அத்தக்வீர்
சுருட்டுதல் • 29 வசனங்கள்
إِذَا الشَّمْسُ كُوِّرَتْ
﴾ 81:1 ﴿
﴾81:1﴿
1. சூரியன் சுருட்டப்படும்போது,
وَإِذَا النُّجُومُ انكَدَرَتْ
﴾ 81:2 ﴿
﴾81:2﴿
2. நட்சத்திரங்கள் உதிரும்போது,
وَإِذَا الْجِبَالُ سُيِّرَتْ
﴾ 81:3 ﴿
﴾81:3﴿
3. மலைகள் பெயர்க்கப்படும்போது,
وَإِذَا الْعِشَارُ عُطِّلَتْ
﴾ 81:4 ﴿
﴾81:4﴿
4. கருவுற்ற ஒட்டகங்கள் கவனிப்பாரற்று விடப்படும்போது,
وَإِذَا الْوُحُوشُ حُشِرَتْ
﴾ 81:5 ﴿
﴾81:5﴿
5. விலங்குகள் ஒன்று திரட்டப்படும்போது,
وَإِذَا الْبِحَارُ سُجِّرَتْ
﴾ 81:6 ﴿
﴾81:6﴿
6. கடல்கள் தீ மூட்டப்படும்போது,
وَإِذَا النُّفُوسُ زُوِّجَتْ
﴾ 81:7 ﴿
﴾81:7﴿
7. உயிர்கள் மீண்டும் (உடல்களுடன்) சேர்க்கப்படும்போது,
وَإِذَا الْمَوْءُودَةُ سُئِلَتْ بِأَيِّ ذَنبٍ قُتِلَتْ
﴾ 81:8,9 ﴿
﴾81:8,9﴿
8, 9. என்ன பாவத்துக்காகக் கொல்லப்பட்டாள் என்று உயிருடன் புதைக்கப்பட்டவள்487 விசாரிக்கப்படும் போது,26
وَإِذَا الصُّحُفُ نُشِرَتْ
﴾ 81:10 ﴿
﴾81:10﴿
10. ஏடுகள் விரிக்கப்படும்போது,
وَإِذَا السَّمَاءُ كُشِطَتْ
﴾ 81:11 ﴿
﴾81:11﴿
11. வானம்507 அகற்றப்படும்போது,
وَإِذَا الْجَحِيمُ سُعِّرَتْ
﴾ 81:12 ﴿
﴾81:12﴿
12. நரகம் கொளுத்தப்படும்போது,
وَإِذَا الْجَنَّةُ أُزْلِفَتْ
﴾ 81:13 ﴿
﴾81:13﴿
13. சொர்க்கம் அருகே கொண்டு வரப்படும்போது,
عَلِمَتْ نَفْسٌ مَّا أَحْضَرَتْ
﴾ 81:14 ﴿
﴾81:14﴿
14. ஒருவன், தான் முற்படுத்தியதை அறிந்து கொள்வான்.
فَلَا أُقْسِمُ بِالْخُنَّسِ الْجَوَارِ الْكُنَّسِ
﴾ 81:15,16 ﴿
﴾81:15,16﴿
15, 16. மறைந்தும் மறையாமலிருக்கிற, (முழுதும்) மறைகின்ற நட்சத்திரங்கள் மீது சத்தியம்379 செய்கிறேன்.26
وَاللَّيْلِ إِذَا عَسْعَسَ
﴾ 81:17 ﴿
﴾81:17﴿
17. பின்னோக்கிச் செல்லும் இரவின் மீது சத்தியமாக379
وَالصُّبْحِ إِذَا تَنَفَّسَ
﴾ 81:18 ﴿
﴾81:18﴿
18. தெளிவாகும் காலைப் பொழுதின் மீது சத்தியமாக!379
إِنَّهُ لَقَوْلُ رَسُولٍ كَرِيمٍ
﴾ 81:19 ﴿
﴾81:19﴿
19. இது மரியாதைக்குரிய தூதரின் (ஜிப்ரீலின்) சொல்லாகும்.492
ذِي قُوَّةٍ عِندَ ذِي الْعَرْشِ مَكِينٍ
﴾ 81:20 ﴿
﴾81:20﴿
20. (அவர்) வலிமை மிக்கவர்; அர்ஷுக்கு488 உரியவனிடத்தில் தகுதி பெற்றவர்.
مُّطَاعٍ ثَمَّ أَمِينٍ
﴾ 81:21 ﴿
﴾81:21﴿
21. வானவர்களின் தலைவர்; அங்கே நம்பிக்கைக்குரியவர்.
وَمَا صَاحِبُكُم بِمَجْنُونٍ
﴾ 81:22 ﴿
﴾81:22﴿
22. உங்கள் தோழர் (முஹம்மது) பைத்தியக்காரர் அல்லர்.468
وَلَقَدْ رَآهُ بِالْأُفُقِ الْمُبِينِ
﴾ 81:23 ﴿
﴾81:23﴿
23. அவரை (ஜிப்ரீலை) தெளிவான அடிவானத்தில் பார்த்தார்.
وَمَا هُوَ عَلَى الْغَيْبِ بِضَنِينٍ
﴾ 81:24 ﴿
﴾81:24﴿
24. அவர் (முஹம்மது) மறைவானவற்றில் கஞ்சத்தனம் செய்பவரல்லர்.
وَمَا هُوَ بِقَوْلِ شَيْطَانٍ رَّجِيمٍ
﴾ 81:25 ﴿
﴾81:25﴿
25. இது விரட்டப்பட்ட ஷைத்தானின் கூற்று அல்ல.
فَأَيْنَ تَذْهَبُونَ
﴾ 81:26 ﴿
﴾81:26﴿
26. எங்கே செல்கிறீர்கள்?
إِنْ هُوَ إِلَّا ذِكْرٌ لِّلْعَالَمِينَ لِمَن شَاءَ مِنكُمْ أَن يَسْتَقِيمَ
﴾ 81:27,28 ﴿
﴾81:27,28﴿
27, 28. இது அகிலத்தாருக்கும், உங்களில் யார் நேராக நடக்க விரும்புகிறாரோ அவருக்கும் அறிவுரை தவிர வேறு இல்லை.26
وَمَا تَشَاءُونَ إِلَّا أَن يَشَاءَ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ
﴾ 81:29 ﴿
﴾81:29﴿
29. அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ் நாடுவதைத் தவிர நீங்கள் நாடுவதில்லை.289