அபஸ
கடுகடுத்தார் • 42 வசனங்கள்
عَبَسَ وَتَوَلَّىٰ أَن جَاءَهُ الْأَعْمَىٰ
﴾ 80:1,2 ﴿
﴾80:1,2﴿
1, 2. தன்னிடம் அந்தக் குருடர் வந்ததற்காக168 இவர் (முஹம்மது) கடுகடுத்தார். அலட்சியம் செய்தார்.26
وَمَا يُدْرِيكَ لَعَلَّهُ يَزَّكَّىٰ
﴾ 80:3 ﴿
﴾80:3﴿
3. அவர் தூயவராக இருக்கலாம் என்பது (முஹம்மதே!) உமக்கு எப்படித் தெரியும்?
أَوْ يَذَّكَّرُ فَتَنفَعَهُ الذِّكْرَىٰ
﴾ 80:4 ﴿
﴾80:4﴿
4. அல்லது அவர் அறிவுரை பெறலாம். அந்த அறிவுரை அவருக்குப் பயன் அளிக்கலாம்.
أَمَّا مَنِ اسْتَغْنَىٰ فَأَنتَ لَهُ تَصَدَّىٰ
﴾ 80:5,6 ﴿
﴾80:5,6﴿
5, 6. யார் அலட்சியம் செய்கிறானோ அவனிடம் வலியச் செல்கிறீர்.26
وَمَا عَلَيْكَ أَلَّا يَزَّكَّىٰ
﴾ 80:7 ﴿
﴾80:7﴿
7. அவன் பரிசுத்தமாக ஆகாவிட்டால் உம் மீது ஏதும் இல்லை.
وَأَمَّا مَن جَاءَكَ يَسْعَىٰ وَهُوَ يَخْشَىٰ فَأَنتَ عَنْهُ تَلَهَّىٰ
﴾ 80:8,9,10 ﴿
﴾80:8,9,10﴿
8, 9, 10. (இறைவனை) அஞ்சி உம்மிடம் யார் ஓடி வருகிறாரோ அவரை அலட்சியம் செய்கிறீர். 26
كَلَّا إِنَّهَا تَذْكِرَةٌ
﴾ 80:11 ﴿
﴾80:11﴿
11. அவ்வாறில்லை! இது ஓர் அறிவுரை.
فَمَن شَاءَ ذَكَرَهُ
﴾ 80:12 ﴿
﴾80:12﴿
12. விரும்பியவர் இதில் படிப்பினை பெற்றுக் கொள்வார்.
فِي صُحُفٍ مُّكَرَّمَةٍ مَّرْفُوعَةٍ مُّطَهَّرَةٍ بِأَيْدِي سَفَرَةٍ كِرَامٍ بَرَرَةٍ
﴾ 80:13,14,15,16 ﴿
﴾80:13,14,15,16﴿
13, 14, 15, 16. இது தூய்மைப்படுத்தப்பட்டு உயர்வாக்கப்பட்ட மதிப்பு மிக்க ஏடுகளில்461 உள்ளது. மரியாதைக்குரிய நல்லோர்களான எழுத்தர்களின் (வானவர்களின்) கைகளில் உள்ளது.26
قُتِلَ الْإِنسَانُ مَا أَكْفَرَهُ
﴾ 80:17 ﴿
﴾80:17﴿
17. மனிதன் சபிக்கப்பட்டு விட்டான். அவன் எப்படி நன்றி கெட்டவனாக இருக்கிறான்?
مِنْ أَيِّ شَيْءٍ خَلَقَهُ
﴾ 80:18 ﴿
﴾80:18﴿
18. எந்தப் பொருளிலிருந்து அவனை (இறைவன்) படைத்தான்?
مِن نُّطْفَةٍ خَلَقَهُ فَقَدَّرَهُ
﴾ 80:19 ﴿
﴾80:19﴿
19. விந்துத் துளியிலிருந்து அவனைப் படைத்து அவனுக்கு (விதியை) நிர்ணயித்தான்.506
ثُمَّ السَّبِيلَ يَسَّرَهُ
﴾ 80:20 ﴿
﴾80:20﴿
20. பின்னர் வழியை அவனுக்கு எளிதாக்கினான்.
ثُمَّ أَمَاتَهُ فَأَقْبَرَهُ
﴾ 80:21 ﴿
﴾80:21﴿
21. பின்னர் அவனை மரணிக்கச் செய்து மண்ணறைக்கு அனுப்புகிறான்.
ثُمَّ إِذَا شَاءَ أَنشَرَهُ
﴾ 80:22 ﴿
﴾80:22﴿
22. பின்னர் தான் நாடும்போது அவனை எழுப்புவான்.
كَلَّا لَمَّا يَقْضِ مَا أَمَرَهُ
﴾ 80:23 ﴿
﴾80:23﴿
23. அவ்வாறில்லை! (இறைவன்) கட்டளையிட்டதை அவன் நிறைவேற்றவில்லை.
فَلْيَنظُرِ الْإِنسَانُ إِلَىٰ طَعَامِهِ
﴾ 80:24 ﴿
﴾80:24﴿
24. மனிதன் தனது உணவைக் கவனிக்கட்டும்!
أَنَّا صَبَبْنَا الْمَاءَ صَبًّا
﴾ 80:25 ﴿
﴾80:25﴿
25. நாமே தண்ணீரை (வானிலிருந்து) ஊற்றினோம்.
ثُمَّ شَقَقْنَا الْأَرْضَ شَقًّا
﴾ 80:26 ﴿
﴾80:26﴿
26. பின்னர் பூமியை முறையாகப் பிளந்தோம்.
فَأَنبَتْنَا فِيهَا حَبًّا وَعِنَبًا وَقَضْبًا وَزَيْتُونًا وَنَخْلًا وَحَدَائِقَ غُلْبًا وَفَاكِهَةً وَأَبًّا مَّتَاعًا لَّكُمْ وَلِأَنْعَامِكُمْ
﴾ 80:27,28,29,30,31,32 ﴿
﴾80:27,28,29,30,31,32﴿
27, 28, 29, 30, 31, 32. உங்களுக்கும், உங்கள் கால்நடைகளுக்கும் பயன்படுவதற்காக தானியத்தையும், திராட்சையையும், புற்பூண்டையும், ஒலிவ மரத்தையும், பேரீச்சை மரத்தையும், அடர்ந்த தோப்புகளையும், கனிகளையும், தீவனங்களையும் அதில் முளைக்கச் செய்தோம்.26
فَإِذَا جَاءَتِ الصَّاخَّةُ يَوْمَ يَفِرُّ الْمَرْءُ مِنْ أَخِيهِ وَأُمِّهِ وَأَبِيهِ وَصَاحِبَتِهِ وَبَنِيهِ
﴾ 80:33,34,35,36 ﴿
﴾80:33,34,35,36﴿
33, 34, 35, 36. அந்தச் சப்தம் ஏற்படும் அந்த நாளில்1 மனிதன் தனது சகோதரனையும், தாயையும், தந்தையையும், மனைவியையும், பிள்ளைகளையும் விட்டு ஓடுவான்.26
لِكُلِّ امْرِئٍ مِّنْهُمْ يَوْمَئِذٍ شَأْنٌ يُغْنِيهِ
﴾ 80:37 ﴿
﴾80:37﴿
37. அந்நாளில்1 அவர்களில் ஒவ்வொரு மனிதனுக்கும் முழுக் கவனத்தை ஈர்க்கும் காரியம் உண்டு.
وُجُوهٌ يَوْمَئِذٍ مُّسْفِرَةٌ
﴾ 80:38 ﴿
﴾80:38﴿
38. அந்நாளில்1 சில முகங்கள் ஒளி வீசும்.
ضَاحِكَةٌ مُّسْتَبْشِرَةٌ
﴾ 80:39 ﴿
﴾80:39﴿
39. மகிழ்ச்சியுடன் சிரித்துக் கொண்டிருக்கும்
وَوُجُوهٌ يَوْمَئِذٍ عَلَيْهَا غَبَرَةٌ
﴾ 80:40 ﴿
﴾80:40﴿
40. அந்நாளில்1 சில முகங்கள் மீது புழுதி படிந்திருக்கும்.
تَرْهَقُهَا قَتَرَةٌ
﴾ 80:41 ﴿
﴾80:41﴿
41. அவற்றைக் கருமை மூடியிருக்கும்.
أُولَـٰئِكَ هُمُ الْكَفَرَةُ الْفَجَرَةُ
﴾ 80:42 ﴿
﴾80:42﴿
42. அவர்களே (ஏகஇறைவனை) மறுப்போரான பாவிகள்.