அல் கியாமா

இறைவன் முன்னால் நிற்கும் நாள் • 40 வசனங்கள்

لَا أُقْسِمُ بِيَوْمِ الْقِيَامَةِ 

﴾ 75:1 ﴿
﴾75:1﴿

1. கியாமத் நாள்1 மீது சத்தியம் செய்கிறேன்.

وَلَا أُقْسِمُ بِالنَّفْسِ اللَّوَّامَةِ 

﴾ 75:2 ﴿
﴾75:2﴿

2. குறை கூறிக்கொண்டிருக்கும் உள்ளத்தின் மீது சத்தியம் செய்கிறேன்.

أَيَحْسَبُ الْإِنسَانُ أَلَّن نَّجْمَعَ عِظَامَهُ 

﴾ 75:3 ﴿
﴾75:3﴿

3. மனிதனின் எலும்புகளை ஒன்று திரட்ட மாட்டோம் என்று அவன் எண்ணுகிறானா?

بَلَىٰ قَادِرِينَ عَلَىٰ أَن نُّسَوِّيَ بَنَانَهُ 

﴾ 75:4 ﴿
﴾75:4﴿

4. அவ்வாறில்லை! அவனது விரல் நுனிகளையும் சீராக்க நாம் ஆற்றலுடையவர்கள்.208

بَلْ يُرِيدُ الْإِنسَانُ لِيَفْجُرَ أَمَامَهُ 

﴾ 75:5 ﴿
﴾75:5﴿

5. ஆனால் அவனுக்கு (இறைவனுக்கு) முன்னால் குற்றம் செய்யவே மனிதன் நாடுகிறான்.

يَسْأَلُ أَيَّانَ يَوْمُ الْقِيَامَةِ 

﴾ 75:6 ﴿
﴾75:6﴿

6. 'கியாமத் நாள்1 எப்போது?' எனக் கேட்கிறான்.

فَإِذَا بَرِقَ الْبَصَرُ  وَخَسَفَ الْقَمَرُ  وَجُمِعَ الشَّمْسُ وَالْقَمَرُ  يَقُولُ الْإِنسَانُ يَوْمَئِذٍ أَيْنَ الْمَفَرُّ 

﴾ 75:7,8,9,10 ﴿
﴾75:7,8,9,10﴿

7, 8, 9, 10. பார்வை நிலை குத்தும்போது, சந்திரனுக்குக் கிரகணம் ஏற்படும்போது, சூரியனும், சந்திரனும் ஒன்று சேர்க்கப்படும் போது, வெருண்டோடும் இடம் எங்கே என்று அந்நாளில்1 மனிதன் கேட்பான்.26

كَلَّا لَا وَزَرَ 

﴾ 75:11 ﴿
﴾75:11﴿

11. அவ்வாறில்லை! தப்பிக்கும் எந்த இடமும் இல்லை.

إِلَىٰ رَبِّكَ يَوْمَئِذٍ الْمُسْتَقَرُّ 

﴾ 75:12 ﴿
﴾75:12﴿

12. அந்நாளில் உமது இறைவனிடமே தங்குமிடம் இருக்கும்.

يُنَبَّأُ الْإِنسَانُ يَوْمَئِذٍ بِمَا قَدَّمَ وَأَخَّرَ 

﴾ 75:13 ﴿
﴾75:13﴿

13. அந்நாளில்1 மனிதன் முற்படுத்தியது பற்றியும், பிற்படுத்தியது பற்றியும் அறிவிக்கப்படுவான்.

بَلِ الْإِنسَانُ عَلَىٰ نَفْسِهِ بَصِيرَةٌ  وَلَوْ أَلْقَىٰ مَعَاذِيرَهُ 

﴾ 75:14,15 ﴿
﴾75:14,15﴿

14, 15. மாறாக மனிதன் சமாதானங்களைக் கூறியபோதும் தன்னைப் பற்றி நன்கு தெரிந்தவனாக இருக்கிறான்.26

لَا تُحَرِّكْ بِهِ لِسَانَكَ لِتَعْجَلَ بِهِ 

﴾ 75:16 ﴿
﴾75:16﴿

16. (முஹம்மதே!) இதற்காக (குர்ஆனை மனனம் செய்வதற்காக) அவசரப்பட்டு உமது நாவை அசைக்காதீர்!152

إِنَّ عَلَيْنَا جَمْعَهُ وَقُرْآنَهُ 

﴾ 75:17 ﴿
﴾75:17﴿

17. அதைத் திரட்டுவதும், ஓதச் செய்வதும் நம்மைச் சேர்ந்தது.

فَإِذَا قَرَأْنَاهُ فَاتَّبِعْ قُرْآنَهُ 

﴾ 75:18 ﴿
﴾75:18﴿

18. எனவே நாம் அதை ஓதும்போது அந்த ஓதுதலைப் பின்பற்றுவீராக!152

ثُمَّ إِنَّ عَلَيْنَا بَيَانَهُ 

﴾ 75:19 ﴿
﴾75:19﴿

19. பின்னர் அதைத் தெளிவுபடுத்துவது நம்மைச் சேர்ந்தது.

كَلَّا بَلْ تُحِبُّونَ الْعَاجِلَةَ 

﴾ 75:20 ﴿
﴾75:20﴿

20. அவ்வாறில்லை! எனினும் நீங்கள் இம்மையை விரும்புகிறீர்கள்.

وَتَذَرُونَ الْآخِرَةَ 

﴾ 75:21 ﴿
﴾75:21﴿

21. மறுமையை1 விட்டுவிடுகிறீர்கள்.

وُجُوهٌ يَوْمَئِذٍ نَّاضِرَةٌ 

﴾ 75:22 ﴿
﴾75:22﴿

22. அந்நாளில்1 சில முகங்கள் மலர்ந்து இருக்கும்.

إِلَىٰ رَبِّهَا نَاظِرَةٌ 

﴾ 75:23 ﴿
﴾75:23﴿

23. தமது இறைவனைப் பார்த்துக்488 கொண்டிருக்கும்.

وَوُجُوهٌ يَوْمَئِذٍ بَاسِرَةٌ 

﴾ 75:24 ﴿
﴾75:24﴿

24. சில முகங்கள் அந்நாளில்1 சோகமாக இருக்கும்.

تَظُنُّ أَن يُفْعَلَ بِهَا فَاقِرَةٌ 

﴾ 75:25 ﴿
﴾75:25﴿

25. தமக்குப் பேராபத்து ஏற்படும் என அவை நினைக்கும்.

كَلَّا إِذَا بَلَغَتِ التَّرَاقِيَ  وَقِيلَ مَنْ ۜ رَاقٍ 

﴾ 75:26,27 ﴿
﴾75:26,27﴿

26, 27. அவ்வாறில்லை! உயிர், தொண்டைக் குழியை அடைந்து விடும்போது 'மந்திரிப்பவன் யார்?' எனக் கூறப்படும்.26

وَظَنَّ أَنَّهُ الْفِرَاقُ 

﴾ 75:28 ﴿
﴾75:28﴿

28. 'அதுவே பிரிவு' என்று அவன் விளங்கிக் கொள்வான்.

وَالْتَفَّتِ السَّاقُ بِالسَّاقِ 

﴾ 75:29 ﴿
﴾75:29﴿

29. காலோடு கால் பின்னிக் கொள்ளும்.

إِلَىٰ رَبِّكَ يَوْمَئِذٍ الْمَسَاقُ 

﴾ 75:30 ﴿
﴾75:30﴿

30. அந்நாளில்1 இழுத்துச் செல்லப்படுவது உமது இறைவனிடமே.

فَلَا صَدَّقَ وَلَا صَلَّىٰ 

﴾ 75:31 ﴿
﴾75:31﴿

31. அவன் நம்பவுமில்லை. தொழவுமில்லை.

وَلَـٰكِن كَذَّبَ وَتَوَلَّىٰ 

﴾ 75:32 ﴿
﴾75:32﴿

32. மாறாக பொய்யெனக் கருதிப் புறக்கணித்தான்.

ثُمَّ ذَهَبَ إِلَىٰ أَهْلِهِ يَتَمَطَّىٰ 

﴾ 75:33 ﴿
﴾75:33﴿

33. பின்னர் தனது குடும்பத்தினரிடம் கர்வமாகச் சென்றான்.

أَوْلَىٰ لَكَ فَأَوْلَىٰ 

﴾ 75:34 ﴿
﴾75:34﴿

34. உனக்கு நெருங்கி விட்டது! இன்னும் நெருங்கி விட்டது!

ثُمَّ أَوْلَىٰ لَكَ فَأَوْلَىٰ 

﴾ 75:35 ﴿
﴾75:35﴿

35. பின்னரும் உனக்கு நெருங்கி விட்டது! மேலும் நெருங்கி விட்டது!

أَيَحْسَبُ الْإِنسَانُ أَن يُتْرَكَ سُدًى 

﴾ 75:36 ﴿
﴾75:36﴿

36. வெறுமனே விடப்படுவான் என்று மனிதன் எண்ணுகிறானா?

أَلَمْ يَكُ نُطْفَةً مِّن مَّنِيٍّ يُمْنَىٰ 

﴾ 75:37 ﴿
﴾75:37﴿

37. அவன் செலுத்தப்படும் விந்தின் சிறு துளியாக இருக்கவில்லையா?506

ثُمَّ كَانَ عَلَقَةً فَخَلَقَ فَسَوَّىٰ 

﴾ 75:38 ﴿
﴾75:38﴿

38. பின்னர் கருவுற்ற சினைமுட்டையானான்.365&506 பின்னர் (இறைவன்) படைத்துச் சீராக்கினான்.

فَجَعَلَ مِنْهُ الزَّوْجَيْنِ الذَّكَرَ وَالْأُنثَىٰ 

﴾ 75:39 ﴿
﴾75:39﴿

39. அவனிலிருந்து437 ஆண், பெண் என ஜோடியை ஏற்படுத்தினான்.

أَلَيْسَ ذَٰلِكَ بِقَادِرٍ عَلَىٰ أَن يُحْيِيَ الْمَوْتَىٰ 

﴾ 75:40 ﴿
﴾75:40﴿

40. இத்தகையவன் இறந்தோரை உயிர்ப்பிக்க ஆற்றலுடையவன் இல்லையா?

75

Settings