அந்நாஜிஆத்‌

கைப்பற்றுவோர் • 46 வசனங்கள்

وَالنَّازِعَاتِ غَرْقًا 

﴾ 79:1 ﴿
﴾79:1﴿

1. பலமாகக் கைப்பற்றுவோர்165 (வானவர்கள்) மீது ஆணையாக!379

وَالنَّاشِطَاتِ نَشْطًا 

﴾ 79:2 ﴿
﴾79:2﴿

2. எளிதாகக் கைப்பற்றுவோர்165 மீது ஆணையாக!379

وَالسَّابِحَاتِ سَبْحًا  فَالسَّابِقَاتِ سَبْقًا  فَالْمُدَبِّرَاتِ أَمْرًا 

﴾ 79:3,4,5 ﴿
﴾79:3,4,5﴿

3, 4, 5. நீந்திச் செல்வோர் மீதும், முந்திச் செல்வோர் மீதும், காரியங்களை நிர்வாகிப்போர் மீதும் ஆணையாக! 379&26

يَوْمَ تَرْجُفُ الرَّاجِفَةُ 

﴾ 79:6 ﴿
﴾79:6﴿

6. அந்தப் பெரு நடுக்கத்தை ஏற்படுத்துதல் (ஸூர் ஊதுதல்) நிகழும் நாள்!1

تَتْبَعُهَا الرَّادِفَةُ 

﴾ 79:7 ﴿
﴾79:7﴿

7. அடுத்தது (இரண்டாம் ஸூர்), அதைத் தொடர்ந்து வரும்!

قُلُوبٌ يَوْمَئِذٍ وَاجِفَةٌ 

﴾ 79:8 ﴿
﴾79:8﴿

8. அந்நாளில்1 சில உள்ளங்கள் கலக்கம் கொண்டிருக்கும்.

أَبْصَارُهَا خَاشِعَةٌ 

﴾ 79:9 ﴿
﴾79:9﴿

9. அவற்றின் பார்வைகள் தாழ்ந்திருக்கும்.

يَقُولُونَ أَإِنَّا لَمَرْدُودُونَ فِي الْحَافِرَةِ 

﴾ 79:10 ﴿
﴾79:10﴿

10. குழியிலிருந்து நாம் எழுப்பப்படுவோமா?' என்று கேட்கின்றனர்.

أَإِذَا كُنَّا عِظَامًا نَّخِرَةً 

﴾ 79:11 ﴿
﴾79:11﴿

11. மக்கிப் போன எலும்புகளாக ஆகி விட்ட பிறகுமா?

قَالُوا تِلْكَ إِذًا كَرَّةٌ خَاسِرَةٌ 

﴾ 79:12 ﴿
﴾79:12﴿

12. அப்படியானால் அது நட்டத்தை ஏற்படுத்தும் மீளுதல் தான் என்றும் கூறுகின்றனர்.

فَإِنَّمَا هِيَ زَجْرَةٌ وَاحِدَةٌ 

﴾ 79:13 ﴿
﴾79:13﴿

13. அது ஒரே ஒரு சப்தம் தான்!

فَإِذَا هُم بِالسَّاهِرَةِ 

﴾ 79:14 ﴿
﴾79:14﴿

14. உடனே அவர்கள் வெட்ட வெளியில் நிற்பார்கள்.

هَلْ أَتَاكَ حَدِيثُ مُوسَىٰ 

﴾ 79:15 ﴿
﴾79:15﴿

15. மூஸாவைப் பற்றிய செய்தி உமக்குக் கிடைத்ததா?

إِذْ نَادَاهُ رَبُّهُ بِالْوَادِ الْمُقَدَّسِ طُوًى 

﴾ 79:16 ﴿
﴾79:16﴿

16. அவரை அவரது இறைவன் 'துவா' எனும் தூய பள்ளத்தாக்கில் அழைத்தான்.

اذْهَبْ إِلَىٰ فِرْعَوْنَ إِنَّهُ طَغَىٰ 

﴾ 79:17 ﴿
﴾79:17﴿

17. 'நீர் ஃபிர்அவ்னிடம் செல்வீராக! அவன் வரம்பு மீறி விட்டான்'

فَقُلْ هَل لَّكَ إِلَىٰ أَن تَزَكَّىٰ  وَأَهْدِيَكَ إِلَىٰ رَبِّكَ فَتَخْشَىٰ 

﴾ 79:18,19 ﴿
﴾79:18,19﴿

18, 19. 'நீ பரிசுத்தமாகிட உனக்கு விருப்பம் உண்டா? நான் உனது இறைவனை நோக்கி வழிகாட்டுகிறேன்! (இறைவனை) அஞ்சிக் கொள்! எனக் கூறுவீராக' (என்று இறைவன் கூறினான்.26

فَأَرَاهُ الْآيَةَ الْكُبْرَىٰ 

﴾ 79:20 ﴿
﴾79:20﴿

20. அவனுக்கு (மூஸா) மிகப் பெரிய சான்றைக் காட்டினார்.

فَكَذَّبَ وَعَصَىٰ 

﴾ 79:21 ﴿
﴾79:21﴿

21. அவன் பொய்யெனக் கருதி பாவம் செய்தான்.

ثُمَّ أَدْبَرَ يَسْعَىٰ 

﴾ 79:22 ﴿
﴾79:22﴿

22. பின்னர் விரைவாகப் பின்வாங்கினான்.

فَحَشَرَ فَنَادَىٰ 

﴾ 79:23 ﴿
﴾79:23﴿

23. (மக்களைத்) திரட்டி, பிரகடனம் செய்தான்.

فَقَالَ أَنَا رَبُّكُمُ الْأَعْلَىٰ 

﴾ 79:24 ﴿
﴾79:24﴿

24. நானே உங்களின் மிகப் பெரிய இறைவன் என்றான்.

فَأَخَذَهُ اللَّهُ نَكَالَ الْآخِرَةِ وَالْأُولَىٰ 

﴾ 79:25 ﴿
﴾79:25﴿

25. அவனை இம்மையிலும், மறுமையிலும் வேதனை மூலம் அல்லாஹ் பிடித்தான்.

إِنَّ فِي ذَٰلِكَ لَعِبْرَةً لِّمَن يَخْشَىٰ 

﴾ 79:26 ﴿
﴾79:26﴿

26. (இறைவனை) அஞ்சுபவருக்கு இதில் படிப்பினை உண்டு.

أَأَنتُمْ أَشَدُّ خَلْقًا أَمِ السَّمَاءُ ۚ بَنَاهَا 

﴾ 79:27 ﴿
﴾79:27﴿

27. படைக்கப்படுவதில் நீங்கள் கடினமானவர்களா? அல்லது வானமா?507 அதை அவன் நிறுவினான்.

رَفَعَ سَمْكَهَا فَسَوَّاهَا 

﴾ 79:28 ﴿
﴾79:28﴿

28. அதன் முகட்டை உயர்த்திச் சீராக்கினான்.

وَأَغْطَشَ لَيْلَهَا وَأَخْرَجَ ضُحَاهَا 

﴾ 79:29 ﴿
﴾79:29﴿

29. அதன் இரவை மூடி பகலை வெளிப்படுத்தினான்.

وَالْأَرْضَ بَعْدَ ذَٰلِكَ دَحَاهَا 

﴾ 79:30 ﴿
﴾79:30﴿

30. இதன் பின்னர் பூமியை விரித்தான்.

أَخْرَجَ مِنْهَا مَاءَهَا وَمَرْعَاهَا 

﴾ 79:31 ﴿
﴾79:31﴿

31. அதிலிருந்து அதற்கான தண்ணீரையும், மேய்ச்சல் பயிர்களையும் வெளிப்படுத்தினான்.

وَالْجِبَالَ أَرْسَاهَا 

﴾ 79:32 ﴿
﴾79:32﴿

32. மலைகளை முளைகளாக நாட்டினான்.248

مَتَاعًا لَّكُمْ وَلِأَنْعَامِكُمْ 

﴾ 79:33 ﴿
﴾79:33﴿

33. உங்களுக்கும், உங்கள் கால்நடைகளுக்கும் வாழ்க்கை வசதிக்காக (இவற்றை ஏற்படுத்தினான்).

فَإِذَا جَاءَتِ الطَّامَّةُ الْكُبْرَىٰ  يَوْمَ يَتَذَكَّرُ الْإِنسَانُ مَا سَعَىٰ 

﴾ 79:34,35 ﴿
﴾79:34,35﴿

34, 35. மாபெரும் அமளி ஏற்படும்போது மனிதன் தான் செய்ததைப் பற்றி அந்நாளில் எண்ணிப் பார்ப்பான்.26

وَبُرِّزَتِ الْجَحِيمُ لِمَن يَرَىٰ 

﴾ 79:36 ﴿
﴾79:36﴿

36. காண்போருக்கு (அருகில்) நரகம் வெளிப்படுத்தப்படும்.

فَأَمَّا مَن طَغَىٰ  وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا  فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَىٰ 

﴾ 79:37,38,39 ﴿
﴾79:37,38,39﴿

37, 38, 39. யார் வரம்பு மீறி, இவ்வுலக வாழ்வைத் தேர்ந்தெடுத்துக் கொண்டானோ அவனுக்கு நரகமே தங்குமிடம்.26

وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَىٰ  فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَىٰ 

﴾ 79:40,41 ﴿
﴾79:40,41﴿

40, 41. யார் தமது இறைவன் முன்னே நிற்பது பற்றி அஞ்சி, மனோ இச்சையை விட்டும் தன்னை விலக்கிக் கொண்டாரோ சொர்க்கமே (அவரது) தங்குமிடம்.26

يَسْأَلُونَكَ عَنِ السَّاعَةِ أَيَّانَ مُرْسَاهَا 

﴾ 79:42 ﴿
﴾79:42﴿

42. (முஹம்மதே!) யுகமுடிவு நேரம் பற்றி அது எப்போது ஏற்படும்? என உம்மிடம் கேட்கின்றனர்.

فِيمَ أَنتَ مِن ذِكْرَاهَا 

﴾ 79:43 ﴿
﴾79:43﴿

43. அது பற்றிய விளக்கம் உம்மிடம் எங்கே இருக்கிறது?

إِلَىٰ رَبِّكَ مُنتَهَاهَا 

﴾ 79:44 ﴿
﴾79:44﴿

44. அதன் முடிவு உமது இறைவனிடமே உள்ளது.

إِنَّمَا أَنتَ مُنذِرُ مَن يَخْشَاهَا 

﴾ 79:45 ﴿
﴾79:45﴿

45. அதை அஞ்சுவோருக்கு நீர் எச்சரிப்பவரே.

كَأَنَّهُمْ يَوْمَ يَرَوْنَهَا لَمْ يَلْبَثُوا إِلَّا عَشِيَّةً أَوْ ضُحَاهَا 

﴾ 79:46 ﴿
﴾79:46﴿

46. அதை அவர்கள் காணும்போது ஒரு மாலைப்பொழுதோ, அல்லது அதன் காலைப்பொழுதோ தவிர வாழவில்லை என்பது போல் அவர்களுக்குத் தோன்றும்.

79

Settings