அர்ரஹ்மான்
அளவற்ற அருளாளன் • 78 வசனங்கள்
الرَّحْمَـٰنُ عَلَّمَ الْقُرْآنَ
﴾ 55:1,2 ﴿
﴾55:1,2﴿
1, 2. அளவற்ற அருளாளன், குர்ஆனைக் கற்றுக் கொடுத்தான்.26
خَلَقَ الْإِنسَانَ
﴾ 55:3 ﴿
﴾55:3﴿
3. மனிதனைப் படைத்தான்.368
عَلَّمَهُ الْبَيَانَ
﴾ 55:4 ﴿
﴾55:4﴿
4. விளக்கும் திறனை அவனுக்குக் கற்றுக் கொடுத்தான்.
الشَّمْسُ وَالْقَمَرُ بِحُسْبَانٍ
﴾ 55:5 ﴿
﴾55:5﴿
5. சூரியனும், சந்திரனும் கணக்கின்படி இயங்குகின்றன.
وَالنَّجْمُ وَالشَّجَرُ يَسْجُدَانِ
﴾ 55:6 ﴿
﴾55:6﴿
6. மரங்களும், செடி கொடிகளும் (அவனுக்கு) பணிகின்றன.
وَالسَّمَاءَ رَفَعَهَا وَوَضَعَ الْمِيزَانَ أَلَّا تَطْغَوْا فِي الْمِيزَانِ وَأَقِيمُوا الْوَزْنَ بِالْقِسْطِ وَلَا تُخْسِرُوا الْمِيزَانَ
﴾ 55:7,8,9 ﴿
﴾55:7,8,9﴿
7, 8, 9. அவன் வானத்தை507 உயர்த்தினான். நிறுப்பதில் நீங்கள் வரம்பு மீறாதிருக்கவும், நியாயமாக எடையை நிலைநாட்டவும், எடையில் குறைத்து விடாதிருக்கவும் தராசை நிறுவினான்.26
وَالْأَرْضَ وَضَعَهَا لِلْأَنَامِ
﴾ 55:10 ﴿
﴾55:10﴿
10. பூமியை மனிதர்களுக்காக அமைத்தான்.
فِيهَا فَاكِهَةٌ وَالنَّخْلُ ذَاتُ الْأَكْمَامِ وَالْحَبُّ ذُو الْعَصْفِ وَالرَّيْحَانُ
﴾ 55:11,12 ﴿
﴾55:11,12﴿
11, 12. அதில் கனிகளும், பாளைகளுடைய பேரீச்சை மரங்களும், தோல் மூடிய தானியமும், மணம் வீசும் மலர்களும் உள்ளன.26
فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
﴾ 55:13 ﴿
﴾55:13﴿
13. உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?
خَلَقَ الْإِنسَانَ مِن صَلْصَالٍ كَالْفَخَّارِ
﴾ 55:14 ﴿
﴾55:14﴿
14. மண்பாண்டம் போல் சுட்ட களிமண்ணால்503&506 மனிதனைப் படைத்தான்.368
وَخَلَقَ الْجَانَّ مِن مَّارِجٍ مِّن نَّارٍ
﴾ 55:15 ﴿
﴾55:15﴿
15. தீப்பிழம்பிலிருந்து ஜின்னைப் படைத்தான்.
فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
﴾ 55:16 ﴿
﴾55:16﴿
16. உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?
رَبُّ الْمَشْرِقَيْنِ وَرَبُّ الْمَغْرِبَيْنِ
﴾ 55:17 ﴿
﴾55:17﴿
17. (அவன்) இரண்டு கிழக்குத் திசைகளுக்கும் இறைவன். இரண்டு மேற்குத் திசைகளுக்கும் இறைவன்.335
فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
﴾ 55:18 ﴿
﴾55:18﴿
18. உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?
مَرَجَ الْبَحْرَيْنِ يَلْتَقِيَانِ
﴾ 55:19 ﴿
﴾55:19﴿
19. இரண்டு கடல்கள் சந்திக்குமாறு அவன் ஏற்படுத்தியுள்ளான்.
بَيْنَهُمَا بَرْزَخٌ لَّا يَبْغِيَانِ
﴾ 55:20 ﴿
﴾55:20﴿
20. இரண்டுக்குமிடையே ஒரு திரை உள்ளது. ஒன்றையொன்று கடக்காது.305
فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
﴾ 55:21 ﴿
﴾55:21﴿
21. உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?
يَخْرُجُ مِنْهُمَا اللُّؤْلُؤُ وَالْمَرْجَانُ
﴾ 55:22 ﴿
﴾55:22﴿
22. அவ்விரண்டிலிருந்தும் முத்தும், பவளமும் வெளிப்படுகின்றன.
فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
﴾ 55:23 ﴿
﴾55:23﴿
23. உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?
وَلَهُ الْجَوَارِ الْمُنشَآتُ فِي الْبَحْرِ كَالْأَعْلَامِ
﴾ 55:24 ﴿
﴾55:24﴿
24. கடலில் மலைகளைப் போல் ஓங்கி உயர்ந்து ஓடும் கப்பல்கள் அவனுக்கே உரியன.
فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
﴾ 55:25 ﴿
﴾55:25﴿
25. உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?
كُلُّ مَنْ عَلَيْهَا فَانٍ
﴾ 55:26 ﴿
﴾55:26﴿
26. இதில் உள்ள அனைவரும் அழிபவர்கள்.225
وَيَبْقَىٰ وَجْهُ رَبِّكَ ذُو الْجَلَالِ وَالْإِكْرَامِ
﴾ 55:27 ﴿
﴾55:27﴿
27. மகத்துவமும், கண்ணியமும் மிக்க உமது இறைவனின் முகமே மிஞ்சும்.225
فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
﴾ 55:28 ﴿
﴾55:28﴿
28. உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?
يَسْأَلُهُ مَن فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۚ كُلَّ يَوْمٍ هُوَ فِي شَأْنٍ
﴾ 55:29 ﴿
﴾55:29﴿
29. வானங்களிலும்,507 பூமியிலும் இருப்போர் அவனிடம் யாசிக்கின்றனர். ஒவ்வொரு நாளும் அவன் அலுவலில் இருக்கிறான்.
فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
﴾ 55:30 ﴿
﴾55:30﴿
30. உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?
سَنَفْرُغُ لَكُمْ أَيُّهَ الثَّقَلَانِ
﴾ 55:31 ﴿
﴾55:31﴿
31. மதிப்பு மிக்க (மனித, ஜின் ஆகிய) இரு இனத்தவர்களே! உங்களுக்காக (விசாரிக்க) நேரம் ஒதுக்குவோம்.
فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
﴾ 55:32 ﴿
﴾55:32﴿
32. உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?
يَا مَعْشَرَ الْجِنِّ وَالْإِنسِ إِنِ اسْتَطَعْتُمْ أَن تَنفُذُوا مِنْ أَقْطَارِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ فَانفُذُوا ۚ لَا تَنفُذُونَ إِلَّا بِسُلْطَانٍ
﴾ 55:33 ﴿
﴾55:33﴿
33. மனித ஜின் கூட்டமே! வானங்கள்507 மற்றும் பூமியின் விளிம்புகளைக் கடந்து செல்ல நீங்கள் சக்தி பெற்றால் கடந்து செல்லுங்கள்! ஆற்றல் மூலம் தவிர நீங்கள் கடந்து செல்ல மாட்டீர்கள்.304
فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
﴾ 55:34 ﴿
﴾55:34﴿
34. உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?
يُرْسَلُ عَلَيْكُمَا شُوَاظٌ مِّن نَّارٍ وَنُحَاسٌ فَلَا تَنتَصِرَانِ
﴾ 55:35 ﴿
﴾55:35﴿
35. (யுகமுடிவு நாளில்) உங்களுக்கு நெருப்பின் ஜுவாலையும், புகையும் அனுப்பப்படும். அப்போது உதவி பெற மாட்டீர்கள்.
فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
﴾ 55:36 ﴿
﴾55:36﴿
36. உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?
فَإِذَا انشَقَّتِ السَّمَاءُ فَكَانَتْ وَرْدَةً كَالدِّهَانِ
﴾ 55:37 ﴿
﴾55:37﴿
37. வானம்507 பிளக்கும்போது எண்ணெய்யைப் போல் சிவந்ததாக ஆகும்.
فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
﴾ 55:38 ﴿
﴾55:38﴿
38. உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?
فَيَوْمَئِذٍ لَّا يُسْأَلُ عَن ذَنبِهِ إِنسٌ وَلَا جَانٌّ
﴾ 55:39 ﴿
﴾55:39﴿
39. அந்நாளில் எந்த மனிதனிடமும், ஜின்னிடமும் அவரது குற்றம் குறித்து விசாரிக்கத் தேவை இருக்காது.
فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
﴾ 55:40 ﴿
﴾55:40﴿
40. உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?
يُعْرَفُ الْمُجْرِمُونَ بِسِيمَاهُمْ فَيُؤْخَذُ بِالنَّوَاصِي وَالْأَقْدَامِ
﴾ 55:41 ﴿
﴾55:41﴿
41. குற்றவாளிகள் அவர்களின் அடையாளத்தால் அறியப்படுவார்கள். முன் நெற்றிகளும், பாதங்களும் பிடிக்கப்படும்.
فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
﴾ 55:42 ﴿
﴾55:42﴿
42. உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?
هَـٰذِهِ جَهَنَّمُ الَّتِي يُكَذِّبُ بِهَا الْمُجْرِمُونَ
﴾ 55:43 ﴿
﴾55:43﴿
43. குற்றவாளிகள் பொய்யெனக் கருதிக் கொண்டிருந்த நரகம் இதுவே.
يَطُوفُونَ بَيْنَهَا وَبَيْنَ حَمِيمٍ آنٍ
﴾ 55:44 ﴿
﴾55:44﴿
44. அதற்கும், கொதிநீருக்குமிடையே அவர்கள் உழல்வார்கள்.
فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
﴾ 55:45 ﴿
﴾55:45﴿
45. உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?
وَلِمَنْ خَافَ مَقَامَ رَبِّهِ جَنَّتَانِ
﴾ 55:46 ﴿
﴾55:46﴿
46. தமது இறைவன் முன் நிற்பதை அஞ்சியவருக்கு இரண்டு சொர்க்கச் சோலைகள் உள்ளன.
فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
﴾ 55:47 ﴿
﴾55:47﴿
47. உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?
ذَوَاتَا أَفْنَانٍ
﴾ 55:48 ﴿
﴾55:48﴿
48. அவை அடர்த்தியான கிளைகளைக் கொண்டவை.
فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
﴾ 55:49 ﴿
﴾55:49﴿
49. உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?
فِيهِمَا عَيْنَانِ تَجْرِيَانِ
﴾ 55:50 ﴿
﴾55:50﴿
50. அவ்விரண்டிலும் இரண்டு ஊற்றுகள் பீறிட்டு ஓடும்.
فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
﴾ 55:51 ﴿
﴾55:51﴿
51. உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?
فِيهِمَا مِن كُلِّ فَاكِهَةٍ زَوْجَانِ
﴾ 55:52 ﴿
﴾55:52﴿
52. ஒவ்வொரு கனியிலும் இரண்டு வகைகள் அவ்விரண்டிலும் உள்ளன.
فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
﴾ 55:53 ﴿
﴾55:53﴿
53. உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?
مُتَّكِئِينَ عَلَىٰ فُرُشٍ بَطَائِنُهَا مِنْ إِسْتَبْرَقٍ ۚ وَجَنَى الْجَنَّتَيْنِ دَانٍ
﴾ 55:54 ﴿
﴾55:54﴿
54. அவர்கள் விரிப்புகளில் சாய்ந்திருப்பார்கள். அதன் உட்புறம் இஸ்தப்ரக் எனும் பட்டுவகையைச் சேர்ந்தது. அவ்விரு சொர்க்கச் சோலைகளின் கனிகள் தாழ்ந்திருக்கும்.
فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
﴾ 55:55 ﴿
﴾55:55﴿
55. உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?
فِيهِنَّ قَاصِرَاتُ الطَّرْفِ لَمْ يَطْمِثْهُنَّ إِنسٌ قَبْلَهُمْ وَلَا جَانٌّ
﴾ 55:56 ﴿
﴾55:56﴿
56. அவற்றில் பார்வைகளைத் தாழ்த்திய கன்னியர் இருப்பார்கள்.8 இவர்களுக்கு முன்னர் அவர்களை எந்த மனிதனும், ஜின்னும் தீண்டியதில்லை.
فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
﴾ 55:57 ﴿
﴾55:57﴿
57. உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?
كَأَنَّهُنَّ الْيَاقُوتُ وَالْمَرْجَانُ
﴾ 55:58 ﴿
﴾55:58﴿
58. அவர்கள் வெண் முத்தையும், பவளத்தையும் போல் இருப்பார்கள்.
فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
﴾ 55:59 ﴿
﴾55:59﴿
59. உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?
هَلْ جَزَاءُ الْإِحْسَانِ إِلَّا الْإِحْسَانُ
﴾ 55:60 ﴿
﴾55:60﴿
60. நன்மைக்கு நன்மை தவிர வேறு கூலி உண்டா?
فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
﴾ 55:61 ﴿
﴾55:61﴿
61. உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?
وَمِن دُونِهِمَا جَنَّتَانِ
﴾ 55:62 ﴿
﴾55:62﴿
62. அவ்விரண்டும் அல்லாத வேறு இரு சோலைகளும் உள்ளன.
فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
﴾ 55:63 ﴿
﴾55:63﴿
63. உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?
مُدْهَامَّتَانِ
﴾ 55:64 ﴿
﴾55:64﴿
64. (அவை) கரும்பச்சை நிறமுடையவை.
فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
﴾ 55:65 ﴿
﴾55:65﴿
65. உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?
فِيهِمَا عَيْنَانِ نَضَّاخَتَانِ
﴾ 55:66 ﴿
﴾55:66﴿
66. அவ்விரண்டிலும் பொங்கி வழியும் இரண்டு ஊற்றுகள் உள்ளன.
فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
﴾ 55:67 ﴿
﴾55:67﴿
67. உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?
فِيهِمَا فَاكِهَةٌ وَنَخْلٌ وَرُمَّانٌ
﴾ 55:68 ﴿
﴾55:68﴿
68. அவ்விரண்டிலும் கனியும், பேரீச்சையும், மாதுளையும் உள்ளன.
فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
﴾ 55:69 ﴿
﴾55:69﴿
69. உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?
فِيهِنَّ خَيْرَاتٌ حِسَانٌ
﴾ 55:70 ﴿
﴾55:70﴿
70. அங்கேயும் சிறந்த அழகிகள் இருப்பார்கள்.
فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
﴾ 55:71 ﴿
﴾55:71﴿
71. உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?
حُورٌ مَّقْصُورَاتٌ فِي الْخِيَامِ
﴾ 55:72 ﴿
﴾55:72﴿
72. கூடாரங்களில் தங்க வைக்கப்பட்ட ஹூர்8 எனும் கன்னியராவர்.
فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
﴾ 55:73 ﴿
﴾55:73﴿
73. உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?
لَمْ يَطْمِثْهُنَّ إِنسٌ قَبْلَهُمْ وَلَا جَانٌّ
﴾ 55:74 ﴿
﴾55:74﴿
74. இவர்களுக்கு முன் அவர்களை எந்த மனிதனும், ஜின்னும் தீண்டியதில்லை.
فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
﴾ 55:75 ﴿
﴾55:75﴿
75. உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?
مُتَّكِئِينَ عَلَىٰ رَفْرَفٍ خُضْرٍ وَعَبْقَرِيٍّ حِسَانٍ
﴾ 55:76 ﴿
﴾55:76﴿
76. பச்சை நிறத்து இரத்தினக் கம்பளத்தின் மீதும், அழகிய சாய்மானத்தின் மீதும் சாய்ந்து கொண்டிருப்பார்கள்.
فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
﴾ 55:77 ﴿
﴾55:77﴿
77. உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?
تَبَارَكَ اسْمُ رَبِّكَ ذِي الْجَلَالِ وَالْإِكْرَامِ
﴾ 55:78 ﴿
﴾55:78﴿
78. கண்ணியமும், மகத்துவமும் மிக்க உமது இறைவனின் பெயர் பாக்கியம் மிக்கது.