அந் நபா

அந்தச் செய்தி • 40 வசனங்கள்

عَمَّ يَتَسَاءَلُونَ 

﴾ 78:1 ﴿
﴾78:1﴿

1. எதைப் பற்றி அவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்?

عَنِ النَّبَإِ الْعَظِيمِ  الَّذِي هُمْ فِيهِ مُخْتَلِفُونَ 

﴾ 78:2,3 ﴿
﴾78:2,3﴿

2, 3. எதில் அவர்கள் முரண்பட்டிருக்கிறார்களோ அந்த மகத்தான செய்தியைப் பற்றி!26

كَلَّا سَيَعْلَمُونَ 

﴾ 78:4 ﴿
﴾78:4﴿

4. அவ்வாறில்லை! அறிந்து கொள்வார்கள்.

ثُمَّ كَلَّا سَيَعْلَمُونَ 

﴾ 78:5 ﴿
﴾78:5﴿

5. பின்னரும் அவ்வாறில்லை! அறிந்து கொள்வார்கள்.

أَلَمْ نَجْعَلِ الْأَرْضَ مِهَادًا  وَالْجِبَالَ أَوْتَادًا 

﴾ 78:6,7 ﴿
﴾78:6,7﴿

6,7. பூமியைத் தொட்டிலாகவும்,284 மலைகளை முளைகளாகவும்248 நாம் ஆக்கவில்லையா?26

وَخَلَقْنَاكُمْ أَزْوَاجًا 

﴾ 78:8 ﴿
﴾78:8﴿

8. உங்களை ஜோடிகளாகப் படைத்தோம்.

وَجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًا 

﴾ 78:9 ﴿
﴾78:9﴿

9. உங்கள் தூக்கத்தை ஓய்வாக ஆக்கினோம்.

وَجَعَلْنَا اللَّيْلَ لِبَاسًا 

﴾ 78:10 ﴿
﴾78:10﴿

10. இரவை ஆடையாக்கினோம்.

وَجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا 

﴾ 78:11 ﴿
﴾78:11﴿

11. பகலை வாழ்வதற்கான நேரமாக ஆக்கினோம்.

وَبَنَيْنَا فَوْقَكُمْ سَبْعًا شِدَادًا 

﴾ 78:12 ﴿
﴾78:12﴿

12. உங்களுக்கு மேல் பலமான ஏழினை (ஏழு வானங்களை) அமைத்தோம்.

وَجَعَلْنَا سِرَاجًا وَهَّاجًا 

﴾ 78:13 ﴿
﴾78:13﴿

13. ஒளி வீசும் விளக்கையும் ஏற்படுத்தினோம்.

وَأَنزَلْنَا مِنَ الْمُعْصِرَاتِ مَاءً ثَجَّاجًا  لِّنُخْرِجَ بِهِ حَبًّا وَنَبَاتًا  وَجَنَّاتٍ أَلْفَافًا 

﴾ 78:14,15,16 ﴿
﴾78:14,15,16﴿

14, 15, 16. தானியத்தையும், தாவரத்தையும், அடர்த்தியான சோலைகளையும் நாம் வெளிப்படுத்துவதற்காக கார்மேகங்களிலிருந்து அதிகமான நீரை இறக்கி வைத்தோம்.26

إِنَّ يَوْمَ الْفَصْلِ كَانَ مِيقَاتًا 

﴾ 78:17 ﴿
﴾78:17﴿

17. தீர்ப்பு நாள்1 நேரம் குறிக்கப்பட்டதாக இருக்கிறது.

يَوْمَ يُنفَخُ فِي الصُّورِ فَتَأْتُونَ أَفْوَاجًا 

﴾ 78:18 ﴿
﴾78:18﴿

18. ஸூர் ஊதப்படும் நாளில் பல கூட்டங்களாக வருவீர்கள்.

وَفُتِحَتِ السَّمَاءُ فَكَانَتْ أَبْوَابًا 

﴾ 78:19 ﴿
﴾78:19﴿

19. வானம்507 திறக்கப்பட்டு பல வாசல்களாக ஆகும்.

وَسُيِّرَتِ الْجِبَالُ فَكَانَتْ سَرَابًا 

﴾ 78:20 ﴿
﴾78:20﴿

20. மலைகள் பெயர்க்கப்பட்டு கானல் நீராக ஆகும்.

إِنَّ جَهَنَّمَ كَانَتْ مِرْصَادًا  لِّلطَّاغِينَ مَآبًا 

﴾ 78:21,22 ﴿
﴾78:21,22﴿

21, 22. வரம்பு மீறியோரின் தங்குமிடமாக நரகம் காத்துக் கொண்டிருக்கிறது.26

لَّابِثِينَ فِيهَا أَحْقَابًا 

﴾ 78:23 ﴿
﴾78:23﴿

23. அதில் யுகம் யுகமாகத் தங்குவார்கள்.

لَّا يَذُوقُونَ فِيهَا بَرْدًا وَلَا شَرَابًا 

﴾ 78:24 ﴿
﴾78:24﴿

24. அங்கே குளிர்ச்சியையும், (குளிர்) பானத்தையும் சுவைக்க மாட்டார்கள்.

إِلَّا حَمِيمًا وَغَسَّاقًا 

﴾ 78:25 ﴿
﴾78:25﴿

25. கொதி நீரையும், சீழையும் தவிர.

جَزَاءً وِفَاقًا 

﴾ 78:26 ﴿
﴾78:26﴿

26. இது செயலுக்கேற்ற கூலி!

إِنَّهُمْ كَانُوا لَا يَرْجُونَ حِسَابًا 

﴾ 78:27 ﴿
﴾78:27﴿

27. அவர்கள் (நமது) விசாரணையை நம்பாதிருந்தனர்.

وَكَذَّبُوا بِآيَاتِنَا كِذَّابًا 

﴾ 78:28 ﴿
﴾78:28﴿

28. நமது வசனங்களை ஒரேயடியாகப் பொய்யெனக் கருதினர்.

وَكُلَّ شَيْءٍ أَحْصَيْنَاهُ كِتَابًا 

﴾ 78:29 ﴿
﴾78:29﴿

29. ஒவ்வொரு பொருளையும் எழுத்தில் நாம் வரையறுத்துள்ளோம்.

فَذُوقُوا فَلَن نَّزِيدَكُمْ إِلَّا عَذَابًا 

﴾ 78:30 ﴿
﴾78:30﴿

30. சுவைத்துப் பாருங்கள்! உங்களுக்கு வேதனையைத் தவிர வேறு எதையும் அதிகமாக்க மாட்டோம்.

إِنَّ لِلْمُتَّقِينَ مَفَازًا  حَدَائِقَ وَأَعْنَابًا  وَكَوَاعِبَ أَتْرَابًا  وَكَأْسًا دِهَاقًا 

﴾ 78:31,32,33,34 ﴿
﴾78:31,32,33,34﴿

31, 32, 33, 34. இறையச்சமுடையோருக்கு வெற்றித் தலமும், தோட்டங்களும், திராட்சைகளும், சமவயதுடைய கட்டழகியரும், நிரம்பிய கிண்ணங்களும் உண்டு.26

لَّا يَسْمَعُونَ فِيهَا لَغْوًا وَلَا كِذَّابًا 

﴾ 78:35 ﴿
﴾78:35﴿

35. அங்கே வீணானதையோ, பொய்யையோ செவியுற மாட்டார்கள்.

جَزَاءً مِّن رَّبِّكَ عَطَاءً حِسَابًا 

﴾ 78:36 ﴿
﴾78:36﴿

36. இது உமது இறைவனிடமிருந்து கணக்கிட்டு வழங்கப்பட்ட கூலி.

رَّبِّ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَا بَيْنَهُمَا الرَّحْمَـٰنِ ۖ لَا يَمْلِكُونَ مِنْهُ خِطَابًا 

﴾ 78:37 ﴿
﴾78:37﴿

37. அவன் வானங்கள்,507 பூமி மற்றும் அவற்றுக்கு இடைப்பட்டவற்றின் இறைவன்; அளவற்ற அருளாளன். அவனிடம் உரையாடவும் அவர்களுக்கு இயலாது.

يَوْمَ يَقُومُ الرُّوحُ وَالْمَلَائِكَةُ صَفًّا ۖ لَّا يَتَكَلَّمُونَ إِلَّا مَنْ أَذِنَ لَهُ الرَّحْمَـٰنُ وَقَالَ صَوَابًا 

﴾ 78:38 ﴿
﴾78:38﴿

38. ரூஹும்,444 வானவர்களும் அணி வகுத்து நிற்கும் நாளில் அளவற்ற அருளாளன் அனுமதியளித்து, நேர்மையைக் கூறுபவரைத் தவிர யாரும் பேச மாட்டார்கள்.

ذَٰلِكَ الْيَوْمُ الْحَقُّ ۖ فَمَن شَاءَ اتَّخَذَ إِلَىٰ رَبِّهِ مَآبًا 

﴾ 78:39 ﴿
﴾78:39﴿

39. இதுவே உண்மையான நாள்!1 விரும்புகிறவர் தமது இறைவனை நோக்கி ஒதுங்குமிடத்தை எடுத்துக் கொள்ளட்டும்.

إِنَّا أَنذَرْنَاكُمْ عَذَابًا قَرِيبًا يَوْمَ يَنظُرُ الْمَرْءُ مَا قَدَّمَتْ يَدَاهُ وَيَقُولُ الْكَافِرُ يَا لَيْتَنِي كُنتُ تُرَابًا 

﴾ 78:40 ﴿
﴾78:40﴿

40. சமீபத்தில் உள்ள வேதனை குறித்து உங்களை நாம் எச்சரிக்கிறோம். அந்நாளில்1 தான் செய்த வினையை மனிதன் காண்பான். நான் மண்ணாக ஆகியிருக்கக் கூடாதா? என்று (ஏகஇறைவனை) மறுப்பவன் கூறுவான்.

78

Settings