அர்ரஹ்மான்‌

அளவற்ற அருளாளன் • 78 வசனங்கள்

الرَّحْمَـٰنُ  عَلَّمَ الْقُرْآنَ 

﴾ 55:1,2 ﴿
﴾55:1,2﴿

1, 2. அளவற்ற அருளாளன், குர்ஆனைக் கற்றுக் கொடுத்தான்.26

خَلَقَ الْإِنسَانَ 

﴾ 55:3 ﴿
﴾55:3﴿

3. மனிதனைப் படைத்தான்.368

عَلَّمَهُ الْبَيَانَ 

﴾ 55:4 ﴿
﴾55:4﴿

4. விளக்கும் திறனை அவனுக்குக் கற்றுக் கொடுத்தான்.

الشَّمْسُ وَالْقَمَرُ بِحُسْبَانٍ 

﴾ 55:5 ﴿
﴾55:5﴿

5. சூரியனும், சந்திரனும் கணக்கின்படி இயங்குகின்றன.

وَالنَّجْمُ وَالشَّجَرُ يَسْجُدَانِ 

﴾ 55:6 ﴿
﴾55:6﴿

6. மரங்களும், செடி கொடிகளும் (அவனுக்கு) பணிகின்றன.

وَالسَّمَاءَ رَفَعَهَا وَوَضَعَ الْمِيزَانَ  أَلَّا تَطْغَوْا فِي الْمِيزَانِ  وَأَقِيمُوا الْوَزْنَ بِالْقِسْطِ وَلَا تُخْسِرُوا الْمِيزَانَ 

﴾ 55:7,8,9 ﴿
﴾55:7,8,9﴿

7, 8, 9. அவன் வானத்தை507 உயர்த்தினான். நிறுப்பதில் நீங்கள் வரம்பு மீறாதிருக்கவும், நியாயமாக எடையை நிலைநாட்டவும், எடையில் குறைத்து விடாதிருக்கவும் தராசை நிறுவினான்.26

وَالْأَرْضَ وَضَعَهَا لِلْأَنَامِ 

﴾ 55:10 ﴿
﴾55:10﴿

10. பூமியை மனிதர்களுக்காக அமைத்தான்.

فِيهَا فَاكِهَةٌ وَالنَّخْلُ ذَاتُ الْأَكْمَامِ  وَالْحَبُّ ذُو الْعَصْفِ وَالرَّيْحَانُ 

﴾ 55:11,12 ﴿
﴾55:11,12﴿

11, 12. அதில் கனிகளும், பாளைகளுடைய பேரீச்சை மரங்களும், தோல் மூடிய தானியமும், மணம் வீசும் மலர்களும் உள்ளன.26

فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ 

﴾ 55:13 ﴿
﴾55:13﴿

13. உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?

خَلَقَ الْإِنسَانَ مِن صَلْصَالٍ كَالْفَخَّارِ 

﴾ 55:14 ﴿
﴾55:14﴿

14. மண்பாண்டம் போல் சுட்ட களிமண்ணால்503&506 மனிதனைப் படைத்தான்.368

وَخَلَقَ الْجَانَّ مِن مَّارِجٍ مِّن نَّارٍ 

﴾ 55:15 ﴿
﴾55:15﴿

15. தீப்பிழம்பிலிருந்து ஜின்னைப் படைத்தான்.

فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ 

﴾ 55:16 ﴿
﴾55:16﴿

16. உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?

رَبُّ الْمَشْرِقَيْنِ وَرَبُّ الْمَغْرِبَيْنِ 

﴾ 55:17 ﴿
﴾55:17﴿

17. (அவன்) இரண்டு கிழக்குத் திசைகளுக்கும் இறைவன். இரண்டு மேற்குத் திசைகளுக்கும் இறைவன்.335

فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ 

﴾ 55:18 ﴿
﴾55:18﴿

18. உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?

مَرَجَ الْبَحْرَيْنِ يَلْتَقِيَانِ 

﴾ 55:19 ﴿
﴾55:19﴿

19. இரண்டு கடல்கள் சந்திக்குமாறு அவன் ஏற்படுத்தியுள்ளான்.

بَيْنَهُمَا بَرْزَخٌ لَّا يَبْغِيَانِ 

﴾ 55:20 ﴿
﴾55:20﴿

20. இரண்டுக்குமிடையே ஒரு திரை உள்ளது. ஒன்றையொன்று கடக்காது.305

فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ 

﴾ 55:21 ﴿
﴾55:21﴿

21. உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?

يَخْرُجُ مِنْهُمَا اللُّؤْلُؤُ وَالْمَرْجَانُ 

﴾ 55:22 ﴿
﴾55:22﴿

22. அவ்விரண்டிலிருந்தும் முத்தும், பவளமும் வெளிப்படுகின்றன.

فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ 

﴾ 55:23 ﴿
﴾55:23﴿

23. உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?

وَلَهُ الْجَوَارِ الْمُنشَآتُ فِي الْبَحْرِ كَالْأَعْلَامِ 

﴾ 55:24 ﴿
﴾55:24﴿

24. கடலில் மலைகளைப் போல் ஓங்கி உயர்ந்து ஓடும் கப்பல்கள் அவனுக்கே உரியன.

فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ 

﴾ 55:25 ﴿
﴾55:25﴿

25. உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?

كُلُّ مَنْ عَلَيْهَا فَانٍ 

﴾ 55:26 ﴿
﴾55:26﴿

26. இதில் உள்ள அனைவரும் அழிபவர்கள்.225

وَيَبْقَىٰ وَجْهُ رَبِّكَ ذُو الْجَلَالِ وَالْإِكْرَامِ 

﴾ 55:27 ﴿
﴾55:27﴿

27. மகத்துவமும், கண்ணியமும் மிக்க உமது இறைவனின் முகமே மிஞ்சும்.225

فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ 

﴾ 55:28 ﴿
﴾55:28﴿

28. உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?

يَسْأَلُهُ مَن فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۚ كُلَّ يَوْمٍ هُوَ فِي شَأْنٍ 

﴾ 55:29 ﴿
﴾55:29﴿

29. வானங்களிலும்,507 பூமியிலும் இருப்போர் அவனிடம் யாசிக்கின்றனர். ஒவ்வொரு நாளும் அவன் அலுவலில் இருக்கிறான்.

فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ 

﴾ 55:30 ﴿
﴾55:30﴿

30. உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?

سَنَفْرُغُ لَكُمْ أَيُّهَ الثَّقَلَانِ 

﴾ 55:31 ﴿
﴾55:31﴿

31. மதிப்பு மிக்க (மனித, ஜின் ஆகிய) இரு இனத்தவர்களே! உங்களுக்காக (விசாரிக்க) நேரம் ஒதுக்குவோம்.

فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ 

﴾ 55:32 ﴿
﴾55:32﴿

32. உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?

يَا مَعْشَرَ الْجِنِّ وَالْإِنسِ إِنِ اسْتَطَعْتُمْ أَن تَنفُذُوا مِنْ أَقْطَارِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ فَانفُذُوا ۚ لَا تَنفُذُونَ إِلَّا بِسُلْطَانٍ 

﴾ 55:33 ﴿
﴾55:33﴿

33. மனித ஜின் கூட்டமே! வானங்கள்507 மற்றும் பூமியின் விளிம்புகளைக் கடந்து செல்ல நீங்கள் சக்தி பெற்றால் கடந்து செல்லுங்கள்! ஆற்றல் மூலம் தவிர நீங்கள் கடந்து செல்ல மாட்டீர்கள்.304

فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ 

﴾ 55:34 ﴿
﴾55:34﴿

34. உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?

يُرْسَلُ عَلَيْكُمَا شُوَاظٌ مِّن نَّارٍ وَنُحَاسٌ فَلَا تَنتَصِرَانِ 

﴾ 55:35 ﴿
﴾55:35﴿

35. (யுகமுடிவு நாளில்) உங்களுக்கு நெருப்பின் ஜுவாலையும், புகையும் அனுப்பப்படும். அப்போது உதவி பெற மாட்டீர்கள்.

فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ 

﴾ 55:36 ﴿
﴾55:36﴿

36. உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?

فَإِذَا انشَقَّتِ السَّمَاءُ فَكَانَتْ وَرْدَةً كَالدِّهَانِ 

﴾ 55:37 ﴿
﴾55:37﴿

37. வானம்507 பிளக்கும்போது எண்ணெய்யைப் போல் சிவந்ததாக ஆகும்.

فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ 

﴾ 55:38 ﴿
﴾55:38﴿

38. உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?

فَيَوْمَئِذٍ لَّا يُسْأَلُ عَن ذَنبِهِ إِنسٌ وَلَا جَانٌّ 

﴾ 55:39 ﴿
﴾55:39﴿

39. அந்நாளில் எந்த மனிதனிடமும், ஜின்னிடமும் அவரது குற்றம் குறித்து விசாரிக்கத் தேவை இருக்காது.

فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ 

﴾ 55:40 ﴿
﴾55:40﴿

40. உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?

يُعْرَفُ الْمُجْرِمُونَ بِسِيمَاهُمْ فَيُؤْخَذُ بِالنَّوَاصِي وَالْأَقْدَامِ 

﴾ 55:41 ﴿
﴾55:41﴿

41. குற்றவாளிகள் அவர்களின் அடையாளத்தால் அறியப்படுவார்கள். முன் நெற்றிகளும், பாதங்களும் பிடிக்கப்படும்.

فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ 

﴾ 55:42 ﴿
﴾55:42﴿

42. உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?

هَـٰذِهِ جَهَنَّمُ الَّتِي يُكَذِّبُ بِهَا الْمُجْرِمُونَ 

﴾ 55:43 ﴿
﴾55:43﴿

43. குற்றவாளிகள் பொய்யெனக் கருதிக் கொண்டிருந்த நரகம் இதுவே.

يَطُوفُونَ بَيْنَهَا وَبَيْنَ حَمِيمٍ آنٍ 

﴾ 55:44 ﴿
﴾55:44﴿

44. அதற்கும், கொதிநீருக்குமிடையே அவர்கள் உழல்வார்கள்.

فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ 

﴾ 55:45 ﴿
﴾55:45﴿

45. உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?

وَلِمَنْ خَافَ مَقَامَ رَبِّهِ جَنَّتَانِ 

﴾ 55:46 ﴿
﴾55:46﴿

46. தமது இறைவன் முன் நிற்பதை அஞ்சியவருக்கு இரண்டு சொர்க்கச் சோலைகள் உள்ளன.

فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ 

﴾ 55:47 ﴿
﴾55:47﴿

47. உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?

ذَوَاتَا أَفْنَانٍ 

﴾ 55:48 ﴿
﴾55:48﴿

48. அவை அடர்த்தியான கிளைகளைக் கொண்டவை.

فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ 

﴾ 55:49 ﴿
﴾55:49﴿

49. உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?

فِيهِمَا عَيْنَانِ تَجْرِيَانِ 

﴾ 55:50 ﴿
﴾55:50﴿

50. அவ்விரண்டிலும் இரண்டு ஊற்றுகள் பீறிட்டு ஓடும்.

فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ 

﴾ 55:51 ﴿
﴾55:51﴿

51. உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?

فِيهِمَا مِن كُلِّ فَاكِهَةٍ زَوْجَانِ 

﴾ 55:52 ﴿
﴾55:52﴿

52. ஒவ்வொரு கனியிலும் இரண்டு வகைகள் அவ்விரண்டிலும் உள்ளன.

فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ 

﴾ 55:53 ﴿
﴾55:53﴿

53. உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?

مُتَّكِئِينَ عَلَىٰ فُرُشٍ بَطَائِنُهَا مِنْ إِسْتَبْرَقٍ ۚ وَجَنَى الْجَنَّتَيْنِ دَانٍ 

﴾ 55:54 ﴿
﴾55:54﴿

54. அவர்கள் விரிப்புகளில் சாய்ந்திருப்பார்கள். அதன் உட்புறம் இஸ்தப்ரக் எனும் பட்டுவகையைச் சேர்ந்தது. அவ்விரு சொர்க்கச் சோலைகளின் கனிகள் தாழ்ந்திருக்கும்.

فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ 

﴾ 55:55 ﴿
﴾55:55﴿

55. உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?

فِيهِنَّ قَاصِرَاتُ الطَّرْفِ لَمْ يَطْمِثْهُنَّ إِنسٌ قَبْلَهُمْ وَلَا جَانٌّ 

﴾ 55:56 ﴿
﴾55:56﴿

56. அவற்றில் பார்வைகளைத் தாழ்த்திய கன்னியர் இருப்பார்கள்.8 இவர்களுக்கு முன்னர் அவர்களை எந்த மனிதனும், ஜின்னும் தீண்டியதில்லை.

فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ 

﴾ 55:57 ﴿
﴾55:57﴿

57. உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?

كَأَنَّهُنَّ الْيَاقُوتُ وَالْمَرْجَانُ 

﴾ 55:58 ﴿
﴾55:58﴿

58. அவர்கள் வெண் முத்தையும், பவளத்தையும் போல் இருப்பார்கள்.

فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ 

﴾ 55:59 ﴿
﴾55:59﴿

59. உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?

هَلْ جَزَاءُ الْإِحْسَانِ إِلَّا الْإِحْسَانُ 

﴾ 55:60 ﴿
﴾55:60﴿

60. நன்மைக்கு நன்மை தவிர வேறு கூலி உண்டா?

فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ 

﴾ 55:61 ﴿
﴾55:61﴿

61. உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?

وَمِن دُونِهِمَا جَنَّتَانِ 

﴾ 55:62 ﴿
﴾55:62﴿

62. அவ்விரண்டும் அல்லாத வேறு இரு சோலைகளும் உள்ளன.

فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ 

﴾ 55:63 ﴿
﴾55:63﴿

63. உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?

مُدْهَامَّتَانِ 

﴾ 55:64 ﴿
﴾55:64﴿

64. (அவை) கரும்பச்சை நிறமுடையவை.

فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ 

﴾ 55:65 ﴿
﴾55:65﴿

65. உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?

فِيهِمَا عَيْنَانِ نَضَّاخَتَانِ 

﴾ 55:66 ﴿
﴾55:66﴿

66. அவ்விரண்டிலும் பொங்கி வழியும் இரண்டு ஊற்றுகள் உள்ளன.

فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ 

﴾ 55:67 ﴿
﴾55:67﴿

67. உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?

فِيهِمَا فَاكِهَةٌ وَنَخْلٌ وَرُمَّانٌ 

﴾ 55:68 ﴿
﴾55:68﴿

68. அவ்விரண்டிலும் கனியும், பேரீச்சையும், மாதுளையும் உள்ளன.

فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ 

﴾ 55:69 ﴿
﴾55:69﴿

69. உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?

فِيهِنَّ خَيْرَاتٌ حِسَانٌ 

﴾ 55:70 ﴿
﴾55:70﴿

70. அங்கேயும் சிறந்த அழகிகள் இருப்பார்கள்.

فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ 

﴾ 55:71 ﴿
﴾55:71﴿

71. உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?

حُورٌ مَّقْصُورَاتٌ فِي الْخِيَامِ 

﴾ 55:72 ﴿
﴾55:72﴿

72. கூடாரங்களில் தங்க வைக்கப்பட்ட ஹூர்8 எனும் கன்னியராவர்.

فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ 

﴾ 55:73 ﴿
﴾55:73﴿

73. உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?

لَمْ يَطْمِثْهُنَّ إِنسٌ قَبْلَهُمْ وَلَا جَانٌّ 

﴾ 55:74 ﴿
﴾55:74﴿

74. இவர்களுக்கு முன் அவர்களை எந்த மனிதனும், ஜின்னும் தீண்டியதில்லை.

فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ 

﴾ 55:75 ﴿
﴾55:75﴿

75. உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?

مُتَّكِئِينَ عَلَىٰ رَفْرَفٍ خُضْرٍ وَعَبْقَرِيٍّ حِسَانٍ 

﴾ 55:76 ﴿
﴾55:76﴿

76. பச்சை நிறத்து இரத்தினக் கம்பளத்தின் மீதும், அழகிய சாய்மானத்தின் மீதும் சாய்ந்து கொண்டிருப்பார்கள்.

فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ 

﴾ 55:77 ﴿
﴾55:77﴿

77. உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?

تَبَارَكَ اسْمُ رَبِّكَ ذِي الْجَلَالِ وَالْإِكْرَامِ 

﴾ 55:78 ﴿
﴾55:78﴿

78. கண்ணியமும், மகத்துவமும் மிக்க உமது இறைவனின் பெயர் பாக்கியம் மிக்கது.

55

Settings