அல் வாகிஆ
அந்த நிகழ்ச்சி • 96 வசனங்கள்
إِذَا وَقَعَتِ الْوَاقِعَةُ لَيْسَ لِوَقْعَتِهَا كَاذِبَةٌ خَافِضَةٌ رَّافِعَةٌ
﴾ 56:1,2,3 ﴿
﴾56:1,2,3﴿
1, 2, 3. அந்த நிகழ்ச்சி1 நடக்கும்போது, அது நிகழ்வதைத் தடுப்பதோ, (அதைத்) தாமதப்படுத்துவதோ, முற்படுத்துவதோ எதுவுமில்லை.26
إِذَا رُجَّتِ الْأَرْضُ رَجًّا وَبُسَّتِ الْجِبَالُ بَسًّا فَكَانَتْ هَبَاءً مُّنبَثًّا
﴾ 56:4,5,6 ﴿
﴾56:4,5,6﴿
4, 5, 6. பூமி ஒரேயடியாக அசைக்கப்படும் போது, மலைகள் தூள் தூளாக்கப்படும்போது, அவை பரப்பப்பட்ட புழுதியாக ஆகும்.26
وَكُنتُمْ أَزْوَاجًا ثَلَاثَةً
﴾ 56:7 ﴿
﴾56:7﴿
7. நீங்கள் மூன்று பிரிவினராக ஆவீர்கள்.
فَأَصْحَابُ الْمَيْمَنَةِ مَا أَصْحَابُ الْمَيْمَنَةِ
﴾ 56:8 ﴿
﴾56:8﴿
8.(முதல் வகையினர்) வலப்புறத்திலிருப்போர். வலப்புறத்தில் இருப்போர் என்றால் என்ன?
وَأَصْحَابُ الْمَشْأَمَةِ مَا أَصْحَابُ الْمَشْأَمَةِ
﴾ 56:9 ﴿
﴾56:9﴿
9. (இரண்டாம் வகையினர்) இடது புறத்தில் இருப்பவர்கள். இடது புறத்தில் இருப்போர் என்றால் என்ன?
وَالسَّابِقُونَ السَّابِقُونَ
﴾ 56:10 ﴿
﴾56:10﴿
10. (மூன்றாவது வகையினர்) முந்தியோர். (தகுதியிலும்) முந்தியோரே.
أُولَـٰئِكَ الْمُقَرَّبُونَ
﴾ 56:11 ﴿
﴾56:11﴿
11. அவர்களே (இறைவனுக்கு) நெருக்கமானோர்.
فِي جَنَّاتِ النَّعِيمِ
﴾ 56:12 ﴿
﴾56:12﴿
12. இன்பமான சொர்க்கச் சோலைகளில் இருப்பார்கள்.
ثُلَّةٌ مِّنَ الْأَوَّلِينَ وَقَلِيلٌ مِّنَ الْآخِرِينَ عَلَىٰ سُرُرٍ مَّوْضُونَةٍ
﴾ 56:13,14,15 ﴿
﴾56:13,14,15﴿
13, 14, 15. முதல் வகையினரில் (வலப் புறத்தார்) ஒரு தொகையினரும், கடைசி வகையினரில் சிறு தொகையினரும் அலங்கரிக்கப்பட்ட கட்டில்களில் இருப்பார்கள்.26
مُّتَّكِئِينَ عَلَيْهَا مُتَقَابِلِينَ
﴾ 56:16 ﴿
﴾56:16﴿
16. ஒருவரையொருவர் எதிர்நோக்கி அவற்றின் மீது சாய்ந்திருப்பார்கள்.
يَطُوفُ عَلَيْهِمْ وِلْدَانٌ مُّخَلَّدُونَ بِأَكْوَابٍ وَأَبَارِيقَ وَكَأْسٍ مِّن مَّعِينٍ
﴾ 56:17,18 ﴿
﴾56:17,18﴿
17, 18. இளமை மாறாத சிறுவர்கள் மது ஊற்றிலிருந்து நிரப்பப்பட்ட குவளையுடனும், கிண்ணங்களுடனும், கெண்டிகளுடனும் அவர்களைச் சுற்றி வருவார்கள்.26
لَّا يُصَدَّعُونَ عَنْهَا وَلَا يُنزِفُونَ
﴾ 56:19 ﴿
﴾56:19﴿
19. அதனால் அவர்களுக்குத் தலைவலி வராது. போதை மயக்கத்திற்கும் ஆளாக மாட்டார்கள்.
وَفَاكِهَةٍ مِّمَّا يَتَخَيَّرُونَ وَلَحْمِ طَيْرٍ مِّمَّا يَشْتَهُونَ
﴾ 56:20,21 ﴿
﴾56:20,21﴿
20, 21. அவர்கள் விரும்புகிற கனிகளுடனும், அவர்கள் ஆசைப்படும் பறவைகளின் மாமிசத்துடனும் (அச்சிறுவர்கள் சுற்றி வருவார்கள்.)26
وَحُورٌ عِينٌ كَأَمْثَالِ اللُّؤْلُؤِ الْمَكْنُونِ
﴾ 56:22,23 ﴿
﴾56:22,23﴿
22, 23. ஹூருல் ஈன்களும்8 மறைத்து வைக்கப்பட்ட முத்துக்களைப் போல் இருப்பார்கள்.26
جَزَاءً بِمَا كَانُوا يَعْمَلُونَ
﴾ 56:24 ﴿
﴾56:24﴿
24. அவர்கள் (இவ்வுலகில்) செய்து கொண்டிருந்ததற்கு இது கூலியாகும்
لَا يَسْمَعُونَ فِيهَا لَغْوًا وَلَا تَأْثِيمًا
﴾ 56:25 ﴿
﴾56:25﴿
25. அங்கே வீணானதையோ, பாவமான சொல்லையோ செவியுற மாட்டார்கள்
إِلَّا قِيلًا سَلَامًا سَلَامًا
﴾ 56:26 ﴿
﴾56:26﴿
26. ஸலாம் ஸலாம்159 என்ற சொல்லைத் தவிர.
وَأَصْحَابُ الْيَمِينِ مَا أَصْحَابُ الْيَمِينِ
﴾ 56:27 ﴿
﴾56:27﴿
27. (அடுத்தது) வலது புறத்தில் இருப்பவர்கள்! வலது புறத்தில் இருப்போர் என்பது என்ன?
فِي سِدْرٍ مَّخْضُودٍ وَطَلْحٍ مَّنضُودٍ وَظِلٍّ مَّمْدُودٍ وَمَاءٍ مَّسْكُوبٍ وَفَاكِهَةٍ كَثِيرَةٍ لَّا مَقْطُوعَةٍ وَلَا مَمْنُوعَةٍ وَفُرُشٍ مَّرْفُوعَةٍ
﴾ 56:28,29,30,31,32,33,34 ﴿
﴾56:28,29,30,31,32,33,34﴿
28, 29, 30, 31, 32, 33, 34. அவர்கள் முள் இல்லாத இலந்தை மரத்தினடியிலும், குலைகள் தொங்கும் வாழை மரத்தினடியிலும், நீண்ட நிழல்களின் அடியிலும், ஓட்டிவிடப்படும் தண்ணீருக்கு அருகிலும், தடுக்கப்படாத, தீர்ந்து போகாத, ஏராளமான கனிகளுக்கு அருகிலும் உயரமான விரிப்புகளின் மீதும் இருப்பார்கள்.26
إِنَّا أَنشَأْنَاهُنَّ إِنشَاءً
﴾ 56:35 ﴿
﴾56:35﴿
35. அப்பெண்களை (ஹூருல் ஈன்களை) நாமே அழகுறப் படைத்தோம்.
فَجَعَلْنَاهُنَّ أَبْكَارًا عُرُبًا أَتْرَابًا
﴾ 56:36,37 ﴿
﴾56:36,37﴿
36, 37. அவர்களைக் கன்னியராகவும்,8 ஒத்த வயதினராகவும், நேசம் மிக்கோராகவும் ஆக்கினோம்.26
لِّأَصْحَابِ الْيَمِينِ ثُلَّةٌ مِّنَ الْأَوَّلِينَ وَثُلَّةٌ مِّنَ الْآخِرِينَ
﴾ 56:38,39,40 ﴿
﴾56:38,39,40﴿
38, 39, 40. இது முதல் வகையினரில் ஒரு தொகையினரும், கடைசி வகையினரில் ஒரு தொகையினரும் ஆகிய வலது புறத்தில் இருப்போருக்கு உரியது.26
وَأَصْحَابُ الشِّمَالِ مَا أَصْحَابُ الشِّمَالِ
﴾ 56:41 ﴿
﴾56:41﴿
41. (அடுத்த சாரார்) இடது புறத்தில் இருப்பவர்கள்! இடது புறத்தில் இருப்போர் என்பது என்ன?
فِي سَمُومٍ وَحَمِيمٍ وَظِلٍّ مِّن يَحْمُومٍ
﴾ 56:42,43 ﴿
﴾56:42,43﴿
42, 43. அவர்கள் அனல் காற்றிலும், கொதி நீரிலும், அடர்ந்த புகை நிழலிலும் இருப்பார்கள்.26
لَّا بَارِدٍ وَلَا كَرِيمٍ
﴾ 56:44 ﴿
﴾56:44﴿
44. அதில் குளிர்ச்சியும் இல்லை. இனிமையும் இல்லை.
إِنَّهُمْ كَانُوا قَبْلَ ذَٰلِكَ مُتْرَفِينَ
﴾ 56:45 ﴿
﴾56:45﴿
45. இதற்கு முன் அவர்கள் சொகுசாக வாழ்ந்து கொண்டிருந்தனர்.
وَكَانُوا يُصِرُّونَ عَلَى الْحِنثِ الْعَظِيمِ
﴾ 56:46 ﴿
﴾56:46﴿
46. பெரும் பாவத்தில் பிடிவாதமாக இருந்தனர்.
وَكَانُوا يَقُولُونَ أَئِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَعِظَامًا أَإِنَّا لَمَبْعُوثُونَ أَوَآبَاؤُنَا الْأَوَّلُونَ
﴾ 56:47,48 ﴿
﴾56:47,48﴿
47, 48. 'நாங்களும் முந்தைய எங்களின் முன்னோர்களும் மரணித்து மண்ணாகவும், எலும்புகளாகவும் ஆகும்போது உயிர்ப்பிக்கப்படுவோமா?' என்று கூறிக் கொண்டிருந்தார்கள்.26
قُلْ إِنَّ الْأَوَّلِينَ وَالْآخِرِينَ لَمَجْمُوعُونَ إِلَىٰ مِيقَاتِ يَوْمٍ مَّعْلُومٍ
﴾ 56:49,50 ﴿
﴾56:49,50﴿
49, 50. 'முந்தையவர்களும், பிந்தையவர்களும் அறியப்பட்ட ஒரு நாளின்1 குறிப்பிட்ட நேரத்தில் ஒன்று திரட்டப்படுவார்கள்' என்று கூறுவீராக!26
ثُمَّ إِنَّكُمْ أَيُّهَا الضَّالُّونَ الْمُكَذِّبُونَ لَآكِلُونَ مِن شَجَرٍ مِّن زَقُّومٍ
﴾ 56:51,52 ﴿
﴾56:51,52﴿
51, 52. பொய்யெனக் கருதிக் கொண்டு வழிகேட்டில் இருந்தவர்களே! பின்னர், நீங்கள் ஸக்கூம் எனும் மரத்திலிருந்து உண்பீர்கள்.26
فَمَالِئُونَ مِنْهَا الْبُطُونَ
﴾ 56:53 ﴿
﴾56:53﴿
53. அதனால் வயிறுகளை நிரப்புவீர்கள்.
فَشَارِبُونَ عَلَيْهِ مِنَ الْحَمِيمِ
﴾ 56:54 ﴿
﴾56:54﴿
54. அதற்கு மேல் கொதி நீரைக் குடிப்பீர்கள்.
فَشَارِبُونَ شُرْبَ الْهِيمِ
﴾ 56:55 ﴿
﴾56:55﴿
55. தாகம் கொண்ட ஒட்டகம் குடிப்பது போல் குடிப்பீர்கள்.
هَـٰذَا نُزُلُهُمْ يَوْمَ الدِّينِ
﴾ 56:56 ﴿
﴾56:56﴿
56. தீர்ப்பு நாளில் இதுவே அவர்களது விருந்து.
نَحْنُ خَلَقْنَاكُمْ فَلَوْلَا تُصَدِّقُونَ
﴾ 56:57 ﴿
﴾56:57﴿
57. நாமே உங்களைப் படைத்தோம். நீங்கள் நம்ப மாட்டீர்களா?
أَفَرَأَيْتُم مَّا تُمْنُونَ
﴾ 56:58 ﴿
﴾56:58﴿
58. நீங்கள் விந்தாகச் செலுத்துகிறீர்களே அதைச் சிந்தித்தீர்களா?
أَأَنتُمْ تَخْلُقُونَهُ أَمْ نَحْنُ الْخَالِقُونَ
﴾ 56:59 ﴿
﴾56:59﴿
59. அதை நீங்கள் படைத்தீர்களா? அல்லது நாம் படைத்தோமா?
نَحْنُ قَدَّرْنَا بَيْنَكُمُ الْمَوْتَ وَمَا نَحْنُ بِمَسْبُوقِينَ عَلَىٰ أَن نُّبَدِّلَ أَمْثَالَكُمْ وَنُنشِئَكُمْ فِي مَا لَا تَعْلَمُونَ
﴾ 56:60,61 ﴿
﴾56:60,61﴿
60, 61. உங்களுக்கிடையே மரணத்தை நாமே நிர்ணயித்தோம். உங்களைப் போன்றோரை நாம் மாற்றியமைக்கவும், நீங்கள் அறியாத வகையில் உங்களைப் படைக்கவும் நாம் இயலாதோர் அல்லர்.26
وَلَقَدْ عَلِمْتُمُ النَّشْأَةَ الْأُولَىٰ فَلَوْلَا تَذَكَّرُونَ
﴾ 56:62 ﴿
﴾56:62﴿
62. முதல் தடவை படைத்ததை நீங்கள் அறிந்துள்ளீர்கள்! படிப்பினை பெற மாட்டீர்களா?
أَفَرَأَيْتُم مَّا تَحْرُثُونَ
﴾ 56:63 ﴿
﴾56:63﴿
63. நீங்கள் பயிரிடுவதைச் சிந்தித்தீர்களா?
أَأَنتُمْ تَزْرَعُونَهُ أَمْ نَحْنُ الزَّارِعُونَ
﴾ 56:64 ﴿
﴾56:64﴿
64. நீங்கள் அதை முளைக்கச் செய்கிறீர்களா? அல்லது நாம் முளைக்கச் செய்கிறோமா?
لَوْ نَشَاءُ لَجَعَلْنَاهُ حُطَامًا فَظَلْتُمْ تَفَكَّهُونَ إِنَّا لَمُغْرَمُونَ بَلْ نَحْنُ مَحْرُومُونَ
﴾ 56:65,66,67 ﴿
﴾56:65,66,67﴿
65, 66, 67. நாம் நினைத்திருந்தால் அதைக் கூளமாக்கியிருப்போம். 'நாம் கடன்பட்டு விட்டோம்! இல்லை! நாம் தடுக்கப்பட்டு விட்டோம்' என்று (கூறி) அப்போது கவலையில் ஆழ்ந்து விடுவீர்கள்.26
أَفَرَأَيْتُمُ الْمَاءَ الَّذِي تَشْرَبُونَ
﴾ 56:68 ﴿
﴾56:68﴿
68. நீங்கள் அருந்தும் தண்ணீரைப் பற்றிச் சிந்தித்தீர்களா?
أَأَنتُمْ أَنزَلْتُمُوهُ مِنَ الْمُزْنِ أَمْ نَحْنُ الْمُنزِلُونَ
﴾ 56:69 ﴿
﴾56:69﴿
69. மேகத்திலிருந்து அதை நீங்கள் இறக்கினீர்களா? அல்லது நாம் இறக்கினோமா?
لَوْ نَشَاءُ جَعَلْنَاهُ أُجَاجًا فَلَوْلَا تَشْكُرُونَ
﴾ 56:70 ﴿
﴾56:70﴿
70. நாம் நினைத்திருந்தால் அதை உப்பு நீராக்கியிருப்போம். நீங்கள் நன்றி செலுத்த மாட்டீர்களா?
أَفَرَأَيْتُمُ النَّارَ الَّتِي تُورُونَ
﴾ 56:71 ﴿
﴾56:71﴿
71. நீங்கள் மூட்டுகிற நெருப்பைப் பற்றிச் சிந்தித்தீர்களா?
أَأَنتُمْ أَنشَأْتُمْ شَجَرَتَهَا أَمْ نَحْنُ الْمُنشِئُونَ
﴾ 56:72 ﴿
﴾56:72﴿
72. அதற்குரிய மரத்தை நீங்கள் உருவாக்கினீர்களா? அல்லது நாம் உருவாக்கினோமா?
نَحْنُ جَعَلْنَاهَا تَذْكِرَةً وَمَتَاعًا لِّلْمُقْوِينَ
﴾ 56:73 ﴿
﴾56:73﴿
73. இதனை ஒரு படிப்பினையாகவும், பயணிகளுக்குப் பலனளிப்பதாகவும் நாமே ஆக்கினோம்.
فَسَبِّحْ بِاسْمِ رَبِّكَ الْعَظِيمِ
﴾ 56:74 ﴿
﴾56:74﴿
74. எனவே மகத்தான உமது இறைவனின் பெயரைத் துதிப்பீராக!
۞ فَلَا أُقْسِمُ بِمَوَاقِعِ النُّجُومِ
﴾ 56:75 ﴿
﴾56:75﴿
75. நட்சத்திரங்கள் விழும் இடங்கள் மீது சத்தியம் செய்கிறேன்.
وَإِنَّهُ لَقَسَمٌ لَّوْ تَعْلَمُونَ عَظِيمٌ
﴾ 56:76 ﴿
﴾56:76﴿
76. நீங்கள் அறிந்தீர்களானால் இது மகத்தான சத்தியம்.
إِنَّهُ لَقُرْآنٌ كَرِيمٌ فِي كِتَابٍ مَّكْنُونٍ
﴾ 56:77,78 ﴿
﴾56:77,78﴿
77, 78. இது பாதுகாக்கப்பட்ட பதிவேட்டில்157 இருக்கும் மகத்துவமிக்க குர்ஆனாகும்.26
لَّا يَمَسُّهُ إِلَّا الْمُطَهَّرُونَ
﴾ 56:79 ﴿
﴾56:79﴿
79. தூய்மையான(வான)வர்களைத் தவிர (மற்றவர்கள்) அதைத் தீண்ட மாட்டார்கள்.291
تَنزِيلٌ مِّن رَّبِّ الْعَالَمِينَ
﴾ 56:80 ﴿
﴾56:80﴿
80. அகிலத்தின் இறைவனிடமிருந்து (இது) அருளப்பட்டது.
أَفَبِهَـٰذَا الْحَدِيثِ أَنتُم مُّدْهِنُونَ
﴾ 56:81 ﴿
﴾56:81﴿
81. இந்தச் செய்தியையா அலட்சியம் செய்கிறீர்கள்?
وَتَجْعَلُونَ رِزْقَكُمْ أَنَّكُمْ تُكَذِّبُونَ
﴾ 56:82 ﴿
﴾56:82﴿
82. உங்களுக்குச் செல்வம் வழங்கியிருப்பதற்கு (நன்றியாக) பொய்யெனக் கருதுகிறீர்களா?
فَلَوْلَا إِذَا بَلَغَتِ الْحُلْقُومَ وَأَنتُمْ حِينَئِذٍ تَنظُرُونَ
﴾ 56:83,84 ﴿
﴾56:83,84﴿
83, 84. அது (உயிர்) ஒருவனது தொண்டைக் குழியை அடையும்போது, அந்நேரத்தில் (அவனை) நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பீர்கள்.26
وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنكُمْ وَلَـٰكِن لَّا تُبْصِرُونَ
﴾ 56:85 ﴿
﴾56:85﴿
85. உங்களை விட நாமே அவனுக்கு மிகவும் அருகில் இருக்கிறோம்.49 எனினும் நீங்கள் பார்க்க மாட்டீர்கள்.
فَلَوْلَا إِن كُنتُمْ غَيْرَ مَدِينِينَ تَرْجِعُونَهَا إِن كُنتُمْ صَادِقِينَ
﴾ 56:86,87 ﴿
﴾56:86,87﴿
86, 87. நீங்கள் (இம்மார்க்கத்தை) கடைப்பிடிக்காது இருந்தால், அதில் நீங்கள் உண்மையாளர்களாகவும் இருந்தால் அதை (உயிரை) திரும்பக் கொண்டு வரலாமே!26
فَأَمَّا إِن كَانَ مِنَ الْمُقَرَّبِينَ فَرَوْحٌ وَرَيْحَانٌ وَجَنَّتُ نَعِيمٍ
﴾ 56:88,89 ﴿
﴾56:88,89﴿
88, 89. அவர் இறைவனுக்கு நெருக்கமானோரில் ஒருவராக இருந்தால், அவருக்கு உணவும், நறுமணமும், சுகமான சொர்க்கச் சோலையும் உள்ளன.26
وَأَمَّا إِن كَانَ مِنْ أَصْحَابِ الْيَمِينِ فَسَلَامٌ لَّكَ مِنْ أَصْحَابِ الْيَمِينِ
﴾ 56:90,91 ﴿
﴾56:90,91﴿
90, 91. அவர் வலப்புறத்தைச் சேர்ந்தோராக இருந்தால் வலப்புறத்தாரிடமிருந்து உமக்கு ஸலாம்!'159&26
وَأَمَّا إِن كَانَ مِنَ الْمُكَذِّبِينَ الضَّالِّينَ فَنُزُلٌ مِّنْ حَمِيمٍ وَتَصْلِيَةُ جَحِيمٍ
﴾ 56:92,93,94 ﴿
﴾56:92,93,94﴿
92, 93, 94. பொய்யெனக் கருதி வழிகெட்டவராக இருந்தால் கொதி நீரும், நரகில் எரிவதும் விருந்தாகும்.26
إِنَّ هَـٰذَا لَهُوَ حَقُّ الْيَقِينِ
﴾ 56:95 ﴿
﴾56:95﴿
95. இது உறுதியான உண்மை.
فَسَبِّحْ بِاسْمِ رَبِّكَ الْعَظِيمِ
﴾ 56:96 ﴿
﴾56:96﴿
96. எனவே மகத்தான உமது இறைவனின் பெயரைத் துதிப்பீராக!