அல் இன்ஃபிதார்
பிளந்துவிடுதல் • 19 வசனங்கள்
إِذَا السَّمَاءُ انفَطَرَتْ
﴾ 82:1 ﴿
﴾82:1﴿
1. வானம்507 பிளந்து விடும்போது,
وَإِذَا الْكَوَاكِبُ انتَثَرَتْ
﴾ 82:2 ﴿
﴾82:2﴿
2. நட்சத்திரங்கள் உதிர்ந்து விடும்போது,
وَإِذَا الْبِحَارُ فُجِّرَتْ
﴾ 82:3 ﴿
﴾82:3﴿
3. கடல்கள் கொதிக்க வைக்கப்படும் போது,
وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ
﴾ 82:4 ﴿
﴾82:4﴿
4. மண்ணறைகள் புரட்டப்படும் போது,
عَلِمَتْ نَفْسٌ مَّا قَدَّمَتْ وَأَخَّرَتْ
﴾ 82:5 ﴿
﴾82:5﴿
5. ஒருவன் தான் முற்படுத்தியதையும், பிற்படுத்தியதையும் அறிந்து கொள்வான்.
يَا أَيُّهَا الْإِنسَانُ مَا غَرَّكَ بِرَبِّكَ الْكَرِيمِ
﴾ 82:6 ﴿
﴾82:6﴿
6. மனிதனே! மரியாதைக்குரிய உனது இறைவன் விஷயத்தில் உன்னை ஏமாற்றியது எது?
الَّذِي خَلَقَكَ فَسَوَّاكَ فَعَدَلَكَ
﴾ 82:7 ﴿
﴾82:7﴿
7. அவனே உன்னைப் படைத்து, உன்னைச் சீராக்கி, உன்னைச் செம்மைப்படுத்தினான்.
فِي أَيِّ صُورَةٍ مَّا شَاءَ رَكَّبَكَ
﴾ 82:8 ﴿
﴾82:8﴿
8. அவன் விரும்பிய வடிவத்தில் உன்னை அமைத்தான்.
كَلَّا بَلْ تُكَذِّبُونَ بِالدِّينِ
﴾ 82:9 ﴿
﴾82:9﴿
9. ஆனால் நியாயத் தீர்ப்பு நாளைப்1 பொய்யெனக் கருதுகிறீர்கள்.
وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ كِرَامًا كَاتِبِينَ
﴾ 82:10,11 ﴿
﴾82:10,11﴿
10, 11. உங்கள் மீது மரியாதைக்குரிய எழுத்தர்களான கண்காணிப்பாளர்கள் உள்ளனர்.26
يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ
﴾ 82:12 ﴿
﴾82:12﴿
12. நீங்கள் செய்வதை அவர்கள் அறிவார்கள்.
إِنَّ الْأَبْرَارَ لَفِي نَعِيمٍ
﴾ 82:13 ﴿
﴾82:13﴿
13. நல்லோர் இன்பத்தில் இருப்பார்கள்.
وَإِنَّ الْفُجَّارَ لَفِي جَحِيمٍ
﴾ 82:14 ﴿
﴾82:14﴿
14. பாவிகள் நரகில் இருப்பார்கள்.
يَصْلَوْنَهَا يَوْمَ الدِّينِ
﴾ 82:15 ﴿
﴾82:15﴿
15. தீர்ப்பு நாளில் அதில் அவர்கள் எரிவார்கள்.
وَمَا هُمْ عَنْهَا بِغَائِبِينَ
﴾ 82:16 ﴿
﴾82:16﴿
16. அதை விட்டும் அவர்கள் மறைந்து விடுவோர் அல்லர்.
وَمَا أَدْرَاكَ مَا يَوْمُ الدِّينِ
﴾ 82:17 ﴿
﴾82:17﴿
17. தீர்ப்பு நாள்1 எதுவென (முஹம்மதே!) உமக்கு எப்படித் தெரியும்?
ثُمَّ مَا أَدْرَاكَ مَا يَوْمُ الدِّينِ
﴾ 82:18 ﴿
﴾82:18﴿
18. பின்னரும் தீர்ப்பு நாள்1 எதுவென உமக்கு எப்படித் தெரியும்?
يَوْمَ لَا تَمْلِكُ نَفْسٌ لِّنَفْسٍ شَيْئًا ۖ وَالْأَمْرُ يَوْمَئِذٍ لِّلَّهِ
﴾ 82:19 ﴿
﴾82:19﴿
19. அந்நாளில் எவரும் எவருக்கும் சிறிதளவும் நன்மை செய்ய முடியாது. அந்நாளில் அதிகாரம் அல்லாஹ்வுக்கே.