அந்நாஜிஆத்
கைப்பற்றுவோர் • 46 வசனங்கள்
وَالنَّازِعَاتِ غَرْقًا
﴾ 79:1 ﴿
﴾79:1﴿
1. பலமாகக் கைப்பற்றுவோர்165 (வானவர்கள்) மீது ஆணையாக!379
وَالنَّاشِطَاتِ نَشْطًا
﴾ 79:2 ﴿
﴾79:2﴿
2. எளிதாகக் கைப்பற்றுவோர்165 மீது ஆணையாக!379
وَالسَّابِحَاتِ سَبْحًا فَالسَّابِقَاتِ سَبْقًا فَالْمُدَبِّرَاتِ أَمْرًا
﴾ 79:3,4,5 ﴿
﴾79:3,4,5﴿
3, 4, 5. நீந்திச் செல்வோர் மீதும், முந்திச் செல்வோர் மீதும், காரியங்களை நிர்வாகிப்போர் மீதும் ஆணையாக! 379&26
يَوْمَ تَرْجُفُ الرَّاجِفَةُ
﴾ 79:6 ﴿
﴾79:6﴿
6. அந்தப் பெரு நடுக்கத்தை ஏற்படுத்துதல் (ஸூர் ஊதுதல்) நிகழும் நாள்!1
تَتْبَعُهَا الرَّادِفَةُ
﴾ 79:7 ﴿
﴾79:7﴿
7. அடுத்தது (இரண்டாம் ஸூர்), அதைத் தொடர்ந்து வரும்!
قُلُوبٌ يَوْمَئِذٍ وَاجِفَةٌ
﴾ 79:8 ﴿
﴾79:8﴿
8. அந்நாளில்1 சில உள்ளங்கள் கலக்கம் கொண்டிருக்கும்.
أَبْصَارُهَا خَاشِعَةٌ
﴾ 79:9 ﴿
﴾79:9﴿
9. அவற்றின் பார்வைகள் தாழ்ந்திருக்கும்.
يَقُولُونَ أَإِنَّا لَمَرْدُودُونَ فِي الْحَافِرَةِ
﴾ 79:10 ﴿
﴾79:10﴿
10. குழியிலிருந்து நாம் எழுப்பப்படுவோமா?' என்று கேட்கின்றனர்.
أَإِذَا كُنَّا عِظَامًا نَّخِرَةً
﴾ 79:11 ﴿
﴾79:11﴿
11. மக்கிப் போன எலும்புகளாக ஆகி விட்ட பிறகுமா?
قَالُوا تِلْكَ إِذًا كَرَّةٌ خَاسِرَةٌ
﴾ 79:12 ﴿
﴾79:12﴿
12. அப்படியானால் அது நட்டத்தை ஏற்படுத்தும் மீளுதல் தான் என்றும் கூறுகின்றனர்.
فَإِنَّمَا هِيَ زَجْرَةٌ وَاحِدَةٌ
﴾ 79:13 ﴿
﴾79:13﴿
13. அது ஒரே ஒரு சப்தம் தான்!
فَإِذَا هُم بِالسَّاهِرَةِ
﴾ 79:14 ﴿
﴾79:14﴿
14. உடனே அவர்கள் வெட்ட வெளியில் நிற்பார்கள்.
هَلْ أَتَاكَ حَدِيثُ مُوسَىٰ
﴾ 79:15 ﴿
﴾79:15﴿
15. மூஸாவைப் பற்றிய செய்தி உமக்குக் கிடைத்ததா?
إِذْ نَادَاهُ رَبُّهُ بِالْوَادِ الْمُقَدَّسِ طُوًى
﴾ 79:16 ﴿
﴾79:16﴿
16. அவரை அவரது இறைவன் 'துவா' எனும் தூய பள்ளத்தாக்கில் அழைத்தான்.
اذْهَبْ إِلَىٰ فِرْعَوْنَ إِنَّهُ طَغَىٰ
﴾ 79:17 ﴿
﴾79:17﴿
17. 'நீர் ஃபிர்அவ்னிடம் செல்வீராக! அவன் வரம்பு மீறி விட்டான்'
فَقُلْ هَل لَّكَ إِلَىٰ أَن تَزَكَّىٰ وَأَهْدِيَكَ إِلَىٰ رَبِّكَ فَتَخْشَىٰ
﴾ 79:18,19 ﴿
﴾79:18,19﴿
18, 19. 'நீ பரிசுத்தமாகிட உனக்கு விருப்பம் உண்டா? நான் உனது இறைவனை நோக்கி வழிகாட்டுகிறேன்! (இறைவனை) அஞ்சிக் கொள்! எனக் கூறுவீராக' (என்று இறைவன் கூறினான்.26
فَأَرَاهُ الْآيَةَ الْكُبْرَىٰ
﴾ 79:20 ﴿
﴾79:20﴿
20. அவனுக்கு (மூஸா) மிகப் பெரிய சான்றைக் காட்டினார்.
فَكَذَّبَ وَعَصَىٰ
﴾ 79:21 ﴿
﴾79:21﴿
21. அவன் பொய்யெனக் கருதி பாவம் செய்தான்.
ثُمَّ أَدْبَرَ يَسْعَىٰ
﴾ 79:22 ﴿
﴾79:22﴿
22. பின்னர் விரைவாகப் பின்வாங்கினான்.
فَحَشَرَ فَنَادَىٰ
﴾ 79:23 ﴿
﴾79:23﴿
23. (மக்களைத்) திரட்டி, பிரகடனம் செய்தான்.
فَقَالَ أَنَا رَبُّكُمُ الْأَعْلَىٰ
﴾ 79:24 ﴿
﴾79:24﴿
24. நானே உங்களின் மிகப் பெரிய இறைவன் என்றான்.
فَأَخَذَهُ اللَّهُ نَكَالَ الْآخِرَةِ وَالْأُولَىٰ
﴾ 79:25 ﴿
﴾79:25﴿
25. அவனை இம்மையிலும், மறுமையிலும் வேதனை மூலம் அல்லாஹ் பிடித்தான்.
إِنَّ فِي ذَٰلِكَ لَعِبْرَةً لِّمَن يَخْشَىٰ
﴾ 79:26 ﴿
﴾79:26﴿
26. (இறைவனை) அஞ்சுபவருக்கு இதில் படிப்பினை உண்டு.
أَأَنتُمْ أَشَدُّ خَلْقًا أَمِ السَّمَاءُ ۚ بَنَاهَا
﴾ 79:27 ﴿
﴾79:27﴿
27. படைக்கப்படுவதில் நீங்கள் கடினமானவர்களா? அல்லது வானமா?507 அதை அவன் நிறுவினான்.
رَفَعَ سَمْكَهَا فَسَوَّاهَا
﴾ 79:28 ﴿
﴾79:28﴿
28. அதன் முகட்டை உயர்த்திச் சீராக்கினான்.
وَأَغْطَشَ لَيْلَهَا وَأَخْرَجَ ضُحَاهَا
﴾ 79:29 ﴿
﴾79:29﴿
29. அதன் இரவை மூடி பகலை வெளிப்படுத்தினான்.
وَالْأَرْضَ بَعْدَ ذَٰلِكَ دَحَاهَا
﴾ 79:30 ﴿
﴾79:30﴿
30. இதன் பின்னர் பூமியை விரித்தான்.
أَخْرَجَ مِنْهَا مَاءَهَا وَمَرْعَاهَا
﴾ 79:31 ﴿
﴾79:31﴿
31. அதிலிருந்து அதற்கான தண்ணீரையும், மேய்ச்சல் பயிர்களையும் வெளிப்படுத்தினான்.
وَالْجِبَالَ أَرْسَاهَا
﴾ 79:32 ﴿
﴾79:32﴿
32. மலைகளை முளைகளாக நாட்டினான்.248
مَتَاعًا لَّكُمْ وَلِأَنْعَامِكُمْ
﴾ 79:33 ﴿
﴾79:33﴿
33. உங்களுக்கும், உங்கள் கால்நடைகளுக்கும் வாழ்க்கை வசதிக்காக (இவற்றை ஏற்படுத்தினான்).
فَإِذَا جَاءَتِ الطَّامَّةُ الْكُبْرَىٰ يَوْمَ يَتَذَكَّرُ الْإِنسَانُ مَا سَعَىٰ
﴾ 79:34,35 ﴿
﴾79:34,35﴿
34, 35. மாபெரும் அமளி ஏற்படும்போது மனிதன் தான் செய்ததைப் பற்றி அந்நாளில் எண்ணிப் பார்ப்பான்.26
وَبُرِّزَتِ الْجَحِيمُ لِمَن يَرَىٰ
﴾ 79:36 ﴿
﴾79:36﴿
36. காண்போருக்கு (அருகில்) நரகம் வெளிப்படுத்தப்படும்.
فَأَمَّا مَن طَغَىٰ وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَىٰ
﴾ 79:37,38,39 ﴿
﴾79:37,38,39﴿
37, 38, 39. யார் வரம்பு மீறி, இவ்வுலக வாழ்வைத் தேர்ந்தெடுத்துக் கொண்டானோ அவனுக்கு நரகமே தங்குமிடம்.26
وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَىٰ فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَىٰ
﴾ 79:40,41 ﴿
﴾79:40,41﴿
40, 41. யார் தமது இறைவன் முன்னே நிற்பது பற்றி அஞ்சி, மனோ இச்சையை விட்டும் தன்னை விலக்கிக் கொண்டாரோ சொர்க்கமே (அவரது) தங்குமிடம்.26
يَسْأَلُونَكَ عَنِ السَّاعَةِ أَيَّانَ مُرْسَاهَا
﴾ 79:42 ﴿
﴾79:42﴿
42. (முஹம்மதே!) யுகமுடிவு நேரம் பற்றி அது எப்போது ஏற்படும்? என உம்மிடம் கேட்கின்றனர்.
فِيمَ أَنتَ مِن ذِكْرَاهَا
﴾ 79:43 ﴿
﴾79:43﴿
43. அது பற்றிய விளக்கம் உம்மிடம் எங்கே இருக்கிறது?
إِلَىٰ رَبِّكَ مُنتَهَاهَا
﴾ 79:44 ﴿
﴾79:44﴿
44. அதன் முடிவு உமது இறைவனிடமே உள்ளது.
إِنَّمَا أَنتَ مُنذِرُ مَن يَخْشَاهَا
﴾ 79:45 ﴿
﴾79:45﴿
45. அதை அஞ்சுவோருக்கு நீர் எச்சரிப்பவரே.
كَأَنَّهُمْ يَوْمَ يَرَوْنَهَا لَمْ يَلْبَثُوا إِلَّا عَشِيَّةً أَوْ ضُحَاهَا
﴾ 79:46 ﴿
﴾79:46﴿
46. அதை அவர்கள் காணும்போது ஒரு மாலைப்பொழுதோ, அல்லது அதன் காலைப்பொழுதோ தவிர வாழவில்லை என்பது போல் அவர்களுக்குத் தோன்றும்.