அல் ‌இன்ஷிகாக்‌

பிளந்து போதல் • 25 வசனங்கள்

إِذَا السَّمَاءُ انشَقَّتْ 

﴾ 84:1 ﴿
﴾84:1﴿

1. வானம்507 பிளந்து விடும்போது,

وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ 

﴾ 84:2 ﴿
﴾84:2﴿

2. கடமையாக்கப்பட்ட நிலையில் தனது இறைவனின் கட்டளைக்கு அது அடிபணியும்போது,

وَإِذَا الْأَرْضُ مُدَّتْ 

﴾ 84:3 ﴿
﴾84:3﴿

3. பூமி நீட்டப்படும்போது,

وَأَلْقَتْ مَا فِيهَا وَتَخَلَّتْ 

﴾ 84:4 ﴿
﴾84:4﴿

4. தன்னிடம் உள்ளதை வெளிப்படுத்தி அது வெறுமையாகி விடும்போது,

وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ 

﴾ 84:5 ﴿
﴾84:5﴿

5. கடமையாக்கப்பட்ட நிலையில் தனது இறைவனின் கட்டளைக்கு அது அடிபணியும்போது,

يَا أَيُّهَا الْإِنسَانُ إِنَّكَ كَادِحٌ إِلَىٰ رَبِّكَ كَدْحًا فَمُلَاقِيهِ 

﴾ 84:6 ﴿
﴾84:6﴿

6. மனிதனே! உனது இறைவனை நோக்கிக் கடுமையாக முயற்சிக்கிறாய். எனவே அவனைச் சந்திப்பாய்.488

فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ  فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا 

﴾ 84:7,8 ﴿
﴾84:7,8﴿

7, 8. யாருக்கு வலது கையில் பதிவுப் புத்தகம் கொடுக்கப்படுகிறதோ அவர் எளிதான முறையில் விசாரிக்கப்படுவார்.26

وَيَنقَلِبُ إِلَىٰ أَهْلِهِ مَسْرُورًا 

﴾ 84:9 ﴿
﴾84:9﴿

9. அவர் தனது குடும்பத்தினரிடம் மகிழ்ச்சியுடன் செல்வார்.

وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ وَرَاءَ ظَهْرِهِ  فَسَوْفَ يَدْعُو ثُبُورًا 

﴾ 84:10,11 ﴿
﴾84:10,11﴿

10, 11. முதுகுக்குப் பின்புறமாக எவனுக்கு அவனது பதிவுப் புத்தகம் கொடுக்கப்படுகிறதோ அவன் அழிவை அழைப்பான்.26

وَيَصْلَىٰ سَعِيرًا 

﴾ 84:12 ﴿
﴾84:12﴿

12. நரகிலும் எரிவான்.

إِنَّهُ كَانَ فِي أَهْلِهِ مَسْرُورًا 

﴾ 84:13 ﴿
﴾84:13﴿

13. அவன் (இவ்வுலகில்) தனது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியுடன் இருந்தான்.

إِنَّهُ ظَنَّ أَن لَّن يَحُورَ 

﴾ 84:14 ﴿
﴾84:14﴿

14. 'நான் (இறைவனிடம்) மீளவே மாட்டேன்' என்று அவன் எண்ணினான்.

بَلَىٰ إِنَّ رَبَّهُ كَانَ بِهِ بَصِيرًا 

﴾ 84:15 ﴿
﴾84:15﴿

15. அவ்வாறில்லை! அவனது இறைவன் அவனைப் பார்ப்பவனாக488 இருந்தான்.

فَلَا أُقْسِمُ بِالشَّفَقِ 

﴾ 84:16 ﴿
﴾84:16﴿

16. அடிவானத்தின் செம்மையின் மீது சத்தியம் செய்கிறேன்.

وَاللَّيْلِ وَمَا وَسَقَ  وَالْقَمَرِ إِذَا اتَّسَقَ 

﴾ 84:17,18 ﴿
﴾84:17,18﴿

17, 18. இரவின் மீதும், அது உள்ளடக்கியவற்றின் மீதும், முழுமை பெற்ற நிலவின் மீதும் சத்தியமாக!379

لَتَرْكَبُنَّ طَبَقًا عَن طَبَقٍ 

﴾ 84:19 ﴿
﴾84:19﴿

19. நீங்கள் படிப்படியாக ஏறிச் செல்வீர்கள்.

فَمَا لَهُمْ لَا يُؤْمِنُونَ 

﴾ 84:20 ﴿
﴾84:20﴿

20. அவர்கள் நம்பிக்கை கொள்ளாமலிருக்க என்ன நேர்ந்தது?

وَإِذَا قُرِئَ عَلَيْهِمُ الْقُرْآنُ لَا يَسْجُدُونَ ۩ 

﴾ 84:21 ﴿
﴾84:21﴿

21. அவர்களுக்குக் குர்ஆன் ஓதிக் காட்டப்படும் போது ஸஜ்தாச் செய்வதில்லை.396

بَلِ الَّذِينَ كَفَرُوا يُكَذِّبُونَ 

﴾ 84:22 ﴿
﴾84:22﴿

22. மாறாக (ஏகஇறைவனை) மறுப்போர் பொய்யெனக் கருதுகின்றனர்.

وَاللَّهُ أَعْلَمُ بِمَا يُوعُونَ 

﴾ 84:23 ﴿
﴾84:23﴿

23. அவர்கள் மறைப்பதை அல்லாஹ் அறிவான்.

فَبَشِّرْهُم بِعَذَابٍ أَلِيمٍ 

﴾ 84:24 ﴿
﴾84:24﴿

24. எனவே அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையை எச்சரிப்பீராக!

إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍ 

﴾ 84:25 ﴿
﴾84:25﴿

25. நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோரைத் தவிர. அவர்களுக்கு முடிவில்லாத கூலி உண்டு.

84

Settings