அல் மஆரிஜ்

தகுதிகள் • 44 வசனங்கள்

سَأَلَ سَائِلٌ بِعَذَابٍ وَاقِعٍ  لِّلْكَافِرِينَ لَيْسَ لَهُ دَافِعٌ  مِّنَ اللَّهِ ذِي الْمَعَارِجِ 

﴾ 70:1,2,3 ﴿
﴾70:1,2,3﴿

1, 2, 3. தகுதிகள் உடைய அல்லாஹ்விடமிருந்து (ஏகஇறைவனை) மறுப்போருக்கு நிகழவுள்ள வேதனை குறித்துக் கேள்வி கேட்பவன் கேட்கிறான். அதை (வேதனையை) தடுப்பவன் யாருமில்லை.26

تَعْرُجُ الْمَلَائِكَةُ وَالرُّوحُ إِلَيْهِ فِي يَوْمٍ كَانَ مِقْدَارُهُ خَمْسِينَ أَلْفَ سَنَةٍ 

﴾ 70:4 ﴿
﴾70:4﴿

4. வானவர்களும், ரூஹும்444 ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு நிகரான ஒரு நாளில் அவனிடம் ஏறிச் செல்வர்.293

فَاصْبِرْ صَبْرًا جَمِيلًا 

﴾ 70:5 ﴿
﴾70:5﴿

5. எனவே அழகிய பொறுமையைக் கடைப்பிடிப்பீராக!

إِنَّهُمْ يَرَوْنَهُ بَعِيدًا 

﴾ 70:6 ﴿
﴾70:6﴿

6. அவர்கள் அதைத் தொலைவாகக் காண்கின்றனர்.

وَنَرَاهُ قَرِيبًا 

﴾ 70:7 ﴿
﴾70:7﴿

7. நாமோ அருகில் உள்ளதாகக் காண்கிறோம்.

يَوْمَ تَكُونُ السَّمَاءُ كَالْمُهْلِ 

﴾ 70:8 ﴿
﴾70:8﴿

8. அந்நாளில் வானம்507 உருக்கிய செம்பு போல் ஆகும்.

وَتَكُونُ الْجِبَالُ كَالْعِهْنِ 

﴾ 70:9 ﴿
﴾70:9﴿

9. மலைகள் உதிர்க்கப்பட்ட கம்பளி போல் ஆகும்.

وَلَا يَسْأَلُ حَمِيمٌ حَمِيمًا 

﴾ 70:10 ﴿
﴾70:10﴿

10. எந்த நண்பனும் நண்பனை விசாரிக்க மாட்டான்.

يُبَصَّرُونَهُمْ ۚ يَوَدُّ الْمُجْرِمُ لَوْ يَفْتَدِي مِنْ عَذَابِ يَوْمِئِذٍ بِبَنِيهِ  وَصَاحِبَتِهِ وَأَخِيهِ  وَفَصِيلَتِهِ الَّتِي تُؤْوِيهِ  وَمَن فِي الْأَرْضِ جَمِيعًا ثُمَّ يُنجِيهِ 

﴾ 70:11,12,13,14 ﴿
﴾70:11,12,13,14﴿

11, 12, 13, 14. அவர்கள் ஒருவருக்கொருவர் காட்டப்படுவார்கள். அந்நாளின்1 வேதனைக்கு ஈடாகத் தனது சந்ததிகளையும், மனைவியையும், சகோதரனையும், தன்னை அரவணைத்த உறவினர்களையும், பூமியில் உள்ள அனைவரையும், பணயம் வைத்து பின்னர் விடுதலையாகலாம் என்று குற்றவாளி விரும்புவான்.26

كَلَّا ۖ إِنَّهَا لَظَىٰ 

﴾ 70:15 ﴿
﴾70:15﴿

15. அவ்வாறில்லை! அது பெரும் நெருப்பாகும்.

نَزَّاعَةً لِّلشَّوَىٰ 

﴾ 70:16 ﴿
﴾70:16﴿

16. அது தோலை உரிக்கும்.

تَدْعُو مَنْ أَدْبَرَ وَتَوَلَّىٰ  وَجَمَعَ فَأَوْعَىٰ 

﴾ 70:17,18 ﴿
﴾70:17,18﴿

17, 18. பின்வாங்கிப் புறக்கணித்தவனையும், (செல்வத்தை) சேர்த்துப் பாதுகாத்தவனையும் அது அழைக்கும்.26

۞ إِنَّ الْإِنسَانَ خُلِقَ هَلُوعًا 

﴾ 70:19 ﴿
﴾70:19﴿

19. மனிதன் பதறுபவனாக படைக்கப்பட்டுள்ளான்.368

إِذَا مَسَّهُ الشَّرُّ جَزُوعًا 

﴾ 70:20 ﴿
﴾70:20﴿

20. அவனுக்குத் தீங்கு ஏற்பட்டால் திடுக்கிடுகிறான்.

وَإِذَا مَسَّهُ الْخَيْرُ مَنُوعًا 

﴾ 70:21 ﴿
﴾70:21﴿

21. அவனுக்கு நன்மை ஏற்பட்டால் கொடுக்காமல் தடுப்பவனாக ஆகிறான்.

إِلَّا الْمُصَلِّينَ 

﴾ 70:22 ﴿
﴾70:22﴿

22. தொழுகையாளிகளைத் தவிர.

الَّذِينَ هُمْ عَلَىٰ صَلَاتِهِمْ دَائِمُونَ 

﴾ 70:23 ﴿
﴾70:23﴿

23. அவர்கள் தமது தொழுகையில் நிலைத்திருப்பார்கள்.

وَالَّذِينَ فِي أَمْوَالِهِمْ حَقٌّ مَّعْلُومٌ  لِّلسَّائِلِ وَالْمَحْرُومِ 

﴾ 70:24,25 ﴿
﴾70:24,25﴿

24, 25. யாசிப்பவர்க்கும், இல்லாதவருக்கும் அவர்களது செல்வங்களில் அறியப்பட்ட உரிமை இருக்கும்.26

وَالَّذِينَ يُصَدِّقُونَ بِيَوْمِ الدِّينِ 

﴾ 70:26 ﴿
﴾70:26﴿

26. அவர்கள் தீர்ப்பு நாளை1 நம்புவார்கள்.

وَالَّذِينَ هُم مِّنْ عَذَابِ رَبِّهِم مُّشْفِقُونَ 

﴾ 70:27 ﴿
﴾70:27﴿

27. அவர்கள் தமது இறைவனின் வேதனைக்கு அஞ்சுவார்கள்.

إِنَّ عَذَابَ رَبِّهِمْ غَيْرُ مَأْمُونٍ 

﴾ 70:28 ﴿
﴾70:28﴿

28. அவர்களின் இறைவனது வேதனை அச்சப்படத்தக்கதே.

وَالَّذِينَ هُمْ لِفُرُوجِهِمْ حَافِظُونَ  إِلَّا عَلَىٰ أَزْوَاجِهِمْ أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُمْ فَإِنَّهُمْ غَيْرُ مَلُومِينَ 

﴾ 70:29,30 ﴿
﴾70:29,30﴿

29, 30. தமது மனைவியர் அல்லது அடிமைப் பெண்கள்107 மீதே தவிர அவர்கள் தமது கற்புகளைக் காத்துக் கொள்வார்கள். அவர்கள் இழிவுபடுத்தப்பட்டோர் அல்லர்.26

فَمَنِ ابْتَغَىٰ وَرَاءَ ذَٰلِكَ فَأُولَـٰئِكَ هُمُ الْعَادُونَ 

﴾ 70:31 ﴿
﴾70:31﴿

31. இதற்கு அப்பால் தேடுவோரே வரம்பு மீறியவர்கள்.

وَالَّذِينَ هُمْ لِأَمَانَاتِهِمْ وَعَهْدِهِمْ رَاعُونَ 

﴾ 70:32 ﴿
﴾70:32﴿

32. அவர்கள் தமது அமானிதங்களையும், ஒப்பந்தத்தையும் பேணுவார்கள்.

وَالَّذِينَ هُم بِشَهَادَاتِهِمْ قَائِمُونَ 

﴾ 70:33 ﴿
﴾70:33﴿

33. அவர்கள் தமது சாட்சியங்களை நிலைநிறுத்துவார்கள்.

وَالَّذِينَ هُمْ عَلَىٰ صَلَاتِهِمْ يُحَافِظُونَ 

﴾ 70:34 ﴿
﴾70:34﴿

34. அவர்கள் தமது தொழுகையைப் பேணுவார்கள்.

أُولَـٰئِكَ فِي جَنَّاتٍ مُّكْرَمُونَ 

﴾ 70:35 ﴿
﴾70:35﴿

35. அவர்களே சொர்க்கச் சோலைகளில் மரியாதை செய்யப்படுபவர்கள்.

فَمَالِ الَّذِينَ كَفَرُوا قِبَلَكَ مُهْطِعِينَ  عَنِ الْيَمِينِ وَعَنِ الشِّمَالِ عِزِينَ 

﴾ 70:36,37 ﴿
﴾70:36,37﴿

36, 37. (முஹம்மதே!) நிராகரிப்போருக்கு என்ன நேர்ந்தது? வலப்புறமிருந்தும், இடப்புறமிருந்தும் கூட்டம் கூட்டமாக அவர்கள் உமக்கு முன்னே சுற்றி வருகின்றனர்.26

أَيَطْمَعُ كُلُّ امْرِئٍ مِّنْهُمْ أَن يُدْخَلَ جَنَّةَ نَعِيمٍ 

﴾ 70:38 ﴿
﴾70:38﴿

38. அவர்களில் ஒவ்வொரு மனிதனும் இன்பமான சொர்க்கத்திற்கு அனுப்பப்படுவதை விரும்புகிறானா?

كَلَّا ۖ إِنَّا خَلَقْنَاهُم مِّمَّا يَعْلَمُونَ 

﴾ 70:39 ﴿
﴾70:39﴿

39. அது நடக்காது. அவர்களுக்குத் தெரிந்த(மூலத்)திலிருந்து அவர்களை நாம் படைத்தோம்.

فَلَا أُقْسِمُ بِرَبِّ الْمَشَارِقِ وَالْمَغَارِبِ إِنَّا لَقَادِرُونَ  عَلَىٰ أَن نُّبَدِّلَ خَيْرًا مِّنْهُمْ وَمَا نَحْنُ بِمَسْبُوقِينَ 

﴾ 70:40,41 ﴿
﴾70:40,41﴿

40, 41. கிழக்குகளுக்கும், மேற்குகளுக்குமுரிய335 இறைவன் மேல் ஆணையிடுகிறேன்.379 அவர்களை விடச் சிறந்தோரைப் பகரமாக்கிட நாம் ஆற்றலுடையவர்கள். நாம் தோற்போர் அல்லர்.26

فَذَرْهُمْ يَخُوضُوا وَيَلْعَبُوا حَتَّىٰ يُلَاقُوا يَوْمَهُمُ الَّذِي يُوعَدُونَ 

﴾ 70:42 ﴿
﴾70:42﴿

42. அவர்களுக்கு எச்சரிக்கப்பட்ட நாளை1 அவர்கள் சந்திக்கும் வரை அவர்கள் வீணிலும், விளையாட்டிலும் மூழ்கிக் கிடக்க விட்டுவிடுவீராக!

يَوْمَ يَخْرُجُونَ مِنَ الْأَجْدَاثِ سِرَاعًا كَأَنَّهُمْ إِلَىٰ نُصُبٍ يُوفِضُونَ 

﴾ 70:43 ﴿
﴾70:43﴿

43. பலி பீடங்களை135 நோக்கி விரைந்து செல்பவர்களைப் போல் அந்நாளில் அவர்கள் மண்ணறைகளில் இருந்து வேகமாக வெளியேறுவார்கள்.238

خَاشِعَةً أَبْصَارُهُمْ تَرْهَقُهُمْ ذِلَّةٌ ۚ ذَٰلِكَ الْيَوْمُ الَّذِي كَانُوا يُوعَدُونَ 

﴾ 70:44 ﴿
﴾70:44﴿

44. அவர்களின் பார்வைகள் தாழ்ந்திருக்கும். இழிவு அவர்களைச் சூழ்ந்து கொள்ளும். இதுவே அவர்கள் எச்சரிக்கப்பட்ட நாள்1.

70

Settings