அத்துகான்‌

அந்தப் புகை • 59 வசனங்கள்

حم 

﴾ 44:1 ﴿
﴾44:1﴿

1. ஹா, மீம்.2

وَالْكِتَابِ الْمُبِينِ 

﴾ 44:2 ﴿
﴾44:2﴿

2. தெளிவான இவ்வேதத்தின் மீது சத்தியமாக!379

إِنَّا أَنزَلْنَاهُ فِي لَيْلَةٍ مُّبَارَكَةٍ ۚ إِنَّا كُنَّا مُنذِرِينَ 

﴾ 44:3 ﴿
﴾44:3﴿

3. இதை பாக்கியம் நிறைந்த இரவில்341 நாம் அருளினோம். நாம் எச்சரிக்கை செய்வோராவோம்.

فِيهَا يُفْرَقُ كُلُّ أَمْرٍ حَكِيمٍ 

﴾ 44:4 ﴿
﴾44:4﴿

4. அதில் தான் உறுதியான காரியங்கள் யாவும் பிரிக்கப்படுகின்றன.

أَمْرًا مِّنْ عِندِنَا ۚ إِنَّا كُنَّا مُرْسِلِينَ  رَحْمَةً مِّن رَّبِّكَ ۚ إِنَّهُ هُوَ السَّمِيعُ الْعَلِيمُ 

﴾ 44:5,6 ﴿
﴾44:5,6﴿

5, 6. (இது) நமது கட்டளை. உமது இறைவனின் அருளாக நாம் தூதர்களை அனுப்புவோராக இருந்தோம். அவன் செவியுறுபவன்;488 அறிந்தவன்.26

رَبِّ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَا بَيْنَهُمَا ۖ إِن كُنتُم مُّوقِنِينَ 

﴾ 44:7 ﴿
﴾44:7﴿

7. அவன் வானங்கள்,507 பூமி மற்றும் அவற்றுக்கு இடையே உள்ளவற்றின் இறைவன். உறுதியாக நம்புவோராக நீங்கள் இருந்தால் (இதை அறிந்து கொள்ளுங்கள்!)

لَا إِلَـٰهَ إِلَّا هُوَ يُحْيِي وَيُمِيتُ ۖ رَبُّكُمْ وَرَبُّ آبَائِكُمُ الْأَوَّلِينَ 

﴾ 44:8 ﴿
﴾44:8﴿

8. அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. அவன் உயிர்ப்பிக்கிறான்; மரணிக்கச் செய்கிறான். (அவன்) உங்கள் இறைவனும், முந்தைய உங்கள் முன்னோர்களின் இறைவனுமாவான்.

بَلْ هُمْ فِي شَكٍّ يَلْعَبُونَ 

﴾ 44:9 ﴿
﴾44:9﴿

9. எனினும் அவர்கள் விளையாடிக் கொண்டு சந்தேகத்தில் உள்ளனர்.

فَارْتَقِبْ يَوْمَ تَأْتِي السَّمَاءُ بِدُخَانٍ مُّبِينٍ 

﴾ 44:10 ﴿
﴾44:10﴿

10. வானம்507 தெளிவான புகையைக் கொண்டு வரும் நாளை1 எதிர்பார்ப்பீராக!

يَغْشَى النَّاسَ ۖ هَـٰذَا عَذَابٌ أَلِيمٌ 

﴾ 44:11 ﴿
﴾44:11﴿

11. அது மக்களை மூடிக் கொள்ளும். இதுவே துன்புறுத்தும் வேதனை.

رَّبَّنَا اكْشِفْ عَنَّا الْعَذَابَ إِنَّا مُؤْمِنُونَ 

﴾ 44:12 ﴿
﴾44:12﴿

12. 'எங்கள் இறைவா! எங்களை விட்டும் வேதனையை நீக்குவாயாக! நாங்கள் நம்பிக்கை கொள்பவர்கள்' (என்று கூறுவார்கள்)

أَنَّىٰ لَهُمُ الذِّكْرَىٰ وَقَدْ جَاءَهُمْ رَسُولٌ مُّبِينٌ 

﴾ 44:13 ﴿
﴾44:13﴿

13. அறிவுரை அவர்களுக்கு எவ்வாறு (பயனளிக்கும்?) அவர்களிடம் தெளிவு படுத்தும் தூதர் வந்துள்ளார்.

ثُمَّ تَوَلَّوْا عَنْهُ وَقَالُوا مُعَلَّمٌ مَّجْنُونٌ 

﴾ 44:14 ﴿
﴾44:14﴿

14. பின்னர் அவரை அவர்கள் அலட்சியம் செய்தனர். 'பிறரால் கற்றுக் கொடுக்கப்பட்டவர்; பைத்தியக்காரர்'468 என்றும் கூறினர்.

إِنَّا كَاشِفُو الْعَذَابِ قَلِيلًا ۚ إِنَّكُمْ عَائِدُونَ 

﴾ 44:15 ﴿
﴾44:15﴿

15. வேதனையைச் சிறிது (நேரம்) நாம் நீக்குவோம். நீங்கள் (பழைய நிலைக்கு) திரும்புவீர்கள்.

يَوْمَ نَبْطِشُ الْبَطْشَةَ الْكُبْرَىٰ إِنَّا مُنتَقِمُونَ 

﴾ 44:16 ﴿
﴾44:16﴿

16. மிகக் கடுமையான பிடியாக நாம் பிடிக்கும் நாளில்1 தண்டிப்போம்.

۞ وَلَقَدْ فَتَنَّا قَبْلَهُمْ قَوْمَ فِرْعَوْنَ وَجَاءَهُمْ رَسُولٌ كَرِيمٌ 

﴾ 44:17 ﴿
﴾44:17﴿

17. அவர்களுக்கு முன் ஃபிர்அவ்னுடைய சமுதாயத்தைச் சோதித்துள்ளோம். அவர்களிடம் மரியாதைக்குரிய தூதர் வந்தார்.

أَنْ أَدُّوا إِلَيَّ عِبَادَ اللَّهِ ۖ إِنِّي لَكُمْ رَسُولٌ أَمِينٌ 

﴾ 44:18 ﴿
﴾44:18﴿

18. அல்லாஹ்வின் அடியார்களை என்னிடம் ஒப்படையுங்கள்!181 நான் உங்களுக்கு நம்பிக்கைக்குரிய தூதராவேன்.

وَأَن لَّا تَعْلُوا عَلَى اللَّهِ ۖ إِنِّي آتِيكُم بِسُلْطَانٍ مُّبِينٍ 

﴾ 44:19 ﴿
﴾44:19﴿

19. அல்லாஹ்வுக்கு எதிராக ஆணவம் கொள்ளாதீர்கள்! நான் உங்களிடம் தெளிவான சான்றைக் கொண்டு வருபவன்.

وَإِنِّي عُذْتُ بِرَبِّي وَرَبِّكُمْ أَن تَرْجُمُونِ 

﴾ 44:20 ﴿
﴾44:20﴿

20. என்னை நீங்கள் கல் எறிந்து கொல்வதை விட்டும் உங்களுக்கும் இறைவனாகிய என் இறைவனிடம் காவல் தேடுகிறேன்.

وَإِن لَّمْ تُؤْمِنُوا لِي فَاعْتَزِلُونِ 

﴾ 44:21 ﴿
﴾44:21﴿

21. 'என்னை நீங்கள் நம்பாவிட்டால் என்னை விட்டு விலகி விடுங்கள்!' (என்றார்.)

فَدَعَا رَبَّهُ أَنَّ هَـٰؤُلَاءِ قَوْمٌ مُّجْرِمُونَ 

﴾ 44:22 ﴿
﴾44:22﴿

22. 'அவர்கள் குற்றம் புரியும் கூட்டமாகவே உள்ளனர்' என்று தமது இறைவனிடம் அவர் பிரார்த்தித்தார்.

فَأَسْرِ بِعِبَادِي لَيْلًا إِنَّكُم مُّتَّبَعُونَ  وَاتْرُكِ الْبَحْرَ رَهْوًا ۖ إِنَّهُمْ جُندٌ مُّغْرَقُونَ 

﴾ 44:23,24 ﴿
﴾44:23,24﴿

23, 24. 'எனது அடியார்களை இரவில் அழைத்துச் செல்வீராக! நீங்கள் எதிரிகளால் பின்தொடரப்படுவீர்கள். பிளக்கப்பட்ட நிலையில் கடலை விட்டு விடுவீராக! அவர்கள் மூழ்கடிக்கப்படும் படையினராவர் (என்று இறைவன் கூறினான்.)'26

كَمْ تَرَكُوا مِن جَنَّاتٍ وَعُيُونٍ  وَزُرُوعٍ وَمَقَامٍ كَرِيمٍ  وَنَعْمَةٍ كَانُوا فِيهَا فَاكِهِينَ 

﴾ 44:25,26,27 ﴿
﴾44:25,26,27﴿

25, 26, 27. அவர்கள் எத்தனையோ சோலைகளையும், ஊற்றுகளையும், பயிர்களையும், மதிப்புமிக்க இடங்களையும், அவர்கள் அனுபவித்துக் கொண்டிருந்த சொகுசுகளையும் விட்டுச் சென்றனர்.26

كَذَٰلِكَ ۖ وَأَوْرَثْنَاهَا قَوْمًا آخَرِينَ 

﴾ 44:28 ﴿
﴾44:28﴿

28. இப்படித்தான்! வேறு சமுதாயத்தினரை அதற்கு உரிமையாளர்களாக ஆக்கினோம்.

فَمَا بَكَتْ عَلَيْهِمُ السَّمَاءُ وَالْأَرْضُ وَمَا كَانُوا مُنظَرِينَ 

﴾ 44:29 ﴿
﴾44:29﴿

29. அவர்களுக்காக வானமும்,507 பூமியும் அழவில்லை. அவர்கள் அவகாசம் கொடுக்கப்படவும் இல்லை.

وَلَقَدْ نَجَّيْنَا بَنِي إِسْرَائِيلَ مِنَ الْعَذَابِ الْمُهِينِ  مِن فِرْعَوْنَ ۚ إِنَّهُ كَانَ عَالِيًا مِّنَ الْمُسْرِفِينَ 

﴾ 44:30,31 ﴿
﴾44:30,31﴿

30, 31. இஸ்ராயீலின் மக்களை ஃபிர்அவ்னின் இழிவு தரும் வேதனையிலிருந்து காப்பாற்றினோம். அவன் ஆணவம் கொண்டு வரம்பு மீறியவனாக இருந்தான்.26

وَلَقَدِ اخْتَرْنَاهُمْ عَلَىٰ عِلْمٍ عَلَى الْعَالَمِينَ 

﴾ 44:32 ﴿
﴾44:32﴿

32. அகிலத்தாரை விட அவர்களை அறிந்தே தேர்வு செய்தோம்.16

وَآتَيْنَاهُم مِّنَ الْآيَاتِ مَا فِيهِ بَلَاءٌ مُّبِينٌ 

﴾ 44:33 ﴿
﴾44:33﴿

33. எதில் தெளிவான சோதனை484 உள்ளதோ அத்தகைய சான்றுகளை அவர்களுக்கு வழங்கினோம்.

إِنَّ هَـٰؤُلَاءِ لَيَقُولُونَ  إِنْ هِيَ إِلَّا مَوْتَتُنَا الْأُولَىٰ وَمَا نَحْنُ بِمُنشَرِينَ  فَأْتُوا بِآبَائِنَا إِن كُنتُمْ صَادِقِينَ 

﴾ 44:34,35,36 ﴿
﴾44:34,35,36﴿

34, 35, 36. 'முதல் தடவை மரணிப்பது தவிர வேறு இல்லை. நாங்கள் எழுப்பப்படுவோராக இல்லை; நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் எங்கள் முன்னோர்களைக் கொண்டு வாருங்கள்!' என்று அவர்கள் கேட்கின்றனர்.26

أَهُمْ خَيْرٌ أَمْ قَوْمُ تُبَّعٍ وَالَّذِينَ مِن قَبْلِهِمْ ۚ أَهْلَكْنَاهُمْ ۖ إِنَّهُمْ كَانُوا مُجْرِمِينَ 

﴾ 44:37 ﴿
﴾44:37﴿

37. இவர்கள் சிறந்தவர்களா? அல்லது துப்பவு என்ற சமுதாயத்தினரா? இவர்களுக்கு முன் சென்றவர்களை நாம் அழித்து விட்டோம். அவர்கள் குற்றம் புரியும் கூட்டமாகவே இருந்தனர்.

وَمَا خَلَقْنَا السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَمَا بَيْنَهُمَا لَاعِبِينَ 

﴾ 44:38 ﴿
﴾44:38﴿

38. வானங்களையும்,507 பூமியையும், அவற்றுக்கு இடைப்பட்டவற்றையும் விளையாட்டுக்காக நாம் படைக்கவில்லை.

مَا خَلَقْنَاهُمَا إِلَّا بِالْحَقِّ وَلَـٰكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُونَ 

﴾ 44:39 ﴿
﴾44:39﴿

39. தக்க காரணத்துடன் தவிர அவ்விரண்டையும் நாம் படைக்கவில்லை. எனினும் அவர்களில் பெரும்பாலோர் அறிய மாட்டார்கள்.

إِنَّ يَوْمَ الْفَصْلِ مِيقَاتُهُمْ أَجْمَعِينَ 

﴾ 44:40 ﴿
﴾44:40﴿

40. தீர்ப்பு நாள்1 தான் அவர்கள் அனைவருக்கும் (எச்சரிக்கப்பட்ட) நேரம்.

يَوْمَ لَا يُغْنِي مَوْلًى عَن مَّوْلًى شَيْئًا وَلَا هُمْ يُنصَرُونَ  إِلَّا مَن رَّحِمَ اللَّهُ ۚ إِنَّهُ هُوَ الْعَزِيزُ الرَّحِيمُ 

﴾ 44:41,42 ﴿
﴾44:41,42﴿

41, 42. அந்நாளில் எந்த நண்பனும் எந்த நண்பனுக்கும் எந்த ஒன்றையும் பயனளிக்க மாட்டான். அல்லாஹ் அருள் புரிந்தவரைத் தவிர அவர்கள் உதவி செய்யப்பட மாட்டார்கள். அவன் மிகைத்தவன்; நிகரற்ற அன்புடையோன்.26

إِنَّ شَجَرَتَ الزَّقُّومِ  طَعَامُ الْأَثِيمِ 

﴾ 44:43,44 ﴿
﴾44:43,44﴿

43, 44. ஸக்கூம் எனும் மரம் குற்றவாளியின் உணவாகும்.26

كَالْمُهْلِ يَغْلِي فِي الْبُطُونِ  كَغَلْيِ الْحَمِيمِ 

﴾ 44:45,46 ﴿
﴾44:45,46﴿

45, 46. உருக்கிய செம்பைப் போலும், சூடேற்றப்பட்ட நீர் கொதிப்பதைப் போலும் வயிறுகளில் அது கொதிக்கும்.26

خُذُوهُ فَاعْتِلُوهُ إِلَىٰ سَوَاءِ الْجَحِيمِ 

﴾ 44:47 ﴿
﴾44:47﴿

47. 'அவனைப் பிடியுங்கள்! அவனை நரகத்தின் மையத்திற்குக் கொண்டு வாருங்கள்!' (என வானவர்களிடம் கூறப்படும்.)

ثُمَّ صُبُّوا فَوْقَ رَأْسِهِ مِنْ عَذَابِ الْحَمِيمِ 

﴾ 44:48 ﴿
﴾44:48﴿

48. பின்னர் அவன் தலை மீது வதைக்கும் கொதி நீரை ஊற்றுங்கள்!

ذُقْ إِنَّكَ أَنتَ الْعَزِيزُ الْكَرِيمُ  إِنَّ هَـٰذَا مَا كُنتُم بِهِ تَمْتَرُونَ 

﴾ 44:49,50 ﴿
﴾44:49,50﴿

49, 50. சுவைத்துப்பார்! நீ மிகைத்தவன்; மரியாதைக்குரியவன். நீங்கள் சந்தேகம் கொண்டிருந்தது இதுவே (என்றும் கூறப்படும்.)

إِنَّ الْمُتَّقِينَ فِي مَقَامٍ أَمِينٍ  فِي جَنَّاتٍ وَعُيُونٍ 

﴾ 44:51,52 ﴿
﴾44:51,52﴿

51, 52. (இறைவனை) அஞ்சியோர் பாதுகாப்பான இடத்திலும், சொர்க்கச் சோலைகளிலும், நீர் ஊற்றுகளிலும் இருப்பார்கள்.26

يَلْبَسُونَ مِن سُندُسٍ وَإِسْتَبْرَقٍ مُّتَقَابِلِينَ 

﴾ 44:53 ﴿
﴾44:53﴿

53. ஸுன்துஸ், இஸ்தப்ரக் எனும் (இரு வகையான) பட்டாடை அணிந்து ஒருவரையொருவர் சந்திப்பார்கள்.

كَذَٰلِكَ وَزَوَّجْنَاهُم بِحُورٍ عِينٍ 

﴾ 44:54 ﴿
﴾44:54﴿

54. இப்படித்தான்! அவர்களுக்கு ஹூருல் ஈன்களைத் துணைகளாக்குவோம்.8

يَدْعُونَ فِيهَا بِكُلِّ فَاكِهَةٍ آمِنِينَ 

﴾ 44:55 ﴿
﴾44:55﴿

55. அச்சமின்றி ஒவ்வொரு கனியையும் அவர்கள் அங்கே கேட்பார்கள்.

لَا يَذُوقُونَ فِيهَا الْمَوْتَ إِلَّا الْمَوْتَةَ الْأُولَىٰ ۖ وَوَقَاهُمْ عَذَابَ الْجَحِيمِ 

﴾ 44:56 ﴿
﴾44:56﴿

56. முதலில் அடைந்த மரணத்தைத் தவிர அங்கே மரணத்தைச் சுவைக்க மாட்டார்கள். நரக வேதனையிலிருந்து அவர்களை அவன் காப்பான்.

فَضْلًا مِّن رَّبِّكَ ۚ ذَٰلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيمُ 

﴾ 44:57 ﴿
﴾44:57﴿

57. (இது) உமது இறைவனின் அருட்கொடை. இதுவே மகத்தான வெற்றி.

فَإِنَّمَا يَسَّرْنَاهُ بِلِسَانِكَ لَعَلَّهُمْ يَتَذَكَّرُونَ 

﴾ 44:58 ﴿
﴾44:58﴿

58. (முஹம்மதே!) அவர்கள் படிப்பினை பெறவே இதை உமது மொழியில்244 எளிதாக்கியுள்ளோம்.

فَارْتَقِبْ إِنَّهُم مُّرْتَقِبُونَ 

﴾ 44:59 ﴿
﴾44:59﴿

59. நீர் எதிர்பார்ப்பீராக! அவர்களும் எதிர்பார்ப்பவர்கள்.

44

Settings