அல் ‌கமர்‌

சந்திரன் • 55 வசனங்கள்

اقْتَرَبَتِ السَّاعَةُ وَانشَقَّ الْقَمَرُ 

﴾ 54:1 ﴿
﴾54:1﴿

1. யுகமுடிவு நேரம்1 நெருங்கி விட்டது. சந்திரனும் பிளந்து விட்டது.422

وَإِن يَرَوْا آيَةً يُعْرِضُوا وَيَقُولُوا سِحْرٌ مُّسْتَمِرٌّ 

﴾ 54:2 ﴿
﴾54:2﴿

2. அவர்கள் சான்றைக் கண்டால் 'இது தொடர்ந்து நடக்கும் சூனியம்'285 எனக் கூறிப் புறக்கணிக்கின்றனர்.357

وَكَذَّبُوا وَاتَّبَعُوا أَهْوَاءَهُمْ ۚ وَكُلُّ أَمْرٍ مُّسْتَقِرٌّ 

﴾ 54:3 ﴿
﴾54:3﴿

3. பொய்யெனக் கருதி தமது மனோ இச்சைகளைப் பின்பற்றுகின்றனர். ஒவ்வொரு காரியமும் பதிவாகின்றது.

وَلَقَدْ جَاءَهُم مِّنَ الْأَنبَاءِ مَا فِيهِ مُزْدَجَرٌ  حِكْمَةٌ بَالِغَةٌ ۖ فَمَا تُغْنِ النُّذُرُ 

﴾ 54:4,5 ﴿
﴾54:4,5﴿

4, 5. அச்சுறுத்தல் அடங்கிய செய்திகளும், உயர்ந்த தரத்திலமைந்த ஞானமும் அவர்களுக்கு வந்து விட்டன. எச்சரிக்கைகள் (அவர்களுக்குப்) பயனளிக்கவில்லை.26

فَتَوَلَّ عَنْهُمْ ۘ يَوْمَ يَدْعُ الدَّاعِ إِلَىٰ شَيْءٍ نُّكُرٍ  خُشَّعًا أَبْصَارُهُمْ يَخْرُجُونَ مِنَ الْأَجْدَاثِ كَأَنَّهُمْ جَرَادٌ مُّنتَشِرٌ 

﴾ 54:6,7 ﴿
﴾54:6,7﴿

6, 7. எனவே அவர்களைப் புறக்கணிப்பீராக. (அவர்கள்) வெறுக்கும் காரியத்திற்கு அழைப்பவர் அழைக்கும் நாளில்1 அவர்களின் பார்வைகள் பணிந்திருக்கும். பரவிக் கிடக்கும் வெட்டுக்கிளிகளைப் போல் அவர்கள் மண்ணறைகளிலிருந்து வெளியாவார்கள்.26

مُّهْطِعِينَ إِلَى الدَّاعِ ۖ يَقُولُ الْكَافِرُونَ هَـٰذَا يَوْمٌ عَسِرٌ 

﴾ 54:8 ﴿
﴾54:8﴿

8. அழைப்பாளரை நோக்கி விரைவார்கள். 'இது கஷ்டமான நாள்1 தான்' என்று (ஏகஇறைவனை) மறுப்போர் கூறுவார்கள்.

۞ كَذَّبَتْ قَبْلَهُمْ قَوْمُ نُوحٍ فَكَذَّبُوا عَبْدَنَا وَقَالُوا مَجْنُونٌ وَازْدُجِرَ 

﴾ 54:9 ﴿
﴾54:9﴿

9. அவர்களுக்கு முன் நூஹுடைய சமுதாயம் பொய்யெனக் கருதியது. அவர்கள் நமது அடியாரைப் பொய்யரென்றனர். பைத்தியக்காரர் என்றனர். அவர் விரட்டப்பட்டார்.

فَدَعَا رَبَّهُ أَنِّي مَغْلُوبٌ فَانتَصِرْ 

﴾ 54:10 ﴿
﴾54:10﴿

10. 'நான் தோற்கடிக்கப்பட்டு விட்டேன்; எனவே நீ உதவி செய்வாயாக!' என்று அவர் தமது இறைவனிடம் பிரார்த்தித்தார்.

فَفَتَحْنَا أَبْوَابَ السَّمَاءِ بِمَاءٍ مُّنْهَمِرٍ 

﴾ 54:11 ﴿
﴾54:11﴿

11. அப்போது வானத்தின்507 வாசல்களைக் கொட்டும் நீரால் திறந்து விட்டோம்.

وَفَجَّرْنَا الْأَرْضَ عُيُونًا فَالْتَقَى الْمَاءُ عَلَىٰ أَمْرٍ قَدْ قُدِرَ 

﴾ 54:12 ﴿
﴾54:12﴿

12. பூமியில் ஊற்றுகளைப் பீறிட்டு ஓடச் செய்தோம். ஏற்கனவே திட்டமிட்ட படி தண்ணீர் இணைந்தது.

وَحَمَلْنَاهُ عَلَىٰ ذَاتِ أَلْوَاحٍ وَدُسُرٍ 

﴾ 54:13 ﴿
﴾54:13﴿

13. பலகைகளும், ஆணிகளும் உடைய (கப்பல்) ஒன்றில் அவரை ஏற்றினோம்.

تَجْرِي بِأَعْيُنِنَا جَزَاءً لِّمَن كَانَ كُفِرَ 

﴾ 54:14 ﴿
﴾54:14﴿

14. அது நமது கண்காணிப்பில் ஓடியது. இது (தன் சமுதாயத்தால்) மறுக்கப்பட்டவருக்கு (நூஹுக்கு) உரிய கூலி.

وَلَقَد تَّرَكْنَاهَا آيَةً فَهَلْ مِن مُّدَّكِرٍ 

﴾ 54:15 ﴿
﴾54:15﴿

15. அதைச் சான்றாக விட்டு வைத்தோம்.222 படிப்பினை பெறுவோர் உண்டா?

فَكَيْفَ كَانَ عَذَابِي وَنُذُرِ 

﴾ 54:16 ﴿
﴾54:16﴿

16. எனது வேதனையும், எச்சரிக்கைகளும் எவ்வாறு இருந்தன?

وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِن مُّدَّكِرٍ 

﴾ 54:17 ﴿
﴾54:17﴿

17. இக்குர்ஆனை விளங்குவதற்கு எளிதாக்கியுள்ளோம். படிப்பினை பெறுவோர் உண்டா?

كَذَّبَتْ عَادٌ فَكَيْفَ كَانَ عَذَابِي وَنُذُرِ 

﴾ 54:18 ﴿
﴾54:18﴿

18. ஆது சமுதாயத்தினரும் பொய்யெனக் கருதினர். எனது வேதனையும், எச்சரிக்கைகளும் எவ்வாறு இருந்தன?

إِنَّا أَرْسَلْنَا عَلَيْهِمْ رِيحًا صَرْصَرًا فِي يَوْمِ نَحْسٍ مُّسْتَمِرٍّ 

﴾ 54:19 ﴿
﴾54:19﴿

19. தொடர்ந்து துர்பாக்கியமாக இருந்த ஒரு நாளில்381 அவர்களுக்கு எதிராகக் கடும் புயல் காற்றை நாம் அனுப்பினோம்.

تَنزِعُ النَّاسَ كَأَنَّهُمْ أَعْجَازُ نَخْلٍ مُّنقَعِرٍ 

﴾ 54:20 ﴿
﴾54:20﴿

20. வேருடன் பிடுங்கி எறியப்பட்ட பேரீச்சை மரங்களைப் போல் மனிதர்களை அது பிடுங்கி எறிந்தது.

فَكَيْفَ كَانَ عَذَابِي وَنُذُرِ 

﴾ 54:21 ﴿
﴾54:21﴿

21. எனது வேதனையும், எச்சரிக்கைகளும் எவ்வாறு இருந்தன?

وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِن مُّدَّكِرٍ 

﴾ 54:22 ﴿
﴾54:22﴿

22. இக்குர்ஆனை விளங்குவதற்கு எளிதாக்கியுள்ளோம். படிப்பினை பெறுவோர் உண்டா?

كَذَّبَتْ ثَمُودُ بِالنُّذُرِ 

﴾ 54:23 ﴿
﴾54:23﴿

23. ஸமூது சமுதாயத்தினர் எச்சரிக்கைகளைப் பொய்யெனக் கருதினர்.

فَقَالُوا أَبَشَرًا مِّنَّا وَاحِدًا نَّتَّبِعُهُ إِنَّا إِذًا لَّفِي ضَلَالٍ وَسُعُرٍ 

﴾ 54:24 ﴿
﴾54:24﴿

24. நம்மைச் சேர்ந்த ஒரு மனிதரையா நாம் பின்பற்றுவோம்? அப்படிச் செய்தால் வழிகேட்டிலும், சிரமத்திலும் நாம் ஆகி விடுவோம்.

أَأُلْقِيَ الذِّكْرُ عَلَيْهِ مِن بَيْنِنَا بَلْ هُوَ كَذَّابٌ أَشِرٌ 

﴾ 54:25 ﴿
﴾54:25﴿

25. நம்மிடையே இவருக்கு மட்டும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளதா? இல்லை. இவர் கர்வம் கொண்ட பெரும் பொய்யர். (என்றனர்)

سَيَعْلَمُونَ غَدًا مَّنِ الْكَذَّابُ الْأَشِرُ 

﴾ 54:26 ﴿
﴾54:26﴿

26. யார் கர்வம் கொண்ட பெரும் பொய்யர் என்பதை நாளை அறிவார்கள்.

إِنَّا مُرْسِلُو النَّاقَةِ فِتْنَةً لَّهُمْ فَارْتَقِبْهُمْ وَاصْطَبِرْ 

﴾ 54:27 ﴿
﴾54:27﴿

27. அவர்களுக்குச் சோதனையாக484 ஒட்டகத்தை நாம் அனுப்புவோம். எனவே அவர்களைக் கண்காணிப்பீராக! பொறுமையாக இருப்பீராக!

وَنَبِّئْهُمْ أَنَّ الْمَاءَ قِسْمَةٌ بَيْنَهُمْ ۖ كُلُّ شِرْبٍ مُّحْتَضَرٌ 

﴾ 54:28 ﴿
﴾54:28﴿

28. 'தண்ணீர் அவர்களுக்கிடையே பங்கு போடப்பட வேண்டும்! ஒவ்வொரு (தண்ணீர்) குடிக்கும் உரிமையும் பேணப்பட வேண்டும் என்று அவர்களுக்கு அறிவிப்பீராக' (என்று ஸாலிஹ் நபிக்கு கூறினோம்).

فَنَادَوْا صَاحِبَهُمْ فَتَعَاطَىٰ فَعَقَرَ 

﴾ 54:29 ﴿
﴾54:29﴿

29. அவர்கள் தமது சகாவை அழைத்தனர். அவன் (ஒட்டகத்தைப்) பிடித்து கால் நரம்பைத் துண்டித்தான்.

فَكَيْفَ كَانَ عَذَابِي وَنُذُرِ 

﴾ 54:30 ﴿
﴾54:30﴿

30. எனது வேதனையும், எச்சரிக்கைகளும் எவ்வாறு இருந்தன?

إِنَّا أَرْسَلْنَا عَلَيْهِمْ صَيْحَةً وَاحِدَةً فَكَانُوا كَهَشِيمِ الْمُحْتَظِرِ 

﴾ 54:31 ﴿
﴾54:31﴿

31. அவர்களுக்கு எதிராக ஒரே ஒரு பெரும் சப்தத்தையே நாம் அனுப்பினோம். உடனே அவர்கள், தொழுவத்தின் கூளங்களைப் போல் ஆனார்கள்.

وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِن مُّدَّكِرٍ 

﴾ 54:32 ﴿
﴾54:32﴿

32. இக்குர்ஆனை விளங்குவதற்கு எளிதாக்கியுள்ளோம். படிப்பினை பெறுவோர் உண்டா?

كَذَّبَتْ قَوْمُ لُوطٍ بِالنُّذُرِ 

﴾ 54:33 ﴿
﴾54:33﴿

33. லூத்துடைய சமுதாயத்தினர் எச்சரிக்கைகளைப் பொய்யெனக் கருதினர்.

إِنَّا أَرْسَلْنَا عَلَيْهِمْ حَاصِبًا إِلَّا آلَ لُوطٍ ۖ نَّجَّيْنَاهُم بِسَحَرٍ 

﴾ 54:34 ﴿
﴾54:34﴿

34. அவர்களுக்கு எதிராகக் கல் மழையை நாம் அனுப்பினோம். லூத்துடைய குடும்பத்தினரைத் தவிர. அவர்களை இரவின் கடைசி நேரத்தில் காப்பாற்றினோம்.

نِّعْمَةً مِّنْ عِندِنَا ۚ كَذَٰلِكَ نَجْزِي مَن شَكَرَ 

﴾ 54:35 ﴿
﴾54:35﴿

35. இது நமது அருட்கொடை. இவ்வாறே நன்றி செலுத்துவோருக்குக் கூலி வழங்குவோம்.

وَلَقَدْ أَنذَرَهُم بَطْشَتَنَا فَتَمَارَوْا بِالنُّذُرِ 

﴾ 54:36 ﴿
﴾54:36﴿

36. நமது பிடியைப் பற்றி அவர்களை அவர் எச்சரித்தார். அவர்கள் எச்சரிக்கைகளைச் சந்தேகித்தனர்.

وَلَقَدْ رَاوَدُوهُ عَن ضَيْفِهِ فَطَمَسْنَا أَعْيُنَهُمْ فَذُوقُوا عَذَابِي وَنُذُرِ 

﴾ 54:37 ﴿
﴾54:37﴿

37. அவருடைய விருந்தினரைத் தீய காரியத்திற்கு அவர்கள் இழுத்தனர். உடனே அவர்களின் கண்களைக் குருடாக்கினோம். எனது வேதனையையும், எச்சரிக்கைகளையும் சுவையுங்கள்! (என்றோம்)

وَلَقَدْ صَبَّحَهُم بُكْرَةً عَذَابٌ مُّسْتَقِرٌّ 

﴾ 54:38 ﴿
﴾54:38﴿

38. அதிகாலை நேரத்தில் நிலையான வேதனை அவர்களைப் பிடித்தது.

فَذُوقُوا عَذَابِي وَنُذُرِ 

﴾ 54:39 ﴿
﴾54:39﴿

39. எனது வேதனையையும், எச்சரிக்கைகளையும் சுவையுங்கள் (என்று கூறப்பட்டது).

وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِن مُّدَّكِرٍ 

﴾ 54:40 ﴿
﴾54:40﴿

40. இக்குர்ஆனை விளங்குவதற்கு எளிதாக்கியுள்ளோம். படிப்பினை பெறுவோர் உண்டா?

وَلَقَدْ جَاءَ آلَ فِرْعَوْنَ النُّذُرُ 

﴾ 54:41 ﴿
﴾54:41﴿

41. ஃபிர்அவ்னுடைய கூட்டத்திடம் எச்சரிக்கைகள் வந்தன.

كَذَّبُوا بِآيَاتِنَا كُلِّهَا فَأَخَذْنَاهُمْ أَخْذَ عَزِيزٍ مُّقْتَدِرٍ 

﴾ 54:42 ﴿
﴾54:42﴿

42. அவர்கள் நமது அனைத்து சான்றுகளையும் பொய்யெனக் கருதினர். எனவே அவர்களை வலிமையுடைய மிகைத்தவனின் பிடியாகப் பிடித்தோம்.

أَكُفَّارُكُمْ خَيْرٌ مِّنْ أُولَـٰئِكُمْ أَمْ لَكُم بَرَاءَةٌ فِي الزُّبُرِ 

﴾ 54:43 ﴿
﴾54:43﴿

43. உங்களுடன் உள்ள (ஏகஇறைவனை) மறுப்போர் அவர்களை விட மேலானவர்களா? அல்லது பதிவேட்டில்157 உங்களுக்கு விதிவிலக்கு இருக்கிறதா?

أَمْ يَقُولُونَ نَحْنُ جَمِيعٌ مُّنتَصِرٌ 

﴾ 54:44 ﴿
﴾54:44﴿

44. 'நாங்கள் அனைவரும் (இறை) உதவி பெற்றோர்' என்று அவர்கள் கூறுகிறார்களா?

سَيُهْزَمُ الْجَمْعُ وَيُوَلُّونَ الدُّبُرَ 

﴾ 54:45 ﴿
﴾54:45﴿

45. இக்கூட்டம் தோற்கடிக்கப்படும். புறங்காட்டி ஓடுவார்கள்.306

بَلِ السَّاعَةُ مَوْعِدُهُمْ وَالسَّاعَةُ أَدْهَىٰ وَأَمَرُّ 

﴾ 54:46 ﴿
﴾54:46﴿

46. மேலும் யுகமுடிவு நேரம்1 தான் அவர்களுக்கு எச்சரிக்கப்பட்ட நேரம். யுகமுடிவு நேரம்1 மிகவும் அதிர்ச்சியளிப்பது; மிகவும் கசப்பானது.

إِنَّ الْمُجْرِمِينَ فِي ضَلَالٍ وَسُعُرٍ 

﴾ 54:47 ﴿
﴾54:47﴿

47. குற்றம் புரிந்தோர் வழிகேட்டிலும், மனக் குழப்பத்திலும் உள்ளனர்.

يَوْمَ يُسْحَبُونَ فِي النَّارِ عَلَىٰ وُجُوهِهِمْ ذُوقُوا مَسَّ سَقَرَ 

﴾ 54:48 ﴿
﴾54:48﴿

48. அவர்கள் நரகத்தில் முகம் குப்புறப் போடப்படும் நாளில் 'நரகத்தின் வேதனையைச் சுவையுங்கள்' (எனக் கூறப்படும்)

إِنَّا كُلَّ شَيْءٍ خَلَقْنَاهُ بِقَدَرٍ 

﴾ 54:49 ﴿
﴾54:49﴿

49. ஒவ்வொரு பொருளையும் கணக்கிட்டு நாம் படைத்துள்ளோம்.

وَمَا أَمْرُنَا إِلَّا وَاحِدَةٌ كَلَمْحٍ بِالْبَصَرِ 

﴾ 54:50 ﴿
﴾54:50﴿

50. நமது கட்டளை கண்மூடித் திறப்பது போல் ஒரே ஒரு கட்டளை தான்.

وَلَقَدْ أَهْلَكْنَا أَشْيَاعَكُمْ فَهَلْ مِن مُّدَّكِرٍ 

﴾ 54:51 ﴿
﴾54:51﴿

51. உங்களைப் போன்ற பலரை அழித்திருக்கிறோம். படிப்பினை பெறுவோர் உண்டா?

وَكُلُّ شَيْءٍ فَعَلُوهُ فِي الزُّبُرِ 

﴾ 54:52 ﴿
﴾54:52﴿

52. அவர்கள் செய்த ஒவ்வொரு காரியமும் ஏடுகளில் உள்ளது.

وَكُلُّ صَغِيرٍ وَكَبِيرٍ مُّسْتَطَرٌ 

﴾ 54:53 ﴿
﴾54:53﴿

53. ஒவ்வொரு சிறியதும், பெரியதும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

إِنَّ الْمُتَّقِينَ فِي جَنَّاتٍ وَنَهَرٍ 

﴾ 54:54 ﴿
﴾54:54﴿

54. (இறைவனை) அஞ்சியோர் சொர்க்கச் சோலைகளிலும், நதியிலும் இருப்பார்கள்.

فِي مَقْعَدِ صِدْقٍ عِندَ مَلِيكٍ مُّقْتَدِرٍ 

﴾ 54:55 ﴿
﴾54:55﴿

55. வலிமைமிக்க அரசனிடம் உண்மையான இருப்பிடத்தில் (அவர்கள் இருப்பார்கள்.)

54

Settings