அல் ‌இன்‌ஃபிதார்‌

பிளந்துவிடுதல் • 19 வசனங்கள்

إِذَا السَّمَاءُ انفَطَرَتْ 

﴾ 82:1 ﴿
﴾82:1﴿

1. வானம்507 பிளந்து விடும்போது,

وَإِذَا الْكَوَاكِبُ انتَثَرَتْ 

﴾ 82:2 ﴿
﴾82:2﴿

2. நட்சத்திரங்கள் உதிர்ந்து விடும்போது,

وَإِذَا الْبِحَارُ فُجِّرَتْ 

﴾ 82:3 ﴿
﴾82:3﴿

3. கடல்கள் கொதிக்க வைக்கப்படும் போது,

وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ 

﴾ 82:4 ﴿
﴾82:4﴿

4. மண்ணறைகள் புரட்டப்படும் போது,

عَلِمَتْ نَفْسٌ مَّا قَدَّمَتْ وَأَخَّرَتْ 

﴾ 82:5 ﴿
﴾82:5﴿

5. ஒருவன் தான் முற்படுத்தியதையும், பிற்படுத்தியதையும் அறிந்து கொள்வான்.

يَا أَيُّهَا الْإِنسَانُ مَا غَرَّكَ بِرَبِّكَ الْكَرِيمِ 

﴾ 82:6 ﴿
﴾82:6﴿

6. மனிதனே! மரியாதைக்குரிய உனது இறைவன் விஷயத்தில் உன்னை ஏமாற்றியது எது?

الَّذِي خَلَقَكَ فَسَوَّاكَ فَعَدَلَكَ 

﴾ 82:7 ﴿
﴾82:7﴿

7. அவனே உன்னைப் படைத்து, உன்னைச் சீராக்கி, உன்னைச் செம்மைப்படுத்தினான்.

فِي أَيِّ صُورَةٍ مَّا شَاءَ رَكَّبَكَ 

﴾ 82:8 ﴿
﴾82:8﴿

8. அவன் விரும்பிய வடிவத்தில் உன்னை அமைத்தான்.

كَلَّا بَلْ تُكَذِّبُونَ بِالدِّينِ 

﴾ 82:9 ﴿
﴾82:9﴿

9. ஆனால் நியாயத் தீர்ப்பு நாளைப்1 பொய்யெனக் கருதுகிறீர்கள்.

وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ  كِرَامًا كَاتِبِينَ 

﴾ 82:10,11 ﴿
﴾82:10,11﴿

10, 11. உங்கள் மீது மரியாதைக்குரிய எழுத்தர்களான கண்காணிப்பாளர்கள் உள்ளனர்.26

يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ 

﴾ 82:12 ﴿
﴾82:12﴿

12. நீங்கள் செய்வதை அவர்கள் அறிவார்கள்.

إِنَّ الْأَبْرَارَ لَفِي نَعِيمٍ 

﴾ 82:13 ﴿
﴾82:13﴿

13. நல்லோர் இன்பத்தில் இருப்பார்கள்.

وَإِنَّ الْفُجَّارَ لَفِي جَحِيمٍ 

﴾ 82:14 ﴿
﴾82:14﴿

14. பாவிகள் நரகில் இருப்பார்கள்.

يَصْلَوْنَهَا يَوْمَ الدِّينِ 

﴾ 82:15 ﴿
﴾82:15﴿

15. தீர்ப்பு நாளில் அதில் அவர்கள் எரிவார்கள்.

وَمَا هُمْ عَنْهَا بِغَائِبِينَ 

﴾ 82:16 ﴿
﴾82:16﴿

16. அதை விட்டும் அவர்கள் மறைந்து விடுவோர் அல்லர்.

وَمَا أَدْرَاكَ مَا يَوْمُ الدِّينِ 

﴾ 82:17 ﴿
﴾82:17﴿

17. தீர்ப்பு நாள்1 எதுவென (முஹம்மதே!) உமக்கு எப்படித் தெரியும்?

ثُمَّ مَا أَدْرَاكَ مَا يَوْمُ الدِّينِ 

﴾ 82:18 ﴿
﴾82:18﴿

18. பின்னரும் தீர்ப்பு நாள்1 எதுவென உமக்கு எப்படித் தெரியும்?

يَوْمَ لَا تَمْلِكُ نَفْسٌ لِّنَفْسٍ شَيْئًا ۖ وَالْأَمْرُ يَوْمَئِذٍ لِّلَّهِ 

﴾ 82:19 ﴿
﴾82:19﴿

19. அந்நாளில் எவரும் எவருக்கும் சிறிதளவும் நன்மை செய்ய முடியாது. அந்நாளில் அதிகாரம் அல்லாஹ்வுக்கே.

82

Settings