ﴿
﴾84:4﴿
4. தன்னிடம் உள்ளதை வெளிப்படுத்தி அது வெறுமையாகி விடும்போது,
وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ
﴾ 84:5 ﴿
﴾84:5﴿
5. கடமையாக்கப்பட்ட நிலையில் தனது இறைவனின் கட்டளைக்கு அது அடிபணியும்போது,
يَا أَيُّهَا الْإِنسَانُ إِنَّكَ كَادِحٌ إِلَىٰ رَبِّكَ كَدْحًا فَمُلَاقِيهِ
﴾ 84:6 ﴿
﴾84:6﴿
6. மனிதனே! உனது இறைவனை நோக்கிக் கடுமையாக முயற்சிக்கிறாய். எனவே அவனைச் சந்திப்பாய்.488
فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا
﴾ 84:7,8 ﴿
﴾84:7,8﴿
7, 8. யாருக்கு வலது கையில் பதிவுப் புத்தகம் கொடுக்கப்படுகிறதோ அவர் எளிதான முறையில் விசாரிக்கப்படுவார்.26
وَيَنقَلِبُ إِلَىٰ أَهْلِهِ مَسْرُورًا
﴾ 84:9 ﴿
﴾84:9﴿
9. அவர் தனது குடும்பத்தினரிடம் மகிழ்ச்சியுடன் செல்வார்.
وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ وَرَاءَ ظَهْرِهِ فَسَوْفَ يَدْعُو ثُبُورًا
﴾ 84:10,11 ﴿
﴾84:10,11﴿
10, 11. முதுகுக்குப் பின்புறமாக எவனுக்கு அவனது பதிவுப் புத்தகம் கொடுக்கப்படுகிறதோ அவன் அழிவை அழைப்பான்.26
وَيَصْلَىٰ سَعِيرًا
﴾ 84:12 ﴿
﴾84:12﴿
12. நரகிலும் எரிவான்.
إِنَّهُ كَانَ فِي أَهْلِهِ مَسْرُورًا
﴾ 84:13 ﴿
﴾84:13﴿
13. அவன் (இவ்வுலகில்) தனது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியுடன் இருந்தான்.
إِنَّهُ ظَنَّ أَن لَّن يَحُورَ
﴾ 84:14 ﴿
﴾84:14﴿
14. 'நான் (இறைவனிடம்) மீளவே மாட்டேன்' என்று அவன் எண்ணினான்.
بَلَىٰ إِنَّ رَبَّهُ كَانَ بِهِ بَصِيرًا
﴾ 84:15 ﴿
﴾84:15﴿
15. அவ்வாறில்லை! அவனது இறைவன் அவனைப் பார்ப்பவனாக488 இருந்தான்.
فَلَا أُقْسِمُ بِالشَّفَقِ
﴾ 84:16 ﴿
﴾84:16﴿
16. அடிவானத்தின் செம்மையின் மீது சத்தியம் செய்கிறேன்.
وَاللَّيْلِ وَمَا وَسَقَ وَالْقَمَرِ إِذَا اتَّسَقَ
﴾ 84:17,18 ﴿
﴾84:17,18﴿
17, 18. இரவின் மீதும், அது உள்ளடக்கியவற்றின் மீதும், முழுமை பெற்ற நிலவின் மீதும் சத்தியமாக!379
لَتَرْكَبُنَّ طَبَقًا عَن طَبَقٍ
﴾ 84:19 ﴿
﴾84:19﴿
19. நீங்கள் படிப்படியாக ஏறிச் செல்வீர்கள்.
فَمَا لَهُمْ لَا يُؤْمِنُونَ
﴾ 84:20 ﴿
﴾84:20﴿
20. அவர்கள் நம்பிக்கை கொள்ளாமலிருக்க என்ன நேர்ந்தது?
وَإِذَا قُرِئَ عَلَيْهِمُ الْقُرْآنُ لَا يَسْجُدُونَ ۩
﴾ 84:21 ﴿
﴾84:21﴿
21. அவர்களுக்குக் குர்ஆன் ஓதிக் காட்டப்படும் போது ஸஜ்தாச் செய்வதில்லை.396
بَلِ الَّذِينَ كَفَرُوا يُكَذِّبُونَ
﴾ 84:22 ﴿
﴾84:22﴿
22. மாறாக (ஏகஇறைவனை) மறுப்போர் பொய்யெனக் கருதுகின்றனர்.
وَاللَّهُ أَعْلَمُ بِمَا يُوعُونَ
﴾ 84:23 ﴿
﴾84:23﴿
23. அவர்கள் மறைப்பதை அல்லாஹ் அறிவான்.
فَبَشِّرْهُم بِعَذَابٍ أَلِيمٍ
﴾ 84:24 ﴿
﴾84:24﴿
24. எனவே அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையை எச்சரிப்பீராக!
إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍ
﴾ 84:25 ﴿
﴾84:25﴿
25. நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோரைத் தவிர. அவர்களுக்கு முடிவில்லாத கூலி உண்டு.