அல் முதஃப்பிபீன்
அளவு நிறுவையில் குறைவு செய்வோர் • 36 வசனங்கள்
وَيْلٌ لِّلْمُطَفِّفِينَ
﴾ 83:1 ﴿
﴾83:1﴿
1. அளவு, நிறுவையில் குறைவு செய்வோருக்குக் கேடு தான்!
الَّذِينَ إِذَا اكْتَالُوا عَلَى النَّاسِ يَسْتَوْفُونَ
﴾ 83:2 ﴿
﴾83:2﴿
2. அவர்கள் மக்களிடம் அளந்து வாங்கும் போது நிறைவாக வாங்கிக் கொள்கின்றனர்.
وَإِذَا كَالُوهُمْ أَو وَّزَنُوهُمْ يُخْسِرُونَ
﴾ 83:3 ﴿
﴾83:3﴿
3. மக்களுக்கு அளந்தோ, நிறுத்தோ கொடுத்தால் குறைத்து விடுகின்றனர்.
أَلَا يَظُنُّ أُولَـٰئِكَ أَنَّهُم مَّبْعُوثُونَ لِيَوْمٍ عَظِيمٍ
﴾ 83:4,5 ﴿
﴾83:4,5﴿
4, 5. மகத்தான நாளில் உயிர்ப்பிக்கப்பட உள்ளனர் என்பதை அவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டாமா?26
يَوْمَ يَقُومُ النَّاسُ لِرَبِّ الْعَالَمِينَ
﴾ 83:6 ﴿
﴾83:6﴿
6. அந்நாளில் அகிலத்தின் இறைவன் முன்னால் மனிதர்கள் நிற்பார்கள்.
كَلَّا إِنَّ كِتَابَ الْفُجَّارِ لَفِي سِجِّينٍ
﴾ 83:7 ﴿
﴾83:7﴿
7. அவ்வாறில்லை! குற்றவாளிகளின் ஏடு ஸிஜ்ஜீனில்434 உள்ளது.
وَمَا أَدْرَاكَ مَا سِجِّينٌ
﴾ 83:8 ﴿
﴾83:8﴿
8. ஸிஜ்ஜீன்434 என்பது என்னவென உமக்கு எப்படித் தெரியும்?
كِتَابٌ مَّرْقُومٌ
﴾ 83:9 ﴿
﴾83:9﴿
9. அது எழுதப்பட்ட ஏடாகும்.
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ
﴾ 83:10 ﴿
﴾83:10﴿
10. பொய்யெனக் கருதியோருக்கு அந்நாளில் கேடு தான்.
الَّذِينَ يُكَذِّبُونَ بِيَوْمِ الدِّينِ
﴾ 83:11 ﴿
﴾83:11﴿
11. அவர்கள் தீர்ப்பு நாளைப்1 பொய்யெனக் கருதினர்.
وَمَا يُكَذِّبُ بِهِ إِلَّا كُلُّ مُعْتَدٍ أَثِيمٍ
﴾ 83:12 ﴿
﴾83:12﴿
12. வரம்பு மீறும் ஒவ்வொரு பாவியையும் தவிர வேறு எவரும் அதைப் பொய்யெனக் கருத மாட்டார்கள்.
إِذَا تُتْلَىٰ عَلَيْهِ آيَاتُنَا قَالَ أَسَاطِيرُ الْأَوَّلِينَ
﴾ 83:13 ﴿
﴾83:13﴿
13. நமது வசனங்கள் அவனுக்குக் கூறப்பட்டால் 'இது முன்னோர்களின் கட்டுக் கதைகள்' எனக் கூறுகிறான்.
كَلَّا ۖ بَلْ ۜ رَانَ عَلَىٰ قُلُوبِهِم مَّا كَانُوا يَكْسِبُونَ
﴾ 83:14 ﴿
﴾83:14﴿
14. அவ்வாறில்லை! மாறாக அவர்கள் செய்தது அவர்களது உள்ளங்களில் துருவாகப் படிந்து விட்டது.
كَلَّا إِنَّهُمْ عَن رَّبِّهِمْ يَوْمَئِذٍ لَّمَحْجُوبُونَ
﴾ 83:15 ﴿
﴾83:15﴿
15. அவ்வாறில்லை! அந்நாளில்1 அவர்கள் தமது இறைவனை விட்டும் தடுக்கப்படுவார்கள்.488
ثُمَّ إِنَّهُمْ لَصَالُو الْجَحِيمِ
﴾ 83:16 ﴿
﴾83:16﴿
16. பின்னர் அவர்கள் நரகில் எரிவார்கள்.
ثُمَّ يُقَالُ هَـٰذَا الَّذِي كُنتُم بِهِ تُكَذِّبُونَ
﴾ 83:17 ﴿
﴾83:17﴿
17. 'நீங்கள் பொய்யெனக் கருதியது இதுவே' என்று பின்னர் கூறப்படும்.
كَلَّا إِنَّ كِتَابَ الْأَبْرَارِ لَفِي عِلِّيِّينَ
﴾ 83:18 ﴿
﴾83:18﴿
18. அவ்வாறில்லை! நல்லோரின் ஏடு இல்லிய்யீனில்434 இருக்கும்.
وَمَا أَدْرَاكَ مَا عِلِّيُّونَ
﴾ 83:19 ﴿
﴾83:19﴿
19. இல்லிய்யீன்434 என்பது என்னவென உமக்கு எப்படித் தெரியும்?
كِتَابٌ مَّرْقُومٌ
﴾ 83:20 ﴿
﴾83:20﴿
20. அது எழுதப்பட்ட ஏடாகும்.
يَشْهَدُهُ الْمُقَرَّبُونَ
﴾ 83:21 ﴿
﴾83:21﴿
21. நெருக்கமான(வான)வர்கள் அதைப் பார்ப்பார்கள்.
إِنَّ الْأَبْرَارَ لَفِي نَعِيمٍ
﴾ 83:22 ﴿
﴾83:22﴿
22. நல்லோர் இன்பத்தில் இருப்பார்கள்.
عَلَى الْأَرَائِكِ يَنظُرُونَ
﴾ 83:23 ﴿
﴾83:23﴿
23. உயர்ந்த இருக்கைகள் மீது (சாய்ந்து) பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
تَعْرِفُ فِي وُجُوهِهِمْ نَضْرَةَ النَّعِيمِ
﴾ 83:24 ﴿
﴾83:24﴿
24. அவர்களின் முகங்களில் இன்பத்தின் செழிப்பை நீர் அறிந்து கொள்வீர்.
يُسْقَوْنَ مِن رَّحِيقٍ مَّخْتُومٍ
﴾ 83:25 ﴿
﴾83:25﴿
25. முத்திரையிடப்பட்ட மது புகட்டப்படுவார்கள்.
خِتَامُهُ مِسْكٌ ۚ وَفِي ذَٰلِكَ فَلْيَتَنَافَسِ الْمُتَنَافِسُونَ
﴾ 83:26 ﴿
﴾83:26﴿
26. அதன் முத்திரை கஸ்தூரியாகும். போட்டியிடுவோர் இதில் தான் போட்டியிட வேண்டும்.
وَمِزَاجُهُ مِن تَسْنِيمٍ
﴾ 83:27 ﴿
﴾83:27﴿
27. அதன் கலவை தஸ்னீம் எனும் நீராகும்.
عَيْنًا يَشْرَبُ بِهَا الْمُقَرَّبُونَ
﴾ 83:28 ﴿
﴾83:28﴿
28. அது நெருக்கமானோர் அருந்துகிற நீரூற்று!
إِنَّ الَّذِينَ أَجْرَمُوا كَانُوا مِنَ الَّذِينَ آمَنُوا يَضْحَكُونَ
﴾ 83:29 ﴿
﴾83:29﴿
29. குற்றம் புரிந்தோர் நம்பிக்கை கொண்டோரைப் பார்த்து (உலகில்) சிரித்துக் கொண்டிருந்தனர்.
وَإِذَا مَرُّوا بِهِمْ يَتَغَامَزُونَ
﴾ 83:30 ﴿
﴾83:30﴿
30. அவர்களைக் கடந்து செல்லும்போது கண் சாடையால் கேலி செய்து கொண்டிருந்தனர்.
وَإِذَا انقَلَبُوا إِلَىٰ أَهْلِهِمُ انقَلَبُوا فَكِهِينَ
﴾ 83:31 ﴿
﴾83:31﴿
31. தமது குடும்பத்தாரிடம் செல்லும்போது மகிழ்ச்சியடைந்து சென்றார்கள்.
وَإِذَا رَأَوْهُمْ قَالُوا إِنَّ هَـٰؤُلَاءِ لَضَالُّونَ
﴾ 83:32 ﴿
﴾83:32﴿
32. (நல்லோரான) அவர்களைக் காணும் போது 'இவர்கள் வழிகெட்டவர்கள்' எனக் கூறினர்.
وَمَا أُرْسِلُوا عَلَيْهِمْ حَافِظِينَ
﴾ 83:33 ﴿
﴾83:33﴿
33. இவர்களைக் கண்காணிப்போராக அவர்கள் அனுப்பப்படவில்லை.
فَالْيَوْمَ الَّذِينَ آمَنُوا مِنَ الْكُفَّارِ يَضْحَكُونَ
﴾ 83:34 ﴿
﴾83:34﴿
34. அந்நாளில்1 (ஏகஇறைவனை) மறுப்போரைக் கண்டு நம்பிக்கை கொண்டோர் சிரிப்பார்கள்.
عَلَى الْأَرَائِكِ يَنظُرُونَ
﴾ 83:35 ﴿
﴾83:35﴿
35. உயர்ந்த கட்டில்கள் மீது (சாய்ந்து) பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
هَلْ ثُوِّبَ الْكُفَّارُ مَا كَانُوا يَفْعَلُونَ
﴾ 83:36 ﴿
﴾83:36﴿
36. (ஏகஇறைவனை) மறுப்போர் அவர்கள் செய்தவற்றுக்கேற்ப கூலி கொடுக்கப்பட்டார்களா? (எனக் கேட்கப்படும்.)